உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏமாளிகளா கிரிக்கெட் ரசிகர்கள்? ஐ.பி.எல்., டிக்கெட் கட்டண வசூலில் முறைகேடு நடப்பதாக புகார்!

ஏமாளிகளா கிரிக்கெட் ரசிகர்கள்? ஐ.பி.எல்., டிக்கெட் கட்டண வசூலில் முறைகேடு நடப்பதாக புகார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான டிக்கெட் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதால், கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.நாடு முழுவதும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. ரசிகர்கள் ஆர்வத்துடன் போட்டிகளை கண்டு ரசித்து வருகின்றனர். போட்டிகளை காணும் ஆர்வத்தில் வரும் ரசிகர்களை ஏமாற்றி, கூடுதலாக கட்டணம் வசூலித்து முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழகத்தில் கேளிக்கை வரி, அடிப்படைக் கட்டணத்தில் 25 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்த போது, 2343 ரூபாய் அடிப்படை கட்டணம் கொண்ட ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுக்கு கேளிக்கை வரி 781 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது நியாயமாக வசூலிக்கப்பட வேண்டிய வரியைக் காட்டிலும் 196 ரூபாய் அதிகம் என்கின்றனர் ரசிகர்கள். அதேபோல, கேளிக்கை வரிக்கும் சேர்த்து ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வரி மீது வரி விதிப்பு செய்து கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளனர். இதனால், 2343 ரூபாய் அடிப்படை கட்டணம் கொண்ட ஐ.பி.எல்., டிக்கெட், ரசிகர் கடைசியில் வாங்கும் போது 4,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட்டில் உரிய கட்டணம், வரி தொடர்பான பிரேக் அப் விவரங்களும் இல்லை.கிரிக்கெட் போட்டியை காண ஆர்வத்துடன் வரும் ரசிகர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில் இத்தகைய முறைகேடான கட்டண வசூல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நியாயமாக, டிக்கெட் கட்டணம், அதன் மீதான கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றுடன் மொத்த கட்டணத்துக்கு சரியான பிரேக் அப் வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Ramaswamy Jayaraman
ஏப் 01, 2025 11:38

ipl என்பதே ஏமாற்று வேலை. இது 18 வருடங்களாக நடக்கிறது. பணம் கொள்ளை போகிறது. என்ன நடக்கிறது என்பது தெரியாமலே மக்கள் டோனியை கடவுளாக பார்க்கின்றனர். சூதாட்டம் உச்ச கட்டத்தில் நடக்கிறது. இதில் டிக்கெட்டை பற்றி பேசுகின்றனர். யார் யாரோ பணம் செய்யும்பொழுது அரசாங்கமமும் பணம் செய்கிறது. யார் உங்களை ரூபாய் 4000 கொடுத்து டிக்கெட் வாங்க சொன்னார்கள். பணம் கொழுத்து வாங்கிவிட்டு குற்றம் சொல்கிறீர்கள்.


venugopal s
மார் 31, 2025 17:59

ஐ பி எல் என்பதே ஒரு ஏமாற்று வியாபாரம்.அதிலும் இந்த சி எஸ் கே,தோனி ரசிக பைத்தியங்கள்தமிழகத்துக்கே அவமானச் சின்னம்.


SIVA
மார் 31, 2025 17:36

ipl மீனிங் இந்தியன் பைத்தியக்கார லீக் ..... காரணம் பௌண்டரி லைன் டிஸ்டன்ஸ் குறைவு , இம்பாக்ட் பிளேயர் , .... இந்த தொடர் முழுவதும் வியாபார நோக்கம் மட்டுமே ...


J.Isaac
மார் 31, 2025 17:12

சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கூட்டம் கிறுக்கு பிடித்து அலைகிறது.


Narasimhan
மார் 31, 2025 15:37

IPL முழுக்க முழுக்க சூதாட்டம் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை/


J.Isaac
மார் 31, 2025 17:10

உண்மை. அதுவும் மாணவர்கள் தேர்வு எழுதும் மாதங்களில் நடத்துவது பெரிய கொடுமை.


Sampath Kumar
மார் 31, 2025 14:35

கிரிக்கெட் விளையாட்டால் சூதாட்டக்காரர்களுக்கு தான் நன்மை பார்வையாளர்கள் முட்டாள்களே


Kundalakesi
மார் 31, 2025 14:33

Many commented not to see live match in ground. Its individuals interest. Adult going to party meeting which tele in TV. You can watch there. Going to temple, watch online. So there is a feel which you can get when done in such places like temple etc


Mohanakrishnan
மார் 31, 2025 13:53

வியாபார விளையாட்டுக்கு கூடுதலாக பணம் வாங்கினால் தப்பில்லை திருந்தும் வரை இப்படித்தான்


sankaranarayanan
மார் 31, 2025 12:50

இதெல்லாமே திராவிட மாடல் அரசியிலில் சகஜமப்பா ஏன் யாருக்கு என்று ஒரு கேள்வியும் யாரும் கெடக்கூடாது கேட்டால் பங்கு போயிடும்


J.Isaac
மார் 31, 2025 20:40

இது அமித்ஷா மாடல்


RAVINDRAN.G
மார் 31, 2025 12:41

எதுக்கு அதிக காசு செலவு பண்ணி கிரிக்கெட் பார்க்கணும். முடிஞ்சா டிவி ல பாருங்க தெளிவா பார்க்கலாம் . டிவி இல்லேன்னா மின்சார செலவும் மிச்சம். மொபைல் ஆப் வந்துடுச்சு. தினமலர் ஆப் டவுன்லோட் செய்து செய்தியை பார்க்கலாமே. அந்த பணத்தை கொண்டு ஏதாவது உருப்படியான காரியங்களுக்கு செலவு செய்யலாம்.