மேலும் செய்திகள்
ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் மகள் திருமணத்திற்கு வந்த மறைந்த தந்தை
2 hour(s) ago | 1
கல்லாப்பெட்டி கூட்டணி; திமுகவை விளாசினார் விஜய்
4 hour(s) ago | 33
பாஜ நடத்தும் சதுரங்க வேட்டை; முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
5 hour(s) ago | 41
சென்னை: 10ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 10) காலை 9:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 22 வரையில் பொதுத்தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை பொதுத்தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். இதன் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து முடிந்தது. இதற்கிடையே மே 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.இந்த நிலையில் 10ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 10) காலை 9:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை, https://www.tnresults.nic.in/ என்ற இணையதளத்தில், தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
2 hour(s) ago | 1
4 hour(s) ago | 33
5 hour(s) ago | 41