உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு கையகப்படுத்திய 468 ஏக்கர் நிலம்; உரிமையாளர்களிடமே திரும்ப ஒப்படைப்பு!

அரசு கையகப்படுத்திய 468 ஏக்கர் நிலம்; உரிமையாளர்களிடமே திரும்ப ஒப்படைப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் 40 ஆண்டுக்கு முன் அரசால் கையகப்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்படாத 468 ஏக்கர் நிலம், இன்று (நவ.,05) மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.தமிழகத்தில் பல்வேறு அரசு திட்டங்களுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள், பல்லாண்டு காலம் பயன்படுத்தப்படாமல் இருப்பதை காண முடியும். அவ்வாறு பயன்படுத்தப்படாத நிலங்கள், அதன் உரிமையாளர்களுக்கே திரும்பவும் வழங்கப்படுகின்றன. அதன்படி கோவை பீளமேட்டில் இன்று நடந்த நிகழ்ச்சியில், 468 ஏக்கர் நிலம், அதன் உரிமைதாரர்களான 5338 பேருக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டது.இந்த நிலம் அனைத்தும், 1981 முதல் 1995ம் ஆண்டு வரை, வீட்டு வசதி திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்டவை. கோவை வீட்டு வசதிப்பிரிவு சார்பில் கையகப்படுத்தப்பட்ட இந்த நிலங்கள், கணபதி, விளாங்குறிச்சி, வீரகேரளம், தெலுங்குபாளையம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, குமாரபாளையம், காளப்பட்டி, உப்பிலிபாளையம் என 9 கிராமங்களில் அமைந்துள்ளன. நில உரிமையாளர்களுக்கான விடுவிப்பு ஆணைகளையும், தடையின்மை சான்றுகளையும் முதல்வர் ஸ்டாலின் இன்று நவ.,5ல் வழங்கினார். விழாவில், தமிழக வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துச்சாமி, வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் சமீரன், செயலாளர் காகர்லா உஷா, சேர்மன் பூச்சி முருகன், முதன்மை பொறியாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், திரும்பக் கிடைத்திருப்பது அதன் உரிமையாளர்கள் மத்தியில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Veeraputhiran Balasubramoniam
நவ 07, 2024 14:58

இது ஒவ்வொரு முறை திராவிட மடெல் ஆட்சிக்கு வரும் போதும் வீட்டு வசதி வாரியம் சொத்துக்கள் மாஃபியாக்களுக்கு கொடுக்கப்படும் ஒரு விங்ஞான மாடெல் ஊழல்..


Selvanesan
நவ 06, 2024 18:38

மிக்க நன்று கடவுளின் கருணை


KAMARAJ M
நவ 05, 2024 20:37

யானை வாயிகுள்ள போன கரும்பு திரும்ப கிடைச்சிருக்கு லக்


ManiK
நவ 05, 2024 20:10

நீங்கல்லாம் ரொம்ப நல்லவங்க... ம்ம்ம் நம்பிட்டோம் டா...


Sundaresan S
நவ 05, 2024 18:38

பின்னாளில் மொத்தத்தையும் சுருட்ட சுலபமாயிடிச்சி


என்றும் இந்தியன்
நவ 05, 2024 17:02

எல்லா தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி, மாநில அரசு கையகப்படுத்த முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இது தெரிந்தவுடன் அவசர அவசரமாக இந்த முயற்சி???என்ன திராவிட அறிவிலி மடியல் அரசே சரிதானே


narayanansagmailcom
நவ 05, 2024 16:30

அந்த உரிமையாளர்கள் எல்லாம் உங்க சொந்தக்காரர்கள் தானே. உங்க ஒப்படைப்பு எப்படி என்று எல்லோருக்கும் theriyum


பாமரன்
நவ 05, 2024 16:09

இதுக்கெல்லாம் ஒரு விழாவா... ரெம்ம்ம்ம்ம்ப காமெடியா போயிக்கினு இருக்கு.... அறுபது ஆண்டுகள் கழித்து எனக்கு துப்பில்லை...நீயே எதாவது பண்ணிக்கோன்னு சொல்றதுக்கு கூச்சமே இல்லாமல் மேடை போட்டு கொண்டாட தமிழக அரசியல் வியாதிகளால் மட்டுமே முடியும்


Veeraputhiran Balasubramoniam
நவ 09, 2024 12:24

60 ஆண்டு கடந்தும் உண்மையில் உரிமையாளருக்கு போவது போல் போக்கு காட்டி மாபியா கைக்கு பின் பக்க வாசல் வழியாக் செண்று அடைகிறது, என்பது தான் கடந்த கால வரலாறு இது தானே கால காலமாக நம்ம வழக்கம்... வடிவேலு பாணியில்


Vidhya, Coimbatore
நவ 05, 2024 15:36

What ever dmk does good or bad, bjp fans in dinamalar will comment against dmk. They are yet not knowing the top brass of bjp and dmk and close with each other in the back yard. Pity for these die hard bjp fans commenting here


Sankar Ramu
நவ 05, 2024 18:57

இதுக்கெல்லாம் விழாவா? கலெக்டர் செய்ய கூடிய சாதாரண வேலைய முதல்வர் பெரிய சாதனை போல விழா?


Ganapathy
நவ 05, 2024 19:24

உன் திருட்டுத்திராவிடியா தொளபதி தெலுங்கனுக்கு வேலைவெட்டி எதுவுமில்லாதை வெளிக்காட்டினால் அவமானம். எனவே இதைப்போன்ற கேனத்தமாக தனது பதவியின் மாண்பை குலைக்கும் வேலையை செவ்வனச் செய்கிறார்.


Amar Akbar Antony
நவ 05, 2024 15:35

இங்க எல்லோரும் ஒரு விஷயத்தை கவனிக்க அதாவது 1981 முதல் 1995 வரை ஆக "அ தி மு க வின் ஆட்சி" காலங்கள் அவை. மற்ற காலங்களில் பிடுங்கப்பட்ட இடத்திற்கு மூச் நாங்க யாரு என்ன??


Subramanian Marappan
நவ 05, 2024 17:40

1989-1991 தமிழ்நாட்டின் ஆட்சி கட்டிலில் யார் இருந்தார் என்று தெரியவில்லை யா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை