உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விசாரணைக்கு பிறகு அர்ஜூன் சம்பத் மகன் விடுவிப்பு

விசாரணைக்கு பிறகு அர்ஜூன் சம்பத் மகன் விடுவிப்பு

கோவை: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜியிடம் கோவை போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்புவதாக வார பத்திரிகை ஒன்றை கண்டித்து கோவையில் கடந்த 27 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஓம்கார் பாலாஜி, அந்த பத்திரிகை ஆசிரியரை மிரட்டும் வகையில் பேசியதாக, அப்துல் ஜலீல் என்பவர் போலீசில் புகார் அளித்து இருந்தார். இதனடிப்படையில், ரேஸ்கோர்ஸ் சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து ஓம்கார் பாலஜி சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் தாக்கல் செய்து இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=75nwha8c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், நேற்று அவரை போலீசார் கைது செய்ததாக இந்து மக்கள் கட்சி கூறியுள்ளது. இதனை கண்டித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.ஆனால், ஓம்கார் பாலாஜி கைது என்பதை போலீசார் மறுத்துள்ளனர். அவரிடம் விசாரணைக்கு பிறகு போலீசார் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
நவ 10, 2024 18:53

கிறித்துவ பிச்சை அரசு என்று அன்று சொன்னது இப்போது சிறிய மாற்றத்துடன், கிறித்துவ பிச்சை அரசு மற்றும் மார்க்க பிச்சை அரசு என்று காட்டிய திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு அடிமை போலீஸ் துறை வால்க


Smba
நவ 10, 2024 12:14

புகார் குடுத்தது யாருனு பார்க்கவும்