உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தை மோடியிடம் ஒப்படைக்க அண்ணாமலை அழைப்பு!

தமிழகத்தை மோடியிடம் ஒப்படைக்க அண்ணாமலை அழைப்பு!

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' நிகழ்ச்சி, வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று (பிப்., 15) நடந்தது. தமிழக பா.ஜ., சார்பில் பெரம்பூர் அருகே அகரம் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது:ஜூலை 28ல் ராமேஸ்வரத்தில் துவக்கிய, 'என் மண் என் மக்கள்' பயணத்தில், சில நாட்களுக்கு முன் 200வது தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதிக்கு வந்து சேர்ந்தோம். இன்னும் சில நாட்களில் 234 தொகுதிகளை முடித்து, கடைசியாக பல்லடத்தில் யாத்திரை முடிவு அடைய உள்ளது.மக்கள் நேர்மையான அரசியலை எதிர்பார்ப்பதை இந்த பயணத்தில் அறிந்தேன். சாமானிய மனிதனை மையப்படுத்திய ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். எந்தவித லஞ்சம் இல்லாமல், வரிப்பணத்தை அதை மக்கள் பயன்படும் வகையில் செலவிட வேண்டும் என நினைக்கின்றனர்.கொளத்துார் போன்ற பகுதியில் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் பெய்கிற மழையில் எட்டு நாள் தண்ணீருக்குள் இருக்க வேண்டியுள்ளது. புதிதாக போட்ட ரோடு ஒரு மழைக்குக் கூட தாங்கவில்லை. 10 ஆண்டுகளாக சம்பாதித்தது எல்லாம், ஒரே ஒரு கனமழையில் இழப்பதை சாமான்ய மனிதன், சென்னையில் பார்த்துக் கொண்டிருக்கிறான். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கூட கிடைக்கவில்லை. தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியனின் சகோதரர் தமிழகத்தின் நிதியமைச்சராக உள்ளார். அவரது தந்தையும் அமைச்சராக இருந்தவர். மத்திய சென்னையிலும் அரசியல் வாரிசாக தயாநிதி, எம்.பி.,யாக உள்ளார். வட சென்னையில், ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி, எம்.பி.,யாக உள்ளார். இவர்கள் மூன்று பேருக்கும் சாமான்ய மனிதரின் வலி தெரியுமா? அரசியல் குடும்பத்தில் பிறந்து, குடும்ப கோட்டாவில் எம்.பி.,யானவர்களுக்கு சாமான்ய மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. மத்திய அரசு கொட்டித் தருகிறது. ஆனால், மாநில அரசு அதை மக்களுக்கு கிள்ளித் தருகிறது. மழை பாதிப்பின் போது, 10 ஆயிரம் தர வேண்டும் என்றோம். ஆனால், 6,000 ரூபாய் தந்தனர். அதில் 75 சதவீதம் மத்திய அரசின் பணம்; 25 சதவீதம் மட்டுமே மாநில அரசின் பங்கு. எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் கிளாம்பாக்கத்திற்கு பேருந்து முனையத்தை மாற்றி, மக்களை அவதிக்கு உள்ளாக்கி உள்ளனர்.சாமான்ய மனிதன் நினைத்தால் மட்டுமே அரசியல் சுத்தமாகும். அப்படிப்பட்டவர் தான் இந்தியாவின் பிரதமராக அமர்ந்துள்ளார். மோடி ஆட்சிக்கு வந்த போது, உலகின் 11வது பெரிய வளர்ந்த நாடாக இந்தியா இருந்தது. பத்து ஆண்டுகளில், உலகின் பெரிய பொருளாதார நாடாக, ஐந்தாவது இடத்திற்கு இந்தியா உயர்ந்துள்ளது. கடின உழைப்பால், நேர்மையான ஆட்சியால், மக்களின் வரிப்பணத்தை சரியான முறையில் மக்களுக்கான திட்டங்களாகக் கொண்டு வந்ததால், இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், 32 மாதத்தில் 2.69 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. முத்ரா திட்டத்தில் பல லட்சம் பேர் தமிழகத்தில் பயன் பெற்றுள்ளனர். இத்திட்டத்தில் தமிழகத்தில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு செயல்படுத்தும் இதுபோன்ற ஏராளமான திட்டங்களை தமிழகத்தில் சரியாக செயல்படுத்தவில்லை. பா.ஜ., எங்கெல்லாம் பலமாக ஆட்சி அமைத்துள்ளதோ, அந்த மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் சரியாக சென்று சேர்ந்துள்ளன. மோடி கையில் தமிழகத்தையும், சென்னையையும் ஒப்படைக்க வேண்டிய நேரமும், காலமும் வந்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து, பா.ஜ., சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் போரூர், காரம்பாக்கம் ஜெயின் கோவில் திடலில் மகளிர் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மருத்துவர் லஷ்மி, திரைப்பட பின்னணி குரல் கலைஞர் ஹேமமாலினி, செவிலித்தாய் விஜயலஷ்மி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை அண்ணாமலை வழங்கினார்.நட்பிண்ணை பாபுவுக்கு புதுமை விவசாயி-, சமுக சேவகி -சிவசங்கரி, கல்வி, மனவளக் கலை பயிற்றுனர் நிர்மலா, தொழிலதிபர்- ராஜலட்சுமி, தொழில் முனைவோர்- மீனவர்த்தினி, சாந்தா ஆகியோருக்கு சாதனை பெண்டிர் விருதும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

