உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிஎன்பிஎஸ்சி.,க்கு 5 உறுப்பினர்கள் நியமனம்

டிஎன்பிஎஸ்சி.,க்கு 5 உறுப்பினர்கள் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : டி.என்.பி.எஸ்.சி.,க்கு 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து உள்ளார்.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் தேர்வு செய்யப்பட்டு, கவர்னர் ஒப்புதலுடன் நியமிக்கப்படுகின்றனர். இதில், ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களுடன் செயல்பட வேண்டிய டி.என்.பி.எஸ்.சி., தற்போது தலைவர் இன்றி, வெறும் 4 உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. தற்போது உறுப்பினர் முனியநாதன், தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.இந்நிலையில், மேலும் 5 பேரை டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கவர்னர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.இதன்படி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவனருள்ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி சரவணகுமார்உஷா குமார்டாக்டர் தவமணி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள், 62 வயது அல்லது 6 ஆண்டுகள் வரை பதவியில் இருப்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
பிப் 16, 2024 14:55

நேர்மையாக செயல்பட்டு தகுதியும் திறமையும் இருப்பவர்களுக்கு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்


vadivelu
பிப் 16, 2024 18:26

சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு இடம் கொடுத்து இருக்கலாமே.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை