சட்டசபை ஒத்திவைப்பு
த.வெ.க., அரசின் முதல் சட்டசபை கூட்டம், கவர்னர் உரையுடன், 18ம் தேதி தொடங்கியது. கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் உரையாற்றினார். மறுநாள் கவர்னர் உரை மீது விவாதம் தொடங்கியது. அன்று காவிரியில் மேகதாது அணை கட்டக்கூடாது என, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவர்னர் உரை மீதான விவாதம், 22ம் தேதி தொடங்கியது. இறுதியாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசினார். சபையின் மூன்றாம் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு, முதல்வர் விஜய் பதிலுரை வழங்கினார். இதையடுத்து தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்படுகிறது என, சபாநாயகர் பிரபாகர் அறிவித்தார்.