தொழிலாளருக்கு ரூ.5,000 தர வலியுறுத்தல்
சென்னை : பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அமைப்புசாரா தொழிலாளர்களும், அவர்களுக்கும் கீழாக உள்ள தொழிலாளர்களும், கையில் பணம் இல்லாமல் தடுமாறுகின்றனர். அவர்கள் தீபாவளிக்கு புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவது சாத்தியமற்றது. தீபாவளியை ஒட்டி புதுச்சேரியில், கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா 5,000; அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதுபோல, தமிழகத்திலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் வழியாக, 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.