உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீரில் மூழ்கி சிறுமிகள் 4 பேர் பலி: குளிக்க சென்ற இடத்தில் சோகம்!

நீரில் மூழ்கி சிறுமிகள் 4 பேர் பலி: குளிக்க சென்ற இடத்தில் சோகம்!

ராமநாதபுரம்: இரு வேறு சம்பவங்களில், மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நீரில் மூழ்கி 4 சிறுமிகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பெரியகீரமங்கலத்தில் ரோஷ்னி (9), பிரசன்யா (11) ஆகிய இரண்டு சிறுமிகள் ஊரணியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறுமிகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் உடல்களை மீட்பு படையினர், உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்டனர். சிறுமிகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேபோல் மதுரை அப்பன் திருப்பதி அருகே கண்மாயில் குளித்த பிரியா (11), அன்னலட்சுமி (12) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குளிக்க சென்ற இடத்தில் சிறுமிகள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Subramanian
மே 31, 2025 08:05

சரியான கருத்து. இறந்த குழந்தைகளுக்கு ஆழந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


GMM
மே 30, 2025 20:16

அனுதாபங்கள். சிறுவர், சிறுமியருக்கு நீச்சல் பயிற்சி கட்டாயம் தேவை. இதற்கு தமிழக மாநிலம், உள்ளாட்சி அமைப்புகள் வசதி செய்ய வேண்டும். முன்பு பெற்றோர் உதவியுடன் நீச்சல், சைக்கிள் தெரிந்தவர்கள் அதிகம். தற்போது பிள்ளைகள் கவனம் சினிமா, டிவி போன்ற கேளிக்கை. சிறுவர்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளவை பற்றி அரசு தேர்வு செய்து பயிற்சி கொடுக்க வேண்டும். கட்சிகள் வாக்காளர்கள் பற்றி சிந்திக்கும் முறை மாற, தேர்தல் சீர் திருத்தம் உதவும்.


Nada Rajan
மே 30, 2025 19:54

ஆழ்ந்த இரங்கல்


சமீபத்திய செய்தி