உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மன்னர் பரம்பரை மனநிலை! சஸ்பெண்ட் குறித்து மவுனம் கலைத்த ஆதவ் அர்ஜூனா

மன்னர் பரம்பரை மனநிலை! சஸ்பெண்ட் குறித்து மவுனம் கலைத்த ஆதவ் அர்ஜூனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மன்னர் பரம்பரைக்கான மனநிலை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன் என்று ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சுகளால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரின் பேச்சு விடுதலை சிறுத்தைகள், தி.மு.க., இடையே பெரும் உரசலை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் முன்னணி நிர்வாகிகள் இடையேயும் கருத்து முரண்கள் எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d0acfdty&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆதவ் அர்ஜூனா தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். இந் நிலையில் தம் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து எக்ஸ் வலை தள பக்கத்தில் ஆதவ் அர்ஜூனா நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். ஆயிரம் கைகள் மறைத்தாலும் என்ற தலைப்பிட்டு தமது பதிவை அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் கூறி உள்ளதாவது: 'அதிகாரத்தை அடைவோம்' என்று எழுச்சித் தமிழர் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன். கட்சியின் பிரசார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன். தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச் செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன். தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தோழர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்து விடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரசாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன். மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள். கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம். மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்து வரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அம்பேத்கர், ஈ.வே.ரா, அண்ணாதுரை ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், 'சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்' என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம். எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவ(ன்) மறைவதில்லை. இவ்வாறு அந்த பதிவில் ஆதவ் அர்ஜூனா கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Thiyagarajan S
டிச 10, 2024 22:33

வளர்ந்து வரும் விசிக கட்சியை விடியல் திராவிட மாடல் கட்சி சீரழித்து விட்டது... எதிர்காலத்தில் தனக்கு போட்டி வந்து விடக்கூடாது என்பதற்காக ஆதவ் அர்ஜுனா திருமாவளவன் இடையே ஒரு பெரிய கலவரத்தை மூட்டி குளிர் காய்கிறது திமுக....


Murugesan.P
டிச 10, 2024 13:45

தோழருக்கு வாழ்த்துக்கள் ....வளரும் சமுதாயத்தின் ஒரு அங்கமாக தாங்கள் பேசிய கருத்துக்கள் மிகவும் உண்மை அருமை


AMLA ASOKAN
டிச 10, 2024 08:54

இந்தியாவில் உள்ள எல்லா கட்சியும் கருப்பு பணத்தை வைத்து தான் அரசியல் பண்ண முடியும் . அணைத்து மாநில முதல்வர்கள் , அமைச்சர்கள் , கட்சி தலைவர்கள் இந்த கருப்பு பணத்தை வைத்து தான் MLA களை விலைக்கு வாங்கி ஆட்சியையே அமைக்கிறார்கள் . அவர்களும் ஆதாயம் அடைகிறார்கள் . தேர்தலில் மக்களுக்கு பணத்தை வாரி இறைத்து வெற்றி பெறுகிறார்கள் . ஊழல் இந்திய அரசியல் அமைப்பில் மட்டும் அல்லாமல் அரசு அலுவகங்களிலும் , நீதிமன்றங்களிலும் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது . மக்களை பொறுத்த வரையில் அவர்களுக்கு உரிய நல்ல திட்டங்கள் கிடைத்தால் போதுமானது . அவர்கள் ராமனையோ ராவணனையோ பதவியில் அமரவைத்து விட்டு தங்கள் பொழைப்பை பார்த்து கொண்டிருப்பார்கள் . இன்றைய இந்தியாவிற்கு முக்கிய தேவை வலிமையான , மனிதநேயமிக்க , சாதி பேதங்கள் , மதங்களை கடந்த ஒற்றுமையான ஒரு தேசம் . அதைவிட மிக முக்கியம் அந்த ஒற்றுமையை உறுதிப்படுத்தும் அனைவருக்குமான ஆட்சியாளர்கள் .


PURUSH BHU
டிச 10, 2024 08:44

ஆதவன் என்றால் சூரியன். ஆர்ஜுன் யாதவ் காலத்தின் கைகளில் ஒப்படைப்பதாகச் சொல்கிறார். காலம் என்பது இந்திய கருத்தியலில் சூரியனால் தான் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்திய மரபியல்படி சூரியன் கண்ணால் காணப்படுகின்ற கடவுள். சூரிய வணக்கம்.


பேசும் தமிழன்
டிச 10, 2024 07:55

தாழ்த்தப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதை தடுக்கும் திமுக மற்றும் விசிக.... கட்சியை யாரும் நம்ப வேண்டாம்.... இளைஞர்கள்.... ஆதவ் அர்ஜுனா வழியில் நடக்கலாம்..... தெருமா ஒரு ஏமாற்று பேர்வழி என்பது நிரூபணம் ஆகிவிட்டது.


muthu
டிச 10, 2024 07:40

Who will vote to political party who support rawdism and goodas act . VCK is clever in political vision to get votes by DMK alliance


Sivagiri
டிச 10, 2024 00:15

அட போங்கப்பா , நீயும் விசி-யும் , அங்கிட்டு போயி விளையாடுங்கப்பா - எல்லாமே மக்களுக்கு தெரிஞ்ச விஷயம்தானேப்பா , என்னமோ புதுசா கதை விட்ர - - அப்டி மன்னர் ஆட்சியை ஒலிக்கனும்னா , அவங்க ரகசிய டீலிங்குகளை சம்பாத்தியங்களை , தகிடு தத்தங்களை , டக்கு டக்குன்னு விடவேண்டியதுதானே - - அவங்க கூடத்தான் கொஞ்ச நாளா olinjகுப்பை கொட்டிட்டு இருந்தாய் அல்லவா ,


r ravichandran
டிச 09, 2024 23:54

அரசியல் உலகில் முதல் முறையாக தன் சார்ந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும், தன் கட்சி தலைவர் முதல் அமைச்சர் ஆக வேண்டும் அல்லது கூட்டணி என்றால் துணை முதல் அமைச்சர் பதவி என்று கூறியவர் கட்சியை விட்டு நீக்கம் செய்யபட்டு இருக்கிறார்.


adalarasan
டிச 09, 2024 22:11

எல்லாம் set up, என்று நல்லா அவருக்கு தெரியும், கவலை எதற்கு?


நிக்கோல்தாம்சன்
டிச 09, 2024 21:30

நல்ல தலைமை பண்பு இருக்கிறது , முன்னேறுங்கள் , இளைஞர்கள் உங்களோடு இருப்பார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை