உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாய்களுக்கு உணவளிப்போரை தாக்கினால் நடவடிக்கை

நாய்களுக்கு உணவளிப்போரை தாக்கினால் நடவடிக்கை

சென்னை: 'நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவு அளிப்போர் மீது தாக்குதல் நடந்தால், போலீசார் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பர்' என, 'புளுகிராஸ்' அமைப்பு நிர்வாகிக்கு, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமன் கடிதம் அனுப்பி உள்ளார். நாய்களுக்கு உணவு அளிப்போர் மீது, தனி நபர்கள் மற்றும் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடியிருப்பு நல சங்கத்தினர் தாக்குதல் நடத்துகின்றனர் . அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, காவல் நிலைய போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கட்ராமனுக்கு, விலங்குகள் நல அமைப்பான புளுகிராஸ் நிர்வாகி, கடந்த மாதம், 28ம் தேதி கடிதம் அனுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்து, பொறுப்பு டி.ஜி.பி., அனுப்பியுள்ள கடிதம்:

நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் மீதும், அவற்றுக்கு உணவு அளிப்போர் மீதும் தாக்குதல் நடந்தது தொடர்பாக புகார் பெறப்பட்டால், போலீசார் கட்டாயம் நட வடிக்கை எடுப்பர். அதுபற்றி விசாரணை நடத்துவர். இதற்காக, தனியாக அவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Mayakannan Kannan
செப் 24, 2025 11:26

நகராட்சிகள் தனியாக சட்டம் இயற்றவேண்டும்


ஆரூர் ரங்
செப் 23, 2025 14:32

தெரு நாய்கள் நம்பர் 2 போனாலும் இதே ஆர்வலர்கள் சுத்தம் செய்ய வேண்டும்.


Techzone Coimbatore
செப் 23, 2025 17:02

முதலில் ஆறறிவு மனிதர்கள் செய்யும் அசுந்தங்களை செய்யுங்கள். பிறகு ஐந்தறிவு உள்ள நாய்கள் அசுந்தங்களை பற்றி பேசுங்கள்


vadivelu
செப் 23, 2025 12:10

அதே போல ஆடு மாடு, பன்றி, கோழி வதைப்பவர்களையும் தண்டிக்க முடியுமா. லட்ச கணக்கில் ஆடுகளும், ஆயிர கணக்கில் மாடுகளும் தினம் கொல்ல படுகிறதே .ஒன்றிரண்டு நாய்களை அவனவன் தெருவில் இருந்து துரத்தினால் என்ன தவறு.


ஆரூர் ரங்
செப் 23, 2025 11:27

வெங்கட்ராமன் வசிக்கும் வீட்டிற்குள் டஜன் தெரு நாய்களை அனுப்பி நன்றி செலுத்த வைக்கலாமே .


Venkatesan Srinivasan
செப் 23, 2025 11:11

நாய்கள் பராமரிப்பு செய்ய விரும்பும் நபர்களின் பொறுப்பில் மட்டுமே அவர்களின் தனிப்பட்ட இருப்பிடத்தில் மட்டுமே இருக்க சட்டம் வேண்டும். அந்த நாய்கள் யாரையும் தாக்கினால் அந்த துன்பங்களுக்கு அவர்கள் மட்டுமே சட்ட ரீதியாக பொறுப்பு ஏற்க வழி வகுக்க வேண்டும். மேலும் அந்த நாய்கள் அவர்களால் முறையாக உணவு மருத்துவ பாதுகாப்பில் உள்ளதை விலங்குகள் நலவாரியம் பதிவு செய்து கண்காணிப்பு செய்ய வேண்டும். தவறான முறையில் நாய்கள் பராமரிப்பு செய்தால் தண்டனை வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தும் வகையில் பொது சுகாதாரம் பாதிக்கப்படும் வகையில் சாலை பாதுகாப்புக்கு இடையூறாக எந்த விலங்கும் வளர்ப்பதை தடை செய்ய வேண்டும். தெருநாய்கள் ஆர்வலர்கள் ஏதோ ஒருவகையில், நாட்டின் பொதுச் சுகாதாரம் தனிநபர் பாதுகாப்பு, சுதந்திரம் தேச வளர்ச்சிக்கு எதிரான செயல்களுக்கு ஊக்குவிப்பு செய்யும் மறைமுக திட்டம் கொண்ட நோய் பரப்பும் மருத்துவ மாஃபியா கும்பல்களால் வெளிநாட்டு எதிரி சக்திகளால் ஆதரவு அளிப்பது போல் தெரிகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில். சாலைகள் தெருக்கள் இன்னபிற உள்கட்டமைப்புக்கள் வெகுவாக மனிதர்களின் பயன்பாடுகள் குறித்து மட்டுமே உருவாக்கப் படுகின்றது.


V RAMASWAMY
செப் 23, 2025 10:48

Most of the general public opine that in a country like India, organizations like Blue Cross etc. are not needed and they should be disbanded. The concern they have for animals, not an iota they have for humans.


Techzone Coimbatore
செப் 23, 2025 17:05

இங்கே மனிதர்கள் இந்த பூமியில் இல்லை என்றால் இந்த பூமி மாசுபடுவதை தடுக்கலாம்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
செப் 23, 2025 10:09

நாய்கள் மீது உண்மையான அக்கறை என்றால் தெரு நாய்களுக்கு உணவிடுவோர் அந்த நாய்களை தங்கள் வீட்டுக்கு கொண்டு சென்று முறையாக பராமரித்து உணவளிக்கலாமே. இன்றைக்கு தெரு நாய்கள் கடித்து மக்கள் படும் துன்பம் ஏராளம். தெருக்களில் நடக்க முடியவில்லை. நிறைய பேர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் இந்த புளூகிராஸ். நாய்கள் மட்டுமல்ல எல்லா உயிர்களின் மீதும் எல்லோருக்கும் அக்கறை உள்ளது. எதோ தாங்கள்தான் ஆபத்பாந்தன் போலவும் மற்றவர்கள் எல்லாம் கொடூரர்கள் போலவும் சித்தரிப்பது கேவலமானது. வெறிநாய்களை ஒழிப்பதற்கு முன்பு இவர்களை ஒழிக்க வேண்டும்.


Techzone Coimbatore
செப் 23, 2025 17:07

எனக்கு ஒரு தகவல் தர முடியுமா. இந்த மக்களுக்கு ஆதரவாக பேசும் நீங்கள், ஒரு வருடத்தில் விபத்தினால் எந்தனை பேர் இறக்கிறார்கள், நாய்களால் எத்தனை பேர் இறக்கிறார்கள் ஒரு கபரிசோன் தாருங்கள்


Ramesh Sargam
செப் 23, 2025 09:28

தெருவில் போவோர் வருவோரை கடிக்கும் தெருநாய்களை, முட்டும் மாடுகளை பிடித்து மிருக ஆர்வலர்கள் வீடுகளில் விடவேண்டும்.


Ram
செப் 23, 2025 08:36

இது தேவையில்லாத அறிவுப்பு. அரசு தெருநாய்களை நீக்கிவிட்டால் மக்கள் ஏன் தாக்குதல் நடத்துவார்கள்


Techzone Coimbatore
செப் 23, 2025 17:09

உங்களை போன்ற ஒன்றுக்கும் உதவாத ஜென்மகளை நீக்கி விட்டால் நாடு நன்றாக இருக்கும்


Pandi Muni
செப் 23, 2025 08:19

மாட்டிறைச்சி, எலும்புகளை உண்ணும் நாய்கள் மனிதன் மற்றும் விலங்குகளை தாக்கத்தான் செய்யும்


Techzone Coimbatore
செப் 23, 2025 17:12

அப்படியே மிருங்களை கொன்று சாப்பிடும் மனிதர்களும் அதே போல் நடந்து கொள்வார்கள். அப்போது அவர்களை என்ன செய்யலாம். தெருவில் ஒரு எட்டு வயது குழந்தையை கூட பாலியல் அதுமீறர்கள் நடக்கின்றன. அதற்கு எப்போது தீர்வு கிடைக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை