உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இருமொழி கொள்கை தமிழகத்தில் தோற்றுவிட்டது: அடித்து சொல்கிறார் அண்ணாமலை

இருமொழி கொள்கை தமிழகத்தில் தோற்றுவிட்டது: அடித்து சொல்கிறார் அண்ணாமலை

சென்னை; ''தி.மு.க.,வினரின் குழந்தைகள் மூன்றாவது மொழியை படிக்க வேண்டும்; ஆனால், அரசு பள்ளி மாணவர்கள் படிக்கக் கூடாதா,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:கடந்த, 1965ல் தமிழகத்தில் ஒரு மொழியை திணித்து, அதைத்தான் படிக்க வேண்டும் என, மக்களை கிளர்ச்சி அடைய செய்து, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. 2019, மே மாதம் புதிய கல்விக் கொள்கை சமர்ப்பிக்கப்பட்டது.

முதல் மொழி

அதில், இந்தியாவில் உள்ள அனைவரும் மூன்று மொழி கற்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.முதல் மொழி தாய் மொழி, இரண்டாவது ஆங்கிலம், மூன்றாவது ஹிந்தி என்று இருந்தது. இந்த வரைவு அறிக்கை, பிரதமர் மோடியிடம் வந்ததும், 'இது ஏற்புடையதல்ல, மூன்றாவது மொழி ஹிந்தியாக இருக்கக்கூடாது, இந்தியாவில் பிடித்த மொழியை கற்கலாம்' என்று கூறினார். அதற்கேற்ப, கல்விக் கொள்கை வெளியானது. பிரதமர் மோடி, தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில நலன் கருதி ஆட்சி செய்கிறார். இன்று, தமிழகத்தில், 1965ல் கொண்டு வந்ததை அப்படியே துாக்கி சுமக்கின்றனர். அரசு பள்ளிகளில், 52 லட்சம் மாணவர்களும், தனியார் பள்ளிகளில், 56 லட்சம் பேரும் படிக்கின்றனர். சி.பி.எஸ்.சி., உட்பட பல பாடத்திட்டங்களில் படிக்கின்றனர். இதன் வாயிலாக குறைந்தபட்சம், 30 லட்சம் மாணவர்கள், மூன்று மொழிகளை படிக்கின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் மகன், பிரெஞ்ச் படிக்கிறார்; இது, தவறில்லை. தி.மு.க.,வினரின் குழந்தைகள் மூன்றாவது மொழி படிக்க வேண்டும். ஆனால், அரசு பள்ளி மாணவர்கள் படிக்கக் கூடாதா? தமிழகத்தில் கல்வி, மொழியை வைத்து, இரு பிரிவு மக்களை உருவாக்கி விட்டனர். ஒரு தரப்பு மேலே செல்கிறது. கல்வித்தகுதி குறைவாக உள்ளவர்கள், கூலி வேலை, தோட்ட வேலை, துாய்மை பணியாளர்களாக வேலை செய்ய வேண்டும். தி.மு.க.,வினர் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் பல மொழிகளை படிக்கின்றனர். சீமான் தன் தேர்தல் அறிக்கையில் தமிழ், ஆங்கிலம், மூன்றாவது மொழி ஹிந்தி உட்பட உலக மொழியை கற்க வேண்டும் என, தெரிவித்துள்ளார். அதைத்தான் கல்விக் கொள்கை கூறுகிறது. ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் தான் படிக்க வேண்டும் என்று கல்விக் கொள்கை கூறுகிறது. இதை, அண்ணாதுரை, கருணாநிதி கூட செய்யவில்லை. தமிழகத்தில் ஆண்ட கட்சிகள், ஆளுங் கட்சிகள், புதிய கட்சிகள் என, அனைத்தும் ஒரு பக்கம் நில்லுங்கள். பா.ஜ., தனித்து நிற்கும். அரசு பள்ளிகளில், 52 லட்சம் மாணவர்களுக்கு மட்டும் ஏன் இருமொழி?

கடிதம்

பழனிசாமி, சீமான், விஜய் உட்பட அனைத்து கட்சி தலைவர்கள் மனதை தொட்டு, தங்கள் குழந்தைகள் எங்கு படிக்கின்றனர் என்று, வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள். ஸ்டாலின், தன் பேரக் குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கின்றனர் என்று தெரிவிக்க வேண்டும். பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்பதாக, தமிழக முன்னாள் தலைமை செயலர் கடிதம் எழுதினார். முதல்வருக்கு தெரியாமல் கடிதம் எழுத முடியுமா? மூன்று மொழிகளை ஆதரித்து பா.ஜ., நிற்கும். தி.மு.க.,வை நம்பிச் சென்றால், குழந்தைகள் போஸ்டர் ஒட்டத்தான் செல்வர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

spr
பிப் 18, 2025 19:14

வெளியுலகத் தொடர்புக்கு நாம் விரும்பியோ விரும்பாமலோ ஆங்கிலம் இருக்கிறது இது போதும் அவரவர் தேவை விருப்பத்திற்கேற்ப பிற மொழிகளைக் கற்றுக் கொள்ள பிற மொழிக்கல்வி நிலையங்கள் இருக்கின்றன.பிற மாநிலத்தவர் பலர் இங்கே வேலை செய்கிறார்களே .நம்மவர் பலர் பிற மாநிலங்களில் வேலை செய்கிறார்களே அவர்கள் சமாளிக்கவில்லையா . நாட்டை முன்னேற்ற கணிதம் விஞ்ஞானம் போன்ற பாடங்களை அகில உலகத்த தரத்துக்கு உயர்த்தினால் பலனுண்டு


sankaranarayanan
பிப் 18, 2025 18:51

பிரதமர் மோடியிடம் வந்ததும், ஹிந்தி மூன்றாவது மொழியாக கற்பது என்பது இது ஏற்புடையதல்ல, மூன்றாவது மொழி ஹிந்தியாக இருக்கக்கூடாது, இந்தியாவில் பிடித்த மொழியை கற்கலாம் என்று கூறினார். அப்படி பிரதமர் கூறியும் உங்களுக்கு என்ன சந்தேகம். ஹிந்தி இல்லாத ஒரு இந்திய மொழியை மாணவர்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்றுதான் மத்திய அரசு சொல்கிறது இதையும் ஏற்றுக்கொல்லாமல் இருப்பது அரசியல் செய்வதுதான் அர்த்தம். இதில் மாணவர்களை புதைகுழியில் தள்ளுவதற்கு சமம் .ஆனால் இவர்கள் புள்ளைகள் மட்டும் அந்நிய தேசத்து மொழியில் பாண்டித்தியம் பெறுவது பெருமை பட மட்டும் நன்றாக தெரிகிறது .ஊர் எப்படிக்கேட்டால் என்ன என் பிள்ளை அந்நிய மொழியில் தேர்ச்சி பெற்றுள்ளான் என்ற மமதை இதை அறவே ஒழிக்க வேண்டும். மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை மாணவர்கள் பயின்று தான் ஆக வேண்டும்


Narasimhan
பிப் 18, 2025 14:16

மலையாளி, தெலுங்கன் மற்றும் கன்னடன் ஹிந்தி கற்றுக் கொள்வதால் வட இந்தியாவிலும் வளைகுடா நாடுகளிலும் எளிதில் அங்குள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. இதே தமிழன் அங்கு சென்றால் பெப்பெ என்று முழிக்கவேண்டியிருக்கிறது. தகப்பன் மார்கள் டாஸ்மாக்கிலேயே குடியிருப்பதால் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கவலை கொள்வதில்லை.


Prabaharan
பிப் 18, 2025 14:11

இந்தி படிக்க சொல்லறீங்க படிச்சுட்டு என்ன பன்றது வடநாட்டுக்கு வேலைக்கு போறதா? அவங்களே வேலைக்கு இங்க தான் வர்றாங்க அவங்கள தமிழ் படிக்கச்சொல்லுங்க. தமிழ் நாட்டில படிச்சவங்க உலகளவில் நல்ல பதவியில் இருக்காங்க....


Ramesh Sargam
பிப் 18, 2025 13:21

அரசு பள்ளி மாணவர்கள் மூன்றாவது மொழி, ஹிந்தி மொழியை படிக்கக்கூடாதா? படியுங்கள். ஆனால் அரசு பள்ளியில் அல்ல. அரசு பள்ளியை விட்டுவிட்டு, நாங்கள் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளியில் சேர்ந்து படியுங்கள். அப்படி சேரவிருப்பமுள்ளவர்கள் நர்சரி அட்மிஷனுக்கு ஒரு ஐந்து லட்சம் கொண்டுவாருங்கள்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 13:11

அறிவுகெட்ட தனமாக, திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில் மட்டும் 3 மொழியா என்று பைத்தியம் மாதிரி பேசாதீர்கள். CBSE பாடத்திட்டப்படி, 5ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை 3 மொழிகள் னு இருப்பதால் அப்படி. தமிழ் நாட்டுப் பிள்ளைகளின் கல்வியை மறுத்து, நடுத்தெருவில் நிறுத்த பாஜக முயல்கிறது. தமிழ் நாட்டின் வளர்ச்சியை முடக்க பாஜக இறக்கும் அடுத்த சதித்திட்டம் தான் இது. இருமொழிக் கொள்கை தோற்றுவிட்டது ன்னு ப்ரௌட் கன்னடிகா எப்படி திடீர்னு கண்டுபிடித்தார். இந்திய மாநிலங்களிலேயே அதிகமா வேலையில்லாத் திண்டாட்டம் ஹரியானா, சன்டிகர், மேகாலயா.. என்கிற லிஸ்டில் தமிழ் நாடு இல்லை.


நிக்கோல்தாம்சன்
பிப் 18, 2025 12:51

படிக்காமல் ஊரு சுற்றிய உங்கள் துணைக்கு கேள்வி கேட்டாரே அண்ணாமலை அதற்க்கு என்ன பதில் ?


venugopal s
பிப் 18, 2025 11:39

நீங்கள் முதலில் ஒரு தேர்தலில் நின்று வெற்றி பெற முடியுமா என்று பாருங்கள், இரு மொழிக் கொள்கையின் வெற்றி தோல்வி பற்றி பிறகு யோசிக்கலாம்!


Velan Iyengaar
பிப் 18, 2025 11:32

எருது ஆண்பால்.... பசு பெண்பால் .... மேஜை பெண்பால் .....நாற்காலி பெண்பால் .....கப்பல் ஆண்பால் .....அஃறிணைக்கெல்லாம் பாலினம் அமைக்கும் அந்நிய நாட்டு மொழி ஜேர்மன். பிரெஞ்சு ... அரபி ...ஸ்பானிய மொழி போல போல தான் இந்த ஹிந்தி மொழியும் ... இந்தியாவின் பூர்வீக மொழி அல்ல... இது தான் இந்தி மொழி அலட்சணம்... இதுக்கு தான் அத்தனை நூறு கோடி ரூபாய் எழவு செய்து திணிக்கபார்க்கிறார்கள் .....


நிக்கோல்தாம்சன்
பிப் 18, 2025 12:54

தமிழகத்தில் ஒரு மதத்தினர் மாத்திரம் மிக தெளிவாக இந்தி படம் பார்ப்பார்கள், இந்தி மொழி பேசுவார்கள் அவர்கள் கல்வி சாலையில் இந்தி கலந்த மொழி தான் பேசுவார்கள், அந்த மதத்தினருக்கு சிறுபான்மை ஸ்டேட்டஸ் கூட உண்டு, எந்த மதம் என்று சொல்லுங்க பாப்போம் ?


Bahurudeen Ali Ahamed
பிப் 18, 2025 10:59

ஒரு பள்ளி வகுப்பறையில் 50 மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் பகுதி மாணவர்கள் மூன்றாவது மொழியாக தெலுங்கு படிக்க ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் பகுதி மாணவர்கள் மலையாளம் படிக்க ஆர்வப்படுகிறார்கள் என்றால் இரண்டு மொழி ஆசிரியரை நியமிப்பது சாத்தியமா? இதை வேறு முறையில் பார்ப்போம் தெலுங்கு படித்த ஒருவன் மும்பையில் வேலை செய்ய சென்றால் படித்த அந்த தெலுங்கு வேலைக்காகாது மலையாளம் படித்தவன் ஆந்திரா சென்றால் அதுவும் வேலைக்காகாது, ஆனால் ஆங்கிலம் அவனுக்கு எங்கு சென்றாலும் கைகொடுக்கும், மேலும் வேலை விஷயமாக வெளியில் செல்லும்போது அந்தந்த பிராந்திய மொழிகளை கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம், அப்படித்தான் நானும் ஹிந்தி மலையாளம் மற்றும் கன்னடம் கற்றுக் கொண்டேன், வடநாட்டிலிருந்து இங்கு வரும் சகோதரர்கள் தமிழை கற்றுக்கொண்டு நன்றாகவே பேசுகிறார்கள், இங்கு யாரும் மற்ற மொழிகளுக்கு எதிரானவர்கள் கிடையாது தேவைப்படுபவர்கள் கற்றுக்கொள்ள தடையில்லை


Velan Iyengaar
பிப் 18, 2025 11:32

பிரமாதமான கருத்து


V வைகுண்டேஸ்வரன்
பிப் 18, 2025 13:05

அற்புதம். சிறந்த கருத்து.


சமீபத்திய செய்தி