மேலும் செய்திகள்
விழுந்து தொழிலாளி பலி
18-Jan-2025
ஓசூர்,:ஓசூர் அருகே, பால் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட இருவர் பலியாகினர்.கர்நாடகா மாநிலம், மைசூரில் நந்தினி என்ற பெயரில், அம்மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும், கர்நாடகா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் பால் பண்ணை உள்ளது. அங்கிருந்து, 30,000 லிட்டர் பாலை ஏற்றிக்கொண்டு, கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள மில்மா மில்க் எனப்படும், கேரள அரசுக்கு சொந்தமான, கேரள கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு லிமிடெட் பண்ணைக்கு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது.நீலகிரி மாவட்டம், கூடலுாரைச் சேர்ந்த ராஜேஷ்குமார், 32, லாரியை ஓட்டினார். அதே பகுதியைச் சேர்ந்த அருள், 27, கிளீனராக இருந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள கரடிகுட்டை கிராமம் அருகே நேற்று காலை, 6:15 மணிக்கு லாரி சென்றபோது, டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததால், சாலையோர பள்ளத்தில் இறங்கிய லாரி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், டேங்கரில் இருந்த, 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 30,000 லிட்டர் பால் முழுதும் சாலையில் கொட்டி வீணானது. ராஜேஷ்குமார், அருள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Jan-2025