உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., நிர்வாகிக்கு கிடைத்தது முன்ஜாமின்

அ.தி.மு.க., நிர்வாகிக்கு கிடைத்தது முன்ஜாமின்

சென்னை:சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்பியதாக பதிவு செய்த வழக்கில், அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவு இணை செயலர் நிர்மல்குமாருக்கு முன்ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.'பெஞ்சல்' புயல் காரணமாக, சென்னையில் பலத்த மழை பெய்தது. அப்போது, மெரினா கடற்கரை பகுதியில் மின் கசிவு ஏற்பட்டதாக தன் சமூக வலைதளத்தில் அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலர் ஆர்.நிர்மல்குமார் கடந்தாண்டு நவ., 30ல் தகவல்கள் பதிவிட்டிருந்தார்.இதையடுத்து, பொய்யான தகவல்களை பரப்பியதாக, நிர்மல்குமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிர்மல் குமார் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நிர்மல்குமாருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கிய நீதிபதி, ஒரு வாரத்துக்கு சைபர் கிரைம் போலீசில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை