உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இம்முறை சிக்கியது 3.62 லட்சம் ரூபாய் மட்டும்; லஞ்சத்தில் திளைக்கும் சோதனைச்சாவடிகள்!

இம்முறை சிக்கியது 3.62 லட்சம் ரூபாய் மட்டும்; லஞ்சத்தில் திளைக்கும் சோதனைச்சாவடிகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை க.க.சாவடி சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.3.62 லட்சம் ரொக்கம் சிக்கியது.கோவை - பாலக்காடு சாலையில் க.க.சாவடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு சொந்தமான சோதனைச்சாவடி உள்ளது. இது கேரளாவிற்கு செல்லும் பிரதான சாலை என்பதால், வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும். இதனைப் பயன்படுத்தி, இங்கு பணியில் இருக்கும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், வாகன ஓட்டிகளிடம் தொடர்ந்து லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால், லஞ்ச ஒழிப்புத்துறையினரும் அடிக்கடி சோதனை நடத்துவது வழக்கம். அப்படி ரெய்டு நடத்தும் போதெல்லாம், கட்டு கட்டாக பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது. கடந்த அக்.,23ம் தேதி க.க.சாவடி சோதனை சாவடியில் நடத்திய சோதனையின் போது, கணக்கில் வராத ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் புர்ஹானுதீன், உதவியாளர் ஈஸ்வரன் மற்றும் அலுவலக உதவியாளர் தங்கராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வாகனங்களை நிறுத்தி அவர்களிடம் மாமூல் பணத்தை வசூலிக்க, தினமும் ரூ.1,000 சம்பளத்திற்கு ஒரு நபரை வேலைக்கு அமர்த்தியதும் விசாரணையில் தெரிய வந்தது. இது லஞ்ச ஒழிப்புத்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சோதனை நடந்து 2 மாதத்தில், க.க.சாவடி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை நடத்தியுள்ளனர். இதில், கணக்கில் வராத 3 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் சிக்கியது. மோட்டார் வாகன ஆய்வாளர் குமாரிடம் இருந்து 3.21 லட்சம் ரூபாயும், உதவியாளர் ரோஸ்லினிடம் இருந்து 38 ஆயிரம் ரூபாயும், அதுபோக தனியாக பெட்டியில் இருந்த 3 ஆயிரத்து 500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

சாண்டில்யன்
டிச 06, 2024 23:23

ஒருநாள் காசு போச்சு என்ன போச்சு மீதி நாளெல்லாம் கொட்டும்ல


நிக்கோல்தாம்சன்
டிச 06, 2024 20:20

இந்த மாதிரி அதிகாரிங்கல்லாம் என்ன மாடல் அரசில் இருக்காங்க முதல்வரே ?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 06, 2024 14:02

எந்த குற்றமா இருந்தாலும், எப்பேர்ப்பட்ட அவலம் இங்கே நடந்தாலும் விசாரிக்க சிபிஐ உள்ளே வரக்கூடாது ..... இது ச்சொரியான் மண் ....


சாண்டில்யன்
டிச 06, 2024 23:22

எந்த குற்றமா இருந்தாலும், எப்பேர்ப்பட்ட அவலம் இங்கே நடந்தாலும் CBI விசாரித்தா சுட்டுப்புடுவாங்க மதுரையில லக்ஷக்கணக்குல லஞ்சம் வாங்கி மாட்டினவன வெளியில எடுக்க முடியலையாம் இது கை அரிப்பெடுத்தவன் பாரதம்


Ramesh Sargam
டிச 06, 2024 12:38

வீடு, மனைகளை பதிவு செய்யும் அலுவலகத்திற்கு sub-registrar office பிறகு, அதிக லஞ்சம் வாங்கும் துறை இந்த போக்குவரத்து சோதனை சாவடிகள்.


hariharan
டிச 06, 2024 12:12

அனைத்து போக்குவரத்து சோதனை சாவடிகளிலும் மாமூல் இருக்கிறது. ஊழியர்கள் (பிச்சை) கேட்காமலேயே அனைத்து வண்டிகளும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று எல்லா ஓட்டுனர்களுக்கும் கிளீனர்களுக்கும் தெரியும். மாமூல் கொடுப்பதற்கு சில டெக்னிக்குகள் உண்டு.புளியரை சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை நிரந்தரமாக பணி அமர்த்த வேண்டும்.


Suresh Kesavan
டிச 06, 2024 19:25

அவர்களுக்கும் நிஜம் கொடுத்து பழக்கிவிடுவார்கள்


Suresh Kesavan
டிச 06, 2024 19:26

அவர்களுக்கும் லஞ்சம் கொடுத்து பழக்கி, கெடுத்து விடுவார்கள்


Barakat Ali
டிச 06, 2024 12:08

வாகனங்களை நிறுத்தி அவர்களிடம் மாமூல் பணத்தை வசூலிக்க, தினமும் ரூ.1,000 சம்பளத்திற்கு ஒரு நபரை வேலைக்கு அமர்த்தியதும் விசாரணையில் தெரிய வந்தது. அது நிச்சயம் மன்னர் வரை போகும் .....


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 06, 2024 14:31

இது போன்று நீங்கள் அரசு அலுவலகங்கள் சென்றால் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் தங்களுக்கென தனி உதவியாளரை பணிக்கு அமர்த்தி தங்கள் மேசைக்கு எதிரில் நாற்காலி கொடுத்து அமரவைத்து இருப்பார்கள். அவர்களுக்கு அந்த அதிகாரி தனியாக மாத சம்பளம் கொடுத்து விடுவார். சேல்ஸ் டேக்ஸ் அலுவலகம் சென்றால் இது சாதாரணம். கலெக்டர் அலுவலகத்தில் கூட உண்டு. Pollution Control Board உண்டு. இது சாதாரணம். உங்கள் மன்னர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சமீபத்தில் கல்லூரியில் கூட போலி பேராசிரியர் செய்திகளில் வந்ததே மறந்து விட்டீர்களா. அது எப்படி நீர்த்து போனதோ அதே போல் இதுவும் கடந்து போகும். மக்கள் முட்டாள்களாக இலவசங்களுக்கு அசைப்பட்டு இருக்கும் வரை. மேலும் ஒரு தகவல் இது போன்று உதவி பணிக்கு செல்பவர்கள் அந்த அதிகாரியிடம் நல்ல விதமாக நடந்து கொண்டால் சிறிது காலத்திற்கு பிறகு அந்த துறையில் ஏதேனும் பதவி ஒன்று காலியானால் அந்த ஒரு பதவிக்கு அரசின் அனுமதி பெற்று உதவிக்கு போனவரை அரசு அலுவலராக அதிகார பூர்வமாக ஆக்கி விடுவார்கள். இதற்காகவே சிலர் இது போன்று செல்வார்கள்.


அப்பாவி
டிச 06, 2024 12:06

லன்ஹ்சம் இவிங்களுக்கு எப்படி கிடைக்குது? எல்லாம் கள்ளத்தனமான வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தரும் பணம்தானே. 2200 கோடி கஞ்சம் குடுத்தவனை புதிய பிசினஸ்மேன் நு சொல்லலியா. இந்தியாவுலே லஞ்சம் குடுக்காம எதுவுமே நடக்காது.


Nandakumar Naidu.
டிச 06, 2024 12:02

அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். வழக்கு போட்டு இழுத்தடிப்பு கூடாது. வழக்கு போட்டு காலம் தாழ்த்தும் சமயத்தில் மீண்டும் லஞ்சம் வாங்கி அந்த பணத்தில் வழக்கை எதிர்கொள்ளுவார்கள்.


Barakat Ali
டிச 06, 2024 12:00

எந்தக் கொம்பனும் .........


Nallavan
டிச 06, 2024 11:55

அரசு வேலை பார்ப்பவனுக்கு வளமான வாழ்வு :சம்பளம், கிம்பளம் அதிக வருமானம், வேலை இல்லாதவனுக்கு, தெண்டசோறு, வறுமை, அவமதிப்பு, அரசின் இந்த உயர்வு தாழ்வு எப்போது தீரும், லஞ்சம் ஊழல் எப்போது ஒழியும்


சமீபத்திய செய்தி