உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., அக்.,8ல் மனித சங்கிலி!

சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க., அக்.,8ல் மனித சங்கிலி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி அக்டோபர் 8ம் தேதி மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க., அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் தி.மு.க., எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு; வியாபாரிகள் தங்களது வணிகத்தை சுதந்திரமாக நடத்த முடியாத நிலை; ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம்; தி.மு.க.,வினர் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவது; ஆளும் தி.மு.க.,வினரால் சினிமா துறை கபளீகரம்; ரியல் எஸ்டேட் தொழில்களில் அதிகாரம் செலுத்துவது என பல்வேறு மக்கள் விரோதச் செயல்கள் நடைபெறுவது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியாளர்களால் மக்கள் படும் வேதனைக்கு அளவே இல்லை. இத்தகைய கொடுங்கோல் ஆட்சி நடத்தும் ஸ்டாலினின் தி.மு.க., அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அ.தி.மு.க, தி.மு.க., ஆட்சியில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை அவ்வப்போது நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருவதோடு, களத்தில் நின்று போராடி வருகிறது. ஸ்டாலினின் தி.மு.க., அரசு கடந்த 40 மாதகால ஆட்சியில்; * மூன்று முறை மின்கட்டண உயர்வுடன், இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு,*பத்திரப் பதிவு கட்டணங்கள் உட்பட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பல மடங்கு உயர்வு; *பால் பொருட்கள் விலை பலமுறை உயர்வு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு; *நியாய விலைக் கடைகளில் குறித்த நேரத்தில் பொருட்கள் வழங்கப்படாமை;*கொலை, கொள்ளை என்று தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; பெண்கள், சிறுமியருக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள்; *போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறிய தமிழகம்; *சென்னை மாநகராட்சியில், மயான பூமியை தனியார் மயமாக்கும் முடிவு,*ஏற்கெனவே உயர்த்தப்பட்ட 100 சதவீதம் மற்றும் 150 சதவீதம் சொத்து வரி உயர்வுடன் இனி ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு; இதனால் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புக் கட்டணங்கள் ஆண்டு தோறும் உயர்த்தப்படும் நிலை என்று தமிழக மக்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக சீரழித்து வருகிறது.ஸ்டாலினின் தி.மு.க., ஆட்சியில், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இதுவரை இல்லாத வகையில் ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு என்ற பேரிடி மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடித்தள மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். ஸ்டாலினின் தி.மு.க., ஆட்சியின் கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் வடிக்கும் கண்ணீர் இந்த ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. 40 மாத காலமாக, மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்குக் காரணமான ஸ்டாலினின் தி.மு.க., அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் அ.தி.மு.க., சார்பில், அக்.8 (செவ்வாய் கிழமை) காலை 10.30 மணியளவில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்களிலும்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும், மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Narayanan
அக் 29, 2024 13:35

இபிஎஸ் இப்போதுதான் தமிழ்நாட்டிற்கு வந்தாரா. நான்கு ஆண்டுகள் வனவாசம் போய் இருந்தாரா? தேர்தல் நெருங்கும் சமயம் விளையாட்டு காட்டுகிறார். இன்றைய அன்றாட உணவுப் பொருட்களின் விலைவாசியைக்கூட அரசு கட்டுப்படுத்த தவறுகிறது . வணிக சங்க தலைவர் அவர் மகனை எம் எல் ஏ ஆக்கியதால் வணிகர்களை விலை ஏற்றி பிழைக்கச்செய்கிறார் .


தாமரை மலர்கிறது
அக் 03, 2024 02:29

எடப்பாடி பிஜேபி அணியில் இருந்தால் தான் ஆட்சிக்கு வரமுடியும். அதைவிட்டு தனியே நின்றால், அதிமுகவின் ஓட்டுக்களை சீமான், விஜய் வேட்டையாடிவிடுவார்கள். எடப்பாடிக்கு பத்து சதவீத ஓட்டுக்கூட கிடைக்காது. மரியாதையாக அமித் ஷாவை பார்த்துவிட்டு, பிஜேபி அணியில் சேர்வது எடப்பாடி அதிமுக கட்சியை காப்பாற்றிக்கொள்ள உள்ள ஒரே வழி. இல்லையெனில் ஜெயலலிதா செய்த நல்லதொரு வீணையை நலங்கெட எடப்பாடியிடம் கொடுத்தது போன்றதாகிவிட்டது


Sathyan
அக் 02, 2024 19:12

All points raised by EPS are valid and justified. DMK came to power after giving many promises in their manifesto which includes that property tax and EB tarrif will not be raised. DMK is a party of betrayal and Stalin is known to break his own commitments/promises and public claims. To give some examples Stalin said no one from his family will come to politics. Dont know Udhayanidhi is family member or outsider. Stalin further said Udhaya will be given MLA seat. Udhya became first time MLA and now has become Dy CM. It is an indirect message to all members of DMK that Udhya alone has the competency and qualification.


Lion Drsekar
அக் 02, 2024 16:13

நீதிமன்றத்தில் அக்கு சங்கிலி, போராட்டம், தீவைப்பு இவைகள் தேவை இல்லை, இன்றைக்கு ஜனநாயகதைக் காப்பதே நீதிமன்றம் மட்டுமே, மற்றவர்கள் அனைவரும் உள்ளே எளிய நாடகம்தான், மின்சார கட்டணம் எதற்க்காக அடுக்கு மாடி வீடுகளில் பொது பயன்பாட்டுக்கு ஒரு தொகை ,தனி ஈடுகளுக்கு ஒரு தொகை . மேலும் தனி வீடாக இருந்தால் அந்த இடத்தில எவ்வளவு வரி மாநரகத்துக்குக் கிடைக்கும், மாறாக மிகப்பெரிய கட்டினால் காட்டினாள் பல லட்சம் கோடி இதர வருமானம், யாராவது ரோவர் கேள்வி கேட்டிருப்பர்களா இவ்வளவு வருமானம் சொத்துவரியில் இருந்து வருகிறதே , அனைத்தும் வரி ஆட்டுபவர்களுக்கு பயன்படுகிறதா ?? ஒவ்வொரு ஆண்டும் ரோடு போட்டுதான் ஆகவேண்டுமா ? குளங்கள் , குடிநீர் ஆதாரங்களில் வளர்க்கப்படும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற டெண்டர் , இவைகளை ல்லாம் யாருமே கேள்வி கேட்பதே இல்லை, மொத்தத்தையும் கூட்டினால் எத்தினை லட்சம் கோடி வீணாகிறது, ஏதோ வாசகர்களுக்குத்தான் தாமே தெரியும் மற்றவர்களுக்கு எதுவுமே தெரியாதது என்றல்ல, ஏன் ஒருவர்கூட வாய் இறக்காமல் .இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, ஹிரண்யாய நமஹ


T.sthivinayagam
அக் 02, 2024 15:31

நல்ல்லது அப்படியே டோல்கேட் கட்டண உயர்வையும் சேர்த்துங்க


கூமூட்டை
அக் 02, 2024 15:03

ஏறிய பின்னர் இறங்குமா. அரசியல் செய்யாமல் அவியல் செய்யவும். எத்தனை பிரச்சினை இருக்கு. வாழ்க வளமுடன் ஊழல் வாதிதக்காளி


Ag Jaganath
அக் 02, 2024 14:36

அவனும் தீயும் பக்கா திருடர்கள் ஏண் மக்கள் மாற்றுகிறீர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை