உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "அரசு நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது": அன்புமணி காட்டம்

"அரசு நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது": அன்புமணி காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛அரசு நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது'' என பா.ம.க தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அன்புமணி கூறியிருப்பதாவது: கோயம்பேடு பஸ் நிலையத்தின் மொத்தப் பரப்பு 36 ஏக்கர், தனியார் பஸ் நிலையம் 6.8 ஏக்கர், கோயம்பேடு சந்தைப் பூங்கா 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் மொத்தம் 66.4 ஏக்கர் நிலம் கிடைக்கும். அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.13,200 கோடி ஆகும்.6 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறோம் என்ற பெயரில் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இது அபுதாபி நிறுவனம் தமிழகத்தில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள ரூ.3500 கோடி முதலீட்டைவிட 4 மடங்கு அதிகம் ஆகும். இவ்வளவு அதிக மதிப்புள்ள மக்களுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. மாறாக அந்த நிலத்தை பூங்காவாக மாற்றுவதே சரியாகும். சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 3இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

ராஜா
ஜன 30, 2024 06:34

மக்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சுத்தமாக பிடிக்கவில்லை. அது வசதியாகவும் இல்லை. தேவையில்லாமல் தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு எல்லாம் பொது நல வழக்கு போடுபவன் யார் என்று இப்போது தெரிகிறது. கோயம்பேடு தொடர்ந்து பேருந்து நிலையமாக செயல்பட வேண்டும். கிளாம்பக்கம் புறநகர் பேருந்து நிலையமாக தொடர வேண்டும். லூ லூ மால் வந்தால் நம்ம ஊரு வியாபாரிகள் லோ லோ என்று தெருவில் அலையவேண்டியது வரும். அப்புறம் விக்கற ராஜா, வணிகர்கள் பாடு.


chennai sivakumar
ஜன 29, 2024 22:32

பேசாமல் புதிய தலமை செயலகம் கட்டி விடலாம்.


Anantharaman Srinivasan
ஜன 29, 2024 22:09

திமுக உடன்பிறப்புக்களே தர்மபுரி சீட்டை ஒதுக்கி பிராயசித்தம் தேடிக்கொள்ளுங்கள். இல்லையேல் முரசொலி பஞ்சமி நில குப்பையும் கிளறுவாரு.


அருண் குமார்
ஜன 29, 2024 20:52

அப்போ தீய மு கவில் இருந்ததால் கட்டுமரம் காலத்தில் 5 ஆண்டுகளில் தி மு க காரர்கள் தொடங்கிய 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்தார்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 29, 2024 19:50

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும்போது இந்த நேர்மை, கடமையுணர்வு எங்கே போனது ????


Sivak
ஜன 29, 2024 19:09

பூங்கா என்பது மிக சிறந்த யோசனை ... வாகனங்களின் நச்சு புகையினால் காற்று மாசு பட்டு நாறி கிடக்கும் ஊருக்கு ஒரு விடிவு காலம் கிடைக்கும் .. அண்ணாமலையும் இதனை முன்மொழிய வேண்டும்....


K.Ramakrishnan
ஜன 29, 2024 18:38

என்ன ஒரு பொதுநல நோக்கு...


rajasekaran
ஜன 29, 2024 20:15

கவனிக்க வேண்டிய


raja
ஜன 29, 2024 18:20

தமிழ் நாட்டில் தமிழன் ஆச்சி செய்தால் ஒழிய இதுபோன்ற கோயம்பேடு என்ன தமிழ்நாட்டையே விற்று தின்றுவிடும் அந்த திராவிடம்.....


Sathyasekaren Sathyanarayanana
ஜன 30, 2024 00:13

தமிழனா என்று பார்ப்பதை நிறுத்தி ஒழுக்கமானவனா, ஊழல் செய்யாமல் ஆட்சி செய்யும் திறமை உள்ளவனே என்று பாருங்கள்,


Rpalnivelu
ஜன 29, 2024 17:08

கெளம்புங்க கெளம்புங்க. லுலூ மாலுக்கு கோயம்பேட்டை பஸ் ஸ்டாண்டை வித்தாச்சு.


Bala
ஜன 29, 2024 17:08

கூட்டணி இல்லை. சிறுத்தை சீறிடிச்சு. அதனால் இது போன்ற அப்பா டக்கர் பேச்சுக்கள் நிறைய பார்க்கலாம்.


மேலும் செய்திகள்