உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தின் அமைதியை குலைக்க பார்க்கிறார் அமித் ஷா: ஸ்டாலின்

தமிழகத்தின் அமைதியை குலைக்க பார்க்கிறார் அமித் ஷா: ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அமைதி மாநிலமான தமிழகத்தின் அமைதியை குலைக்க பார்க்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா' என, முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் ஒரு அமைச்சர், 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு' என்று, வாய்க்கு வந்தபடி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. இது மணிப்பூர் அல்ல; தமிழகம் என்பதை அமித் ஷாவுக்கு நினைவூட்டுகிறேன். ஒன்றரை ஆண்டுகளாக, 250 பேர் படுகொலை செய்யப்பட்ட மாநிலத்தை, பா.ஜ., ஆண்டது. அங்கே போய் அமைதியை நிலைநாட்ட முடியாத உள்துறை அமைச்சர், அமைதியான மாநிலத்துக்குள் வந்து, அமைதியைக் குலைக்கப் பார்க்கிறார். அமைதியான மாநிலம் என்பதால் தான், அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது தமிழகம். இதை மத்திய அரசின் புள்ளிவிபரங்களே ஒப்புக் கொள்கின்றன. ஆனால், சட்டம் - ஒழுங்கு மோசம் என்று, உள்துறை அமைச்சர் பொறுப்பற்ற வகையில் பீதியை கிளப்பிச் சென்றிருக்கிறார். 'நீட்' தேர்வு பற்றி, ஊடகவியலாளர்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பியபோது, அதற்கு சரியான பதிலை அமித்ஷாவால் சொல்ல முடியவில்லை. 'நீட் தேர்வு சரியானது' என்றாவது, தன் வாதத்தை அவர் வைத்திருக்க வேண்டும். மாறாக, 'நீட் தேர்வு எதிர்ப்பு என்பதே திசை திருப்புவது' என்ற, திசை திருப்பும் பதிலையே உள்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார்.இதுவரை, 20க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்திருக்கின்றனர். இவர்களும் திசை திருப்பும் வகையில்தான் தற்கொலை செய்து கொண்டனரா? இங்கு மட்டுமல்ல, பீஹாரிலும் மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு அமித் ஷா என்ன சொல்கிறார்?ஐந்து மாநிலங்களில், நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ.. வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருவதும், மாணவர்கள் சிலரும், பெற்றோர் சிலரும் கைது செய்யப்பட்டு இருப்பதாவது, அமித் ஷாவுக்கு தெரியுமா? சி.பி.ஐ., யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது; விசாரிக்கவும். அதன்பின், நீட் தேர்வு எதிர்ப்பு என்பது திசை திருப்புவதற்காக சொல்லப்படுகிறதா, மருத்துவக் கல்வியை காப்பதற்காகச் சொல்லப்படுகிறதா என்பதை அவர் அறிவார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 83 )

SIVA
ஏப் 19, 2025 13:49

தமிழக அமைதியாவா இல்ல குடும்ப அமைதியவா .......


S.jayaram
ஏப் 19, 2025 07:49

அமைதியை குலைப்பது யார், நீங்களா?அமித்ஷா வா? அவர் ஒருமதத்தின் சில பிரிவினர் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்பதால் அந்த மதத்தின் ஒரு அமைப்பில் சில திருத்தங்கள் செய்து சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் தீர்வு காண ஏற்பாடு செய்தார். அதை ஏற்பதும், ஏற்காததும் அம்மததினர் விருப்பம் அல்லது அதை எதிர்த்து நீதிமன்றம் சென்று தீர்வை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். இதில் உங்களுக்கென்ன பாதிப்பு வந்துள்ளது. மதசார்பறற ஆட்சி நடத்துகிறோம் என்று கூறும் நீங்கள் எப்படி அனைத்துமத்தைர்க்கும் பொதுவான சட்டமன்றத்தில் ஒரு மதத்திற்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தினை எதிர்த்து தீர்மானம் எப்படி இயற்றலாம். இது மற்ற மதத்தினரின் உரிமையினை பாதிக்கும் நிலையினை ஏற்படுத்தாதா? இதன் மூலம் ஒரு மதத்தினரை மற்றவர்களுக்கு எதிராக செயல்பட அனுமதிக்கிரீர்கள். ஏற்கனவே தமிழ்நாட்டில் இது சம்பந்தமான பிரட்சினைகள் அந்த மதத்திற்கும் இன்னொரு மதத்திற்கும் இடையே நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நீங்கள் நிறைவேற்றிய தீர்மானம் சிக்கலை ஏற்படுத்தும் அமைதியாக இருக்கும் தமிழகத்தை உங்கள் தனிப்பட்ட நலனுக்காக கலவரபூமியாக ஆக்கும் செயலை நோக்கி கொண்டு செல்வதாக தெரிகிறது, வேண்டாம் இம்மாதிரியான முடிவுகள் உங்களைப்போலவே நிலைப்பாடு உள்ள அண்டைமானிலமான கேரளாவில் அச்சட்டதினை அமுல்படுத்தி விட்டனர். இதன் மூலம் அவர்கள் மதங்கள் இடையே ஏற்படும் நிலம் சம்பந்தமான பிரட்சினைகளை நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும், நமக்கு அங்கே வேலை இல்லை என்று காண்பித்து விட்டார்கள். அவர்களும் ஆச்சட்டதினை எதிர்க்கிரர்களா என்றால் ஆம் எதிர்க்கிறார்கள் ஆனால் எந்த மதத்திற்கும் சார்பாக அரசு முடிவெடுக்காது என்று நீதிமண்றம் முடிவு செயட்டும் என்று மதச்சார்பின்மையை காட்டிவிட்டார் ஆனால் நீங்கள்?


