உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தென்சென்னையில் மும்முனையில் முட்டிமோதும் ‛‛முத்தமிழ்

தென்சென்னையில் மும்முனையில் முட்டிமோதும் ‛‛முத்தமிழ்

சென்னை: தென் சென்னை லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன், பா.ஜ., சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ச்செல்வி என மூவரும் களமிறங்குகின்றனர்.தேர்தல் என வந்துவிட்டாலே, வாக்காளர்களை குழப்புவதற்காக ஒரே பெயரில் சுயேட்சை வேட்பாளர்களை களமிறக்குவது பழைய 'டெக்னிக்'. அதாவது, ராமசாமி என்ற வேட்பாளர் நின்றுவிட்டால், மற்ற கட்சிகள் சார்பிலோ அல்லது சுயேட்சையாகவோ அதே பெயருடன் கூடிய நபர்களை அதே தொகுதியில் களமிறக்குவார்கள். இதனால் பெயரை பார்த்து ஓட்டளிக்கையில் குழப்பம் ஏற்படுத்தி ஓட்டை பிரிக்க பயன்படுத்தும் யுக்தி.இதெல்லாம் முன்பு நடந்தாலும், தற்போது நடைபெற உள்ள லோக்சபா தேர்தலிலும் இதேபோன்ற பாணியை கையில் எடுத்துள்ளனர் கட்சிகள். சில நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர்கள் பட்டியலில் தென் சென்னை லோக்சபா தொகுதியில் தற்போது எம்.பி.,யாக இருக்கும் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது.இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் முன்னாள் மாநில தலைவரும், தெலுங்கானா, புதுச்சேரியின் முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் தென் சென்னை தொகுதியில் தமிழ்ச்செல்வி என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரே தொகுதியில் 'தமிழ்' பெயரை கொண்ட மூன்று பேர் போட்டியிடுவது ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
மார் 25, 2024 18:43

மொழியின் பெயரில் அந்த மொழி பேசுபவர்கள் பெயர் வைப்பது அதுவும் ஆண் பெண் இருபாலாரும் என்பது தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள பெருமை.


R Kay
மார் 25, 2024 15:30

Candidates who havent cared a wee bit for the past years and who shunned their constituencies, will sure suffer a huge defeat


Vaduvooraan
மார் 25, 2024 14:49

ஹூம் இதனை வருசமா தேர்தல் நடந்த பிறகும் மக்களுக்கு ஒரே மாதிரி பெயருள்ள வேட்பாளர்கள் ஒரே தொகுதியில் நின்றால் குழப்பம் வரும் என்றால் இது என்ன மாதிரி விவரமில்லாத ஜனநாயகம்? வெட்கக்கேடு


Suppan
மார் 25, 2024 14:01

Nobody will get confused in EVM, the first candidates name and symbol ie, BJP in this case will appear first Then regional party ie, DMK and then unrecognized party ie, Naam Tamizhar


ஆரூர் ரங்
மார் 25, 2024 12:43

இங்கு இருப்பதிலேயே சிறந்த வியாபாரம் தமிழை வைத்துப் பிழைப்பது.


Anbuselvan
மார் 25, 2024 12:38

old techniques are not valid at all in this digital era and that too in metropolitan constitutency like South Chennai


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 25, 2024 12:37

ஜடி யுகத்திற்கு பின்னர் மக்கள் மிகவும் தெளிவாகி விட்டனர் முன்னர் போல் இல்லை முன்பெல்லாம் வாக்கு சேகரிக்கும் போது வாக்கு சீட்டு மாதிரியை ஒவ்வொரு வீடாக கொண்டு வந்து மேலிருந்து வாக முத்திரை குத்தவும் அல்லது கீழிருந்து மேலாக தில் முத்திரை குத்தவும் என்பார்கள் இப்போது எல்லாம் மக்கள் மிகவும் தெளிவாகி விட்டனர் ஒரே பெயரில் பல வாக்காளர் இருந்தாலும் தங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கு தான் வாக்களிப்பார்கள்


மேலும் செய்திகள்