உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 22ம் தேதி முதல் உரிமையுடன் கேளுங்கள்; மருந்துகளுக்கு 5 சதவீதம் மட்டுமே வரி

22ம் தேதி முதல் உரிமையுடன் கேளுங்கள்; மருந்துகளுக்கு 5 சதவீதம் மட்டுமே வரி

சென்னை: 'மருந்து கடைகளில் ஏற்கெனவே இருப்பில் உள்ள மருந்துகளையும், 5 சதவீத வரியின் கீழ் குறைந்த விலைக்கு, வரும் 22ம் தேதி முதல் வாங்கிக் கொள்ளலாம்,' என, இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஜெ.ஜெயசீலன் கூறியதாவது: மக்கள் வாங்கும் அனைத்து மருந்துகளும், தற்போது, 5 சதவீத வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏற்கெனவே விலை அச்சிடப்பட்ட மருந்து அட்டைகளில், மீண்டும் புதிய விலையை ஒட்டுவது இயலாத காரியம். அந்த மருந்துகளை, புதிய வரி விதிப்பின்படி குறைந்த விலையில், மக்களுக்கு வழங்க முடியும். அதனை எவ்வாறு செயல்படுத்துவது, ஏற்கெனவே உள்ள வரி நடைமுறையில், கொள்முதல் செய்த மருந்துகளை, குறைந்த விலையில் விற்றால் ஏற்படும் இழப்பை எவ்வாறு ஈடுகட்டுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பல்வேறு அறிவுறுத்தல்களும், பரிந்துரைகளும், மருந்து விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எனவே, மக்களுக்கு வரும் 22ம் தேதி முதல் வரிச் சலுகை பலன்கள் கிடைப்பதில் எந்த தடையும் இருக்காது. இருப்பில் உள்ள மருந்துகளை வாங்கினாலும், அதனை 5 சதவீத வரியின் கீழ் வழங்குமாறு, வாடிக்கையாளர்கள் உரிமையுடன் கேட்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

சுந்தரம் விஸ்வநாதன்
செப் 20, 2025 09:49

அடுத்த முறை நீங்கள் மருந்து வாங்கினால் பில்லை சரிபார்க்கவும். எம் ஆர் பி க்கும் மேல் வரி போட்டு அதன் பின் தள்ளுபடி என்று பத்து சதவீதம் இருக்கும். என்னுடைய குற்றச்சாட்டே எம் ஆர் பி க்கு மேல் வரி போடுவது கொள்ளை என்பதுதான்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 20, 2025 19:56

சில மூஞ்சிகளை பாத்தாலே போட்டுப் பாக்க தோணும். அப்படி தான் தெரியுது


SIVA
செப் 21, 2025 20:09

நீங்கள் பில் போட்டு தானே மருந்து வாங்குகின்றீர்கள் அந்த பில் காப்பிய GST போர்ட்டலில் UPLOAD செய்யுங்கள் ......


ஜெய்ஹிந்த்புரம்
செப் 20, 2025 08:49

பொதுவாக எல்லா மருந்துக்கடைகளில் 10 முதல் 15 சதவீதம் வரை சும்மாவே தள்ளுபடி பண்ணி தருவாங்க. அவன் கிட்டே போயி வாண்ட்டடா 5% வரி ன்னு உரிமையா கேட்டா அதுக்கென்னன்னு கும்பிட்டு கொடுப்பாப்புலே, "நமக்கு வாய்த்த கஸ்டமர் நல்லவர் ன்னு சந்தோசப்படுவாப்புலே.


அப்பாவி
செப் 20, 2025 08:15

மருந்து விலையை ஏத்திட்டு அஞ்சு பர்சண்ட் டிஸ்கவுண்ட் குடுபாங்க ஹை.பை நிறைய பணம் பொறளும் .


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 20, 2025 08:03

மருந்துகளின் மீது அச்சிடப்பட்டுள்ள எம் ஆர் பி என்பது வரிகளும் உள்ளடக்கிய விலை .ஆனாலும் மருந்துக்கடை கொள்ளையர்கள் நாம் மருந்து வாங்கும்போது எம் ஆர் பி விலையை போட்டு அதற்கு மேல் வரியை கணக்கிட்டுத்தான் வாங்குகிறார்கள். நான் பலமுறை பல மருந்து கடைகளில் வாதம் செய்து பார்த்துவிட்டேன் .


SIVA
செப் 20, 2025 08:30

எதாவது எழுத வேண்டும் என்று என்பதற்க்காக எழுதாதீர்கள் mrp விலையை விட ஒரு பைசா அதிகம் வாங்கினால் 20000 ரூபாய் அபராதம் , இன்று mrp இல் இருந்து தள்ளுபடி கொடுக்கமால் விற்கும் கடைகளை விரல் விட்டு எண்ணி விடலாம் , நீங்களே எழுதி உள்ளேர்கள் வரி சேர்த்து தான் mrp என்று , அப்படி mrp விட நீங்கள் அதிகம் பணம் கொடுத்து வாங்கி இருந்தால் நீங்கள் தான் ஏமாளி ........


Indian
செப் 20, 2025 07:21

டயபடிஸ் மற்றும் ரத்த அழுத்த குறைபாடுகளுக்கான மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கலாம்


Kasimani Baskaran
செப் 20, 2025 07:15

மறு[ரு அல்ல]த்துவமனைகளை இது போன்ற உத்தரவு மூலம் கட்டுப்படுத்த முடியாது என்பதை அறிவது அவசியம்.


புதிய வீடியோ