உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 17 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 17 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பெரம்பூரில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேரை கைது செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=niwwkvmy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில் ரவுடி திருவேங்கடம் போலீசில் இருந்து தப்பி ஓட முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைமறைவாக இருந்த சீசிங் ராஜா சமீபத்தில் கைது செய்யப்பட்டு என்கவுன்டர் செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 27 பேர் மீதும், செம்பியம் காவல்நிலைய போலீசார், 4,832 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை, எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.தற்போது, நாகேந்திரன் உள்பட 17 பேர் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 06) 17 பேரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்து, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.''குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால், அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது. வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டே ஜாமின் மனுக்களை பரிசிலீக்க வேண்டும்'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

நீதிகுமார்
ஆக 06, 2025 23:52

ஆம்ஸ்ட்ராங்கே நாலு ஆளுங்களை வெச்சு தன் கதைய முடிக்கச் சொல்லியிருப்பாருன்னு நினைக்குறேன். அதே மாதிரி நீதிமன்றங்களும் நினைக்கலாம். அபாவிகள் மீது க்ய்ண்டர் சட்டமா? அநியாயம். கேசை 2047 க்கு தள்ளி வெச்சு ஜாமீன் குடுக்கணும் யுவர் ஆனர்.


கத்தரிக்காய் வியாபாரி
ஆக 06, 2025 19:12

இவர்களுக்கு தினமும் இருநூறு ரூபாய் குடுத்து திமுகவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அனைத்து மொள்ளமாரிகளும் ஒரு பக்கம் இருங்கள்.


Shekar
ஆக 06, 2025 15:06

அந்த 17 பேருக்கும், சமூகநீதி மற்றும் அமைதிக்கான விருது அண்ணா பிறந்தநாளில் வழங்கப்படலாம்.


selva kumar
ஆக 06, 2025 15:02

"It is better that the honourable court releases these innocent individuals so they can resume their noble professional duties."


RAAJ68
ஆக 06, 2025 14:08

ஆம்ஸ்டராங் யாரும் கொலை செய்யவில்லை அவரே அறிவாளால் வெட்டிக் கொண்டார் என்று தீர்ப்பு கொடுங்கள்


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஆக 06, 2025 13:26

இப்படி நீதிமன்றங்கள் இருந்தா எங்கே சட்டம் ஓழுங்கை பாதுகாப்பது சொல்லுங்க ஊடகம்


மணி
ஆக 06, 2025 11:57

என்ன சட்டமோ என்ன நீதியோ ஒரு எளவும் சரியில்ல விடியலும் தான்


முக்கிய வீடியோ