kumarkv
ஏப் 18, 2025 12:15

பின் லடன்


S.V.Srinivasan
ஏப் 18, 2025 09:17

வேங்கை வயல் நிகழ்ச்சி, அண்ணா பல்கலை பாலின கொடுமை இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா முக்யமந்திரி அவர்களே.


பெரிய குத்தூசி
ஏப் 18, 2025 08:02

சேர்ந்தது போல் 4 வார்த்தை பேசத்தெரியாது. ஆனா இவனுகள வெச்சி அழகா தமிழகம் டெய்லி எப்படி நடக்கணும், என்று narrative செய்ய எழுதிக்குடுத்து ஆட்டுவிக்கறான் பாரு திமுக IT விங். அவனுக தான் டாப்பு நல்ல strategy க்கு பிளான் பண்ணி செய்றனுக திமுக IT விங். இவனுக இல்லேன்னா எல்லாம் இந்நேரம் 123 னு என்னிகிட்டு களி நின்னுகிட்டு இருப்பானுக. திமுக IT விங் சரியான மண்டைக்காரனுக. செந்தில்பாலாஜி சரியான பாதையிலே career ல travel பண்ணியிருந்தார்னா நம்ம சுந்தர் பிச்சைக்கு டப் குடுத்து கூகுல் க்கு CEO ஆயிருப்பாரு, ஏன் அமெரிக்கா போயிருந்த செந்தில் பாலாஜி அமெரிக்கா ஜனாதிபதி ஆயிருப்பார். திமுகவை தடம் மாறாமல் வழிநத்துவதில் 30 நபர்கள் கொண்ட முன்னாள் இந்நாள் IAS மற்றும் IPS அதிகாரிகள் கொண்ட IT விங் தலைமை ஏற்று செயல்படுகிறது. அதற்க்கு மாப்பிளை சபரீசன் மற்றும் செந்தில் பாலாஜி வெர்டிகிள் ரோல் லிருந்து டிக்டேட் செய்வது குறிப்பிடத்தக்கது.


Naga Subramanian
ஏப் 17, 2025 10:53

நித்தம் ஒரு கொலை, கொள்ளை, மணல் கடத்தல், வித விதமான ஊழல்கள் என்று, பல செய்திகள், செய்தித்தாள்கள் மூலமாக வந்தவாறே உள்ளன. போதாததற்கு வெள்ளம் வேறு, வீட்டிற்க்கே டெலிவரி. இவை அனைத்தும் பொய் என்றுதான் சொல்லப் போகிறீர்கள் அப்பா முதல்வரே?


S.V.Srinivasan
ஏப் 16, 2025 08:20

நீங்க எதுக்கு வரீங்க.


Ramesh Sargam
ஏப் 13, 2025 22:04

முதலில் நீங்கள் ஆட்சி அமைத்தபின் தமிழகத்தில் என்றைக்கு அமைதி நிலவியது. தினம் தினம் கொலை, கொள்ளை, பாலியல் வன்புறுத்தல்தான். அமித் ஷா thamizhagathin amaidhiyai kulaiththu vittaar endru vaai koosaamal poi pesugireergale, mudhalvarukku idhu azhagaa.


M Ramachandran
ஏப் 13, 2025 19:52

அவ்வளவு தான் உங்க ஆட்டம்பாட்டமெல்லாம். சும்மா ரீல் விட்டுகிட்டு சுத்தாதீங்க. அமெரிக்காவில் ஹிந்து பற்றி அவதூறு பரப்பினால் தண்டனை. அது சீக்கிரமென வரும். திராவிட திருட்டு இன வெறி கும்பல் ஆட்டம் பெரியார் என்று நீங்க தூக்கி வைத்து கொஞ்சும் கும்பல் இப்போது தைரியமாக நாற அடிக்கிறார்கள். இனி பெரியாரிடம் பீனிசம் தான். தகிடு தத்தம் ஈல்லாம் கடைய மூடி கொண்டு வேறு நாட்டில் முடிந்தால் ஆடி பாருங்க. அங்ககேயும் டப்பா ஆடிடும். அராஃபியான் நாடுகளிலேயே. ஹிந்து பண்டிகைகள் கொண்டாட்டம். வீரமணி சுருட்டிய பணத்துடன் ஒடி ஒளிந்து கொள்ளவேண்டும்.


ManiK
ஏப் 13, 2025 16:04

உங்க அறிக்கை இப்போது எதுக்கும் உகந்ததில்லை. தேவையற்ற ரியாக்ஸன் குடுக்காமல் உங்க பையன் நடித்த படத்தை பாருங்கள் சிஎம்சார்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை