மேலும் செய்திகள்
தங்க முலாம் பூசி நகை மோசடி: நான்கு பேர் கைது
19-Nov-2024
மதுரை : மதுரையில் நகை புரோக்கரை கடத்தி 2 கிலோ தங்கத்துடன் தப்பிய 5 பேரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 60. நகை புரோக்கரான இவர், அடிக்கடி சென்னை சென்று நகைகளை வாங்கி மதுரை உள்ளிட்ட இடங்களில் கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து ரயில் மூலம் அதிகாலை 2 கிலோ தங்கத்துடன் மதுரை வந்த பாலசுப்பிரமணியை, ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே 5 பேர் காரில் கடத்தினர். மேலுார் பகுதிக்கு அழைத்துச்சென்று மிரட்டி 2 கிலோ தங்கத்தை பறித்துக்கொண்டு அவரை இறக்கிவிட்டு தப்பினர்.இதுகுறித்து அவர் திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். கார் பதிவெண் அடிப்படையில் விசாரணை துவங்கியது. முதற்கட்ட விசாரணையில் சென்னை நகை புரோக்கர் இதில் 'மூளையாக' செயல்பட்டது தெரிந்தது. போலீசில் சிக்கிய அவர் உட்பட கூட்டாளிகள் 5 பேரிடம் விசாரணை நடக்கிறது.
19-Nov-2024