உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மலாயா பல்கலையில் செஞ்சி பேராசிரியர் நியமனம்

மலாயா பல்கலையில் செஞ்சி பேராசிரியர் நியமனம்

செஞ்சி: மலேசிய நாட்டில் கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ள திருவள்ளுவர் இந்திய ஆய்வுகள் இருக்கையில் தொடக்க இருக்கை பேராசிரியராக செஞ்சி அடுத்த நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்த பேராசிரியர் செல்லப்பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இது குறித்து மலேசியாவிற்கான இந்திய உயர் ஆணையகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கடந்த 2024 ம் ஆண்டு மலேசிய பிரதமர் அன்வர்பின் இப்ராஹீம் இந்தியா வருகை தந்த போது, இந்திய பிரதமர் மோடி மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இந்தியா ஆய்வுகள் இருக்கை தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் மலாயா பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டுள்ள திருவள்ளுவர் இந்திய ஆய்வுகள் இருக்கை துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இருக்கையின் முதல் பேராசிரியராக 30 ஆண்டு காலம் மானுடவியல் பேராசிரியராக பணிபுரிந்து, சிறந்த ஆய்வாளராகவும், கல்வியாளராகவும் இருந்து வரும் பேராசிரியர் செல்லபெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R. THIAGARAJAN
நவ 04, 2025 14:59

ஐயா அவர்களின் மதிப்புமிக்க தமிழ்த் தொண்டுக்கு எனது உளமகிழ்ந்த வாழ்த்துக்கள் தமிழக அரசு ஐயாவின் தமிழ்ச் சேவைக்கு உறுதுணையாகவும் வண்ணம் வரும் குடியரசு தின விழாவில் ஐயா அவர்களுக்கு திருவள்ளுவர் விருது வழங்க வேண்டும். இதுவே தமிழக அரசு தமிழுக்கு செய்யும் சிறப்பு. தமிழ் வாழ்க என்று போர்டு வைத்தால் மட்டும் சரியாகாது. தமிழ் அறிஞர்களை கொளரவப்படுத்தினால் தான் அவர்களின் சேவையின் பலன் கிடைக்கும். பள்ளிப் பாட புத்தகத்தில் வாழும் தமிழ் அறிஞர்கள் என்று தலைப்பிட்டு எல்லா தமிழ் அறிஞர்களின் தமிழ்ச் சேவையை மாணவர்கள் கற்று அறிந்தால் தான் தமிழ் தொன்மை அறிய இயலும். அதோடு ஆண்டுதோறும் மாநில அளவில் பள்ளி மாணவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் பங்கேற்க்கும் வகையில் தமிழ் மாநாடு தவறாமல் செயல் படுத்த வேண்டும். தமிழ் வளர்ப்போம் நல்ல தமிழாறாய் வாழ்வோம்


R.Jayaraman
நவ 01, 2025 09:57

வாழ்த்துக்கள் .