பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜெயச்சந்திரன் என்பவரது குழந்தை கிருத்திஷா என்ற சிறுமி, பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது, பேருந்து மோதியதில் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.