MADHAVAN
பிப் 17, 2024 10:29

உலகின் அதிக கடன்கார நாடு இந்தியா, இதற்க்கு காரணம்


MADHAVAN
பிப் 17, 2024 10:28

உலகின் அதிக கடன்கார நாடு இந்தியா, இதற்க்கு காரணம் மோடி


K.Ramakrishnan
பிப் 16, 2024 22:02

இந்­தி­யாவை மோடி­யி­டம் ஒப்­ப­டைத்­ததன் விளைவு 40­0­ ரூபாய் காஸ் 10­0­0­ரூ­பா­யாகி விட்­டது. பெட்­ரோல், டீசல் ரூ.100 ஐ தாண்­டி­யாச்சு.. வங்­கியில் நாங்க போட்ட பணத்தை எடுப்­ப­தற்கே கட்­டுப்­பா­டுகள்.. அதை­யும் மீறி எடுத்தால் அதற்கு அப­ராதம்... வேறு வங்கி ஏடிஎம் ல், வரம்பு மீறி பணம் எடுத்­தாலும் அப­ராதம். ரயில்­களில் முதி­யோ­ருக்கு பாதி கட்­டண சலு­கையை பறிச்­சாச்­சு. தலை­ந­கர்­டெல்­லியில் போரா­டு­கிற விவ­சா­யிகள் மீது டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்­டு­களை வீசு­றீங்க.. இப்ப தமிழ்­நாட்­டையும் மோடி­யிடம் ஒப்­ப­டைத்­தால், பஸ் கட்­ட­ணத்தை உயர்த்­து­வீங்க... எல்லா வரி­யையும் உயர்த்தி மக்­களை கோவ­ணாண்டி ஆக்கி விடு­வீர்­க­ளே...


K.Muthuraj
பிப் 16, 2024 21:54

ஒருவேளை அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பா ஆகிவிட்டால் என்ன நடக்கும்? பிள்ளைப்பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும். இன்றைக்கு எல்லா அராஜகங்களையும் கண்டும் காணாமல் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு இருக்கும் வைகோ திருமா சீமான் ராமதாஸ் சிறுபான்மையினர் எல்லாரும் பி ஜே பி ஆட்சியாளர்கள் சிறு தும்மல் போட்டால் கூட பெரிய விஷயமாய் போராட்டம் நடத்த ஆரம்பிப்பார்கள். (ஏற்கனவே பி ஜே பி யில் சிலரை தவிர வேறு யாருக்கும் அறிவோடு பேச தெரியாது - அண்ணாமலை மட்டுமே இதில் விதிவிலக்கு) ஏனென்றால் அவர்களுக்கு இடப்பட்ட அஜெண்டா குழப்பம் உண்டுபண்ணுவது மட்டும் தான். ஒரு விஷயத்தையும் ஆக்கம் செய்ய விடமாட்டாங்க. சிறு சாதீய பிரச்சினையையும் பெரிதாக்குவார்கள். சிறு மத விஷயத்தையும் உலகலாவிய பிரச்சினை போல் மாற்ற முயற்சி செய்வார்கள். நன்றாக சம்பாதித்து வைத்துள்ளார்கள். அவர்களுடைய பொழுது போக்கு போராட்டம் செய்வது மட்டும் தான். பின்பு அண்ணாமலைக்கு, சிறிதளவு நல்லது செய்வதற்கு கூட நிறைய போராடவேண்டியிருக்கும். நம் மக்களின் கூறுபாடு அவ்வளவு தான். ஒவ்வொன்றையும் விளங்க வைக்க வேண்டும். ஹிந்தி எதிர்ப்பு என்ற கோமாளி பிரச்சாரம் பிரதானமாயிடும். காவேரி தண்ணீருக்கு கூக்குரல் இடுவர். விவசாயம் அழிந்து விட்டது என்று அதிமுக வளர்மதி மேடம் கூட கத்துவார்கள். விலைவாசி கூடிவிட்டதாக போராட்டம் நடக்கும். வீரமணி, இதுவரை கம்முனு இருந்த கம்யூனிஸ்ட் பேட்டிகள் எல்லாம் பத்திரிகைகளில் பிரதானமாயிடும். முக்குக்கு முக்கு பிரச்சாரம் நடக்கும்.


venugopal s
பிப் 16, 2024 18:29

குரங்கு கையில் பூமாலையை கொடுத்தால் என்ன ஆகும்?


Rajagopal
பிப் 16, 2024 19:49

அதைத்தான் அண்ணாமலை சொல்கிறார். திராவிட குரங்குகள் கட்சி விட்டு கட்சி தாவி, மக்களிடம் இருப்பதையெல்லாம் பறித்து, கிழித்து எறிந்து செய்யும் அட்டகாசத்தை அடக்க வேண்டும். இந்த குரங்குகளை விரட்ட வேண்டும் என்பது முற்றிலும் உண்மை.


Barakat Ali
பிப் 16, 2024 19:58

வேணுகோபால் அவர்களே ......... அதனால்தான் உங்களிடம் மன்றாடுகிறோம் ......... இனி திமுகவுக்கு வாக்களிக்காதீர் .....


R.Balasubramanian
பிப் 16, 2024 17:50

நாம் திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து விலக வேண்டும். குடும்ப அரசியலை விடுத்து யார் மக்களுக்கு நல்லது செய்தாலும் வோட் போடலாம். பெரிய ஸலாம் அணைத்து திராவிட, கடவுள் மறுப்பு வந்தேறிகளுக்கும் அவர்கள் கொத்தடிமை கட்சி உறுப்பினர்களுக்கும்


செந்தமிழ் கார்த்திக்
பிப் 16, 2024 14:22

பாஜக கட்சி தமிழ்நாட்டு கடன் பற்றி பேச தகுதி உள்ளதா ?


செந்தமிழ் கார்த்திக்
பிப் 16, 2024 15:00

குறிப்பாக கடந்த பத்து வருடத்தில் பாஜக கட்சி வாங்கிய கடன் 110 லட்சம் கோடி. இந்தியாவின் மொத்த கடன் 157 லட்சம் கோடி.


Perumal
பிப் 17, 2024 01:31

If you are useless person Banks would not lend money for your development, but if start business and receiving profit Banks support you for further development, Like wise in Congress period India almost bankrupted country you know like Sri Lanka and Pakistan, That much of bad name in IMF and World bank ,After BJP came they settled Crude oil balance and paid world bank Interest regularly and also strong Government , All world companies ready to start factories in India, for that BJP government to develop infrastructure that is road facilities Railways modernized requested money from IMF and World Bank, This is Capital expenditure,in the long run return will be very big and also employment opportunities , But in Tamil Nadu Governments getting loan to spend money for free gifts to people , TV Mixy grinder like this, This is wasteful expenditure,


கனோஜ் ஆங்ரே
பிப் 16, 2024 13:30

அண்ணாமலை நீங்க சொன்ன மாதிரி வரும், எப்ப தெரியுமா..? இந்த படத்துல உங்க கைல இருக்குற கருவாடு... மீனாகி நீந்தினால், நீங்க சொன்னது நடக்கும்.


venugopal s
பிப் 16, 2024 13:21

கிளியை நன்றாக வளர்த்து பூனை கையில் கொடுக்கச் சொல்கிறாரா?


DHESIKAN
பிப் 16, 2024 17:10

இப்பவே பூணைக்கிட தான் இருக்கு


kuppusamy india
பிப் 16, 2024 11:52

மோடி தலைமையிலான அரசு நிச்சியம் ஆட்சிக்கு வரும்..... குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி ஒழியும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை