உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சட்டசபை ஒத்திவைப்பு

 சட்டசபை ஒத்திவைப்பு

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரலில் நடக்க உள்ளது. இதையொட்டி அரசின் செலவினங்களுக்காக, இடைக்கால பட்ஜெட் கடந்த 17ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறைக்கும், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றின் மீதான விவாதம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நேற்று அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதைத் தொடர்ந்து, சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீர்மானத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு முன்மொழிந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, சபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என, சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை