உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 56 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரை இலங்கையில் பறிமுதல்

56 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரை இலங்கையில் பறிமுதல்

ராமேஸ்வரம்: இலங்கை மன்னாரில் படகில் இருந்த 56 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகளை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். இலங்கை மன்னார் கீரி கடற்கரையில் ஒதுங்கி கிடந்த சந்தேகத்துக்குரிய பைபர் கிளாஸ் படகை மன்னார் கடற்படை வீரர்கள் சோதனையிட்டனர். இதில் 14 பார்சலில் 56 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த இலங்கை வீரர்கள் கடத்தல்காரர் ஒருவரையும் கைது செய்து மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த மாத்திரைகளை ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதியில் இருந்து கடத்தல்காரர்கள் கள்ளத்தனமாக நாட்டுப்படகில் கடத்தி வந்து இலங்கை கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்து விட்டு திரும்பி உள்ளனர். இதனை கடத்திச் சென்ற ராமநாதபுரம் மாவட்ட கடத்தல்காரர்கள் யார் என மத்திய, மாநில உளவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

duruvasar
அக் 09, 2025 10:04

முன்னாள் அயலகத்துறை பொறுப்பாளர் பெயல்லில் தானே யிருக்கிறார் ?


Mani . V
அக் 09, 2025 05:36

சே, சே, அந்தக் குடும்பமாக இருக்காது. அவர்களின் தொழிலெல்லாம் பெரிய லெவலில்தான் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை