உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல் களம்...சூடுபிடித்தது!: வசைபாடலுடன் ஆட்டம் துவங்கியது

அரசியல் களம்...சூடுபிடித்தது!: வசைபாடலுடன் ஆட்டம் துவங்கியது

சென்னை:பா.ஜ., -- அ.தி.மு.க., கூட்டணி உறுதியானதால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த கூட்டணி உருவானால், தங்கள் ஓட்டு சதவீதம் பாதிக்கப்படும் என்ற பீதியில் முதல்வர் ஸ்டாலின், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, வி.சி., தலைவர் திருமாவளவன், த.வெ.க., தலைவர் விஜய் உள்ளிட்டோர், கூட்டணியை விமர்சிக்கும் ஆட்டத்தை துவங்கி உள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், சென்னையில் நேற்று முன்தினம், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி செய்தார். இது, தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dlkyyeci&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

விரும்பவில்லை

பா.ஜ., -- அ.தி.மு.க., கூட்டணி ஏற்படக்கூடும் என்ற யூகங்கள் எழுந்தபோதே, அது சட்டசபையில் எதிரொலித்தது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை பார்த்து, 'உங்கள் கூட்டணி கணக்குகளை, வேறு யாரோ போட்டுக் கொண்டிருக்கின்றனர்' என்று கிண்டல்அடித்தார்.அதற்கு பதிலளித்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி, 'எந்த கூட்டணி கணக்கிலும் நாங்கள் ஏமாற மாட்டோம்' என்றார். உடனே முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு, 'நீங்கள் ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்' என்றார். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சிகளாக விளங்கும் அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் கைகோர்ப்பதை, ஆளும் தி.மு.க., விரும்பவில்லை என்பதே இதன் வெளிப்பாடு என, தமிழக பா.ஜ.,வினர் விமர்சித்தனர்.இந்நிலையில், கூட்டணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானதும், அறிவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அவசர பேட்டியில், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி, 'இனி ஒருபோதும் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன பழனிசாமி, இப்போது கூட்டணி வைத்து விட்டார். தமிழக மக்களுக்கு அவர் துரோகம் செய்து விட்டார்' என்றார்.அதைத் தொடர்ந்து நேற்று முதல்வர் ஸ்டாலின், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, வி.சி., தலைவர் திருமாவளவன், த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோர், பா.ஜ., -- அ.தி.மு.க., கூட்டணியை வசைபாடி வரிசையாக கருத்து தெரிவித்தனர்.முதல்வர் ஸ்டாலின்: அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி என்பது தோல்வி கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்கு கொடுத்தவர்கள் தமிழக மக்கள். இதே தோல்வி கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மறக்கவில்லை

கூட்டணி என்பது அவர்களது விருப்பம் சார்ந்தது. ஆனால், எதற்காக இந்தக் கூட்டணியை உருவாக்கினர்; எந்த கொள்கையின் அடிப்படையில் கூட்டணி சேர்ந்துள்ளனர் என்று சொல்லவில்லை. அ.தி.மு.க., தலைமையையும் அவர் பேச அனுமதிக்கவில்லை. பதவி மோகத்தில், தமிழகத்தின் சுயமரியாதையை, தமிழகத்தின் உரிமைகளை, டில்லியிடம் அடமானம் வைத்து, தமிழகத்தை பாழாக்கியவர் தான் பழனிசாமி என்பதை யாரும் மறக்கவில்லை. அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை உறுதி செய்ததே ஊழல் தான் என்பதை தமிழக மக்கள் அறிவர். இரண்டு, 'ரெய்டு'கள் நடந்தவுடன், அ.தி.மு.க.,வை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழகத்தை அடமானம் வைக்கத் துடிக்கின்றனர். பா.ஜ., தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும், தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கின்றனர். சுயமரியாதையின்றி டில்லிக்கு மண்டியிட்டு, தமிழகத்தை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்திற்கு, தமிழக மக்கள் தக்க விடையளிப்பர்.த.வெ.க., தலைவர் விஜய்: தி.மு.க.,வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கனவே தயார் செய்துவிட்ட பா.ஜ., இப்போது பழைய பங்காளியான அ.தி.மு.க.,வை பகிரங்க கூட்டாளியாக கைப்பிடித்துள்ளது. ஏற்கனவே மூன்று முறை தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட, ஒரு நிர்ப்பந்த கூட்டணி மீண்டும் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணிக்கு தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து துாக்கி எறியப் போவது உறுதி. வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., -- த.வெ.க., இடையே தான் போட்டி. ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: கூட்டணியை அமித் ஷா அறிவித்தபோது, உடனிருந்த பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனசாமியாக இருந்தார். இந்த கூட்டணி, நான்கு மாதங்கள் நிலைக்குமா என்பது தெரியாது.வி.சி., தலைவர் திருமாவளவன்: தமிழகத்தில் தனித்து போட்டியிடும் சக்தி இல்லாத பா.ஜ., தலைமை, அ.தி.மு.க., மீது சவாரி செய்கிறது. இரண்டு திராவிட கட்சிகளில், ஒரு கட்சியை தோழமை கட்சி என்ற பெயரில் அரவணைத்து கொண்டே, அவர்களை வீழ்த்த வேண்டும் என்பது தான், பா.ஜ.,வின் உண்மையான செயல் திட்டம்.இவ்வாறு அவர்கள், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை விமர்சிக்கத் துவங்கியுள்ளனர்.

'ஸ்டாலினுக்கு இறங்கிய இடி'

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனி சாமி வெளியிட்டுள்ள அறிக்கை:தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், தினமும் என்ன பிரச்னை வரப்போகிறதோ என்று, தன் துாக்கம் தொலைந்து விட்டதாக, ஒருமுறை தி.மு.க., பொதுக்குழுவில் சொன்னார். சில நாட்களுக்கு முன், அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு, அவர் துாக்கத்தை கெடுத்தது. இன்றோ, அ.தி.மு.க.,வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து, அவருக்கு இறங்கியுள்ளது போலும். பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். 'தமிழக நலனுக்கான குறைந்தபட்ச செயல் திட்டம் இருக்கும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அறிவித்திருந்தார். 'என்னவா இருக்கும்...' என்று, இரவு முழுக்க துாக்கத்தை தொலைத்த முதல்வர் ஸ்டாலின், காலையில் தன் மொத்த வரலாற்றுப் பிழைகளையும், வெற்று நாடகங்களையும் தொகுத்து, அறிக்கையாக வெளியிட்டு விட்டார்.முதல்வர் ஸ்டாலின் ஓட்டிய திரைப்பட, 'ரீல்' முடியும் நேரம் வந்துவிட்டது. அ.தி.மு.க., ஒருபோதும் தமிழகத்தை, நம் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காது. மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும். அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி வாகை சூடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 55 )

vadivelu
ஏப் 14, 2025 04:27

திஹார் சிறைக்கு செல்ல கூடியவர்கள் தமிழகத்தில் அதிகம் என்கிறீர்கள். திருடர்கள் செல்லட்டும்.


தாமரை மலர்கிறது
ஏப் 14, 2025 00:56

தனியே நின்றால் ஜெயிக்க முடியாது என்று தெரிந்து தான் அதிமுக பிஜேபி தலைமையிலான கூட்டணிக்கு வந்தது. இப்போது பிஜேபி அணி ஜெயித்துவிடும் என்ற பயம் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது. திமுகவினர் கண்டபடி உளற ஆரம்பித்து விட்டார்கள். விஜய்யும் பிஜேபி அணிக்கு வருவது, வளர்ந்துவரும் அவரது கட்சிக்கு நல்லது. இல்லையெனில் சீமான் கதை தான். ஜீரோ தான் ரிசல்ட்.


Ganesan
ஏப் 13, 2025 22:02

திகார் ஜெயிலுக்கு போகாமல் இருக்க வேண்டுமானால், பழனிசாமி, மீண்டும் தரையில் தவழ்ந்து தான் போக வேண்டும், மேடம் .


Bala
ஏப் 13, 2025 23:58

பழனிச்சாமி ஜெயிலுக்கு போவது இருக்கட்டும். 2026 தேர்தலுக்கு முன் சில திமுக அமைச்சர்கள் ஊழலுக்காக ஜெயிலுக்கு போவது உறுதி


Ganesan
ஏப் 13, 2025 22:01

மானமுள்ள எவரும் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்


vadivelu
ஏப் 14, 2025 04:28

பார்க்கலாம்.


Ganesan
ஏப் 13, 2025 21:59

ராமநாதபுரத்தில்.உள்ள.தேவர்.சமூக.மக்கள்..தஞ்சை.பகுதி.மறவர்கள்...இன்னும்.மதுரை.பகுதி.முக்குலத்தோர்.எல்லோரும்...இவரை.....ஆதரிப்பார்கள்.நமது.சமூக.தலைவர்...என்று...பார்பார்களா.......அப்படி.ஒரு.சூழ்நிலை......இங்கு.கிடையாது.......... மறுக்க.முடியாத.நிசமும்.உள்ளது....


N.Purushothaman
ஏப் 13, 2025 19:45

இந்த தேர்தலுடன் அரசியல் விமர்சர்களால் செல்லமாக அழைக்கப்படும் அணிலு கட்சி காணாமல் போவும்... ..


Thetamilan
ஏப் 13, 2025 18:43

சா, மோடி ,பழனிச்சாமி ஆகியோரின் வசை பாடலுடன்தான் இந்த கூட்டமே ஆரம்பித்தது.வசைபாடலுடன்தான் கூட்டமும் நடந்தது. முடிந்த பின்பும் வசைபாடலுடன்தான் இனியும் இருக்கிறது


Dharmavaan
ஏப் 13, 2025 15:44

விஜய் கட்சியால் கண்டிப்பாக ஓட்டுகள் பிரியும் .திமுகவுக்கு ஆதி விழும் மேலும் அதிமுக கூட்டணியால் இன்னுமடி பலமாக இருக்கும்


Oviya Vijay
ஏப் 13, 2025 15:43

பிஜேபியுடன் அதிமுக கூட்டணி என்று அறிவிப்பு வெளியானவுடனேயே எனக்குள் குதூகலம் ஏற்பட்டு விட்டது... ஏனெனில் நான் பலமுறை கூறிவருகிறேன்... ஒரு வலுவான கட்டமைப்புடன் கூடிய கட்சி என்றால் இப்போதைக்கு திமுக தவிர்த்து தமிழகத்தில் வேறு எதுவுமே இல்லை என்று... ஜெயலலிதா இருந்த வரையில் திமுக போன்றதொரு மிக வலிமையான கட்டமைப்புடன் அதிமுகவும் இருந்தது... ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு கட்சி இப்போது சின்னாபின்னமாகி சிதறிக் கிடக்கிறது... இதை இல்லையென்று இங்கே யாரேனும் மறுத்திடுவீரோ... இந்நாள் வரையில் சங்கிகள் தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அண்ணாமலையை கூட்டணி வேண்டும் என்பதற்காக கட்சித் தேசியத் தலைமையே அவரை ஓரங்கட்டிவிடத் துணியும் அளவிற்கு புதிதாக கூட்டணிக்குள் உள் நுழையும் கட்சி நிபந்தனை விதிக்கிறார்கள் என்றால் இதற்குப் பெயர் கூட்டணியோ... நான் சில நாட்களுக்கு முன் குறிப்பிட்ட படி தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம் முழுமையாக இருக்கும் இந்த சூழ்நிலையில் இப்போதே கூட்டணியை அறிவித்திருப்பது மிகப்பெரிய தவறு என்று... ஏனென்றால் அது இந்த கூட்டணியை இந்த முழுமையான ஒரு வருடத்தில் மிகவும் பலவீனப்படுத்திவிடும்... மக்களிடத்தில் இந்த கூட்டணியை எள்ளி நகையாடச் செய்திடும்... அதை ஏன் இவர்கள் உணரவில்லை என்றே தெரியவில்லை... ஆக மொத்தத்தில் இந்த கூட்டணியை மக்கள் முழுவதுமாக புறந்தள்ளிவிட்டு புதுக் கட்சியான தவெக மீது மக்கள் கவனம் திரும்பும்... நடிகர் என்பதால் மீடியாவே அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும் இலவசமாக விளம்பரப்படுத்தும்... ஆக மொத்தத்தில் திமுக எதிர்ப்பாக உள்ள ஓட்டுக்கள் புதிய கட்சிக்குத் தான் பரீட்சார்த்த முறையில் செல்லுமே தவிர அந்த ஓட்டுக்கள் ஒருநாளும் கண்டிப்பாக நமத்துப் போன அதிமுக பிஜேபி கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை... இந்த ஒரு வருட காலத்தில் என்ன என்னவெல்லாமோ நடக்கலாம்... கடைசித் தருணத்தில் பிஜேபி அதிமுக இடையில் வாய்க்கால் தகராறு ஏற்பட்டு தேர்தலுக்கு முன்பாகவே கூட்டணி முறிந்து அதிமுக தவெக பக்கம் சாய்ந்தாலும் சாயக்கூடும்... திமுக ஒருவேளை விடுதலை சிறுத்தைகளை சமாதானப் படுத்தி பாமகவையும் உள்ளே கொண்டு வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு... பொறுத்திருந்து பார்ப்போம்... என்ன நடக்கிறதென்று... என் கவலை எல்லாம் இங்கே அதீத நம்பிக்கையுடன் அதிமுக பிஜேபி கூட்டணி வெல்லும் என்ற நம்பிக்கையில் இருப்பவர்களைப் பற்றியது தான்... தாங்கள் மிகப்பெரிய மாபெரும் கூட்டணி அமைத்துள்ளோம் என்று புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கும் சங்கிகள் 2026 தேர்தல் முடிவுகள் வரப்போகும் நாளில் அடையப்போகும் அதிர்ச்சியை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை... நான் பலமுறை அவர்களுக்கு கூறிவருவதைப் போல இதயம் பத்திரம்...


Bala
ஏப் 13, 2025 20:37

ஜோசப் விஜய் இன்னொரு கமல ஹாசன். இப்படித்தான் கமலும் வீராவேசமாக திமுகவிற்கு எதிராக வசனம் பேசி கட்சி நடத்தி தேர்தலை எதிர்கொண்டார். திமுகவுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்பதை உறுதியாக சொல்ல முடியுமா என்று ரங்கராஜ் பாண்டே கேட்ட பொது, இப்போதே சொல்லிவிடுகிறேன் என்று கூட்டணி கிடையாது என்று சொல்லி பிறகு தேர்தல் பணமெல்லாம் தீர்த்த பிறகு உதய நிதியை கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு தன் கட்சியை திமுகவிடம் ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக அடமானம் வைத்த கதையை மறந்திருக்க மாட்டீர்கள். தமிழக மக்களும் மறக்க வில்லை. ஆக 2026 தேர்தலில் ஜோசப் விஜய் கட்சி தோல்வி அடைந்த பின் திமுக விடம் கட்சி அடமானம் வைக்கப்படும்


enkeyem
ஏப் 13, 2025 15:19

தி மு க கொத்தடிமைகளின் கதறல் ஆரம்பமாகிவிட்டது.. இவர்களின் கதறல் தினம் தினம் தொடரட்டும்


சமீபத்திய செய்தி