உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு: வீடியோ வெளியிட்டு நயினார் நாகேந்திரன் கண்டனம்

செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு: வீடியோ வெளியிட்டு நயினார் நாகேந்திரன் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை திமுக பிரமுகர் தரக்குறைவாக பேசிய வீடியோவை வெளியிட்டு நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: சென்னை அசோக் நகரில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் ஒருவர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்திற்குரியது. அதிலும் ஆட்சியைப் பற்றி நல்ல செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்று திமுக பிரமுகர் வெளிப்படையாக நிர்பந்திப்பது ஒட்டுமொத்த திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது.https://x.com/NainarBJP/status/1968883900358476151வடகிழக்குப் பருவ மழை துவங்கவிருக்கும் வேளையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விடுத்து, விளம்பரத்தில் ஈடுபடுவதோடு, உண்மையை வெளிபடுத்தும் செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்து முடக்கப் பார்க்கும் திராவிட மாடல் அரசின் முயற்சிகள் இனியும் செல்லுபடியாகாது. திராவிட மாடலின் அடக்குமுறையை எதிர்த்து பத்திரிகை சுதந்திரத்திற்காக, பாஜ வீதியில் இறங்கிப் போராடவும் தயங்காது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ajaysouthindian
செப் 20, 2025 00:22

டெல்லி பாஜக தலைமைக்கும் தமிழகத்தில் தமிழக பாஜக வில் நடக்கும் நடக்கும் குளறுபடியை (உண்மையை) சொல்லுங்கள். இதை வீணா போன நைனா நாகேந்திரன்வை தமிழக பாஜக தலைவர் பதவியை கொடுத்தது மிக மிக மோசமான முடிவு என்பதை பல ஆதாரத்தை வைத்து விளக்கம் கொடுங்க. தமிழக பாஜக வை இந்த கோமாளிவிடம் இருந்து காப்பாற்ற உங்களின் உதவி வேண்டும். அதே போல் அண்ணாமலை வினால் மட்டுமே தமிழ்க பாஜகவை வளர்க்க முடியும். அதே சமயம் ஒரு நாள் கண்டிப்பா பாஜக அண்ணாமலையின் கண்டின உழைப்பால் ஆட்சியை பிடிக்கும் என்று தெரியுங்கள்.


Indian
செப் 19, 2025 17:17

என்ன சொன்னாலும் நாங்க நம்ப போறதில்லை ..


Vasan
செப் 19, 2025 15:41

ஆனால் அந்த 3.99 கோடி ரூபாய் பற்றி மட்டும் வெள்ளை அறிக்கை அளிக்க மாட்டேன் என்கிறீர்களே ஐயா. April 2024 - Parliment election - you con from Tirunelveli - Tambaram railway station - Tirunelveli bound train - 3 persons - your restaurant employees - Rs 3.99 crores seized from them - Case pending


sengalipuram
செப் 19, 2025 14:00

அநாகரீகமான DMK ஆள் பேச்சுக்கு எத்தனை பேர் முட்டு இங்கு கொடுக்கிறார்கள். உங்களுக்கு எல்லாம் வெட்கமே இல்லையா ?


Vasan
செப் 19, 2025 13:54

திரு ஸ்டாலினை எதிர்த்து, அவர் போட்டியிடும் தொகுதிலேயே போட்டியிட்டு, அவரை வீழ்த்துங்கள். வாழ்த்துக்கள்.


duruvasar
செப் 19, 2025 12:52

முதலில் வாயில் வடை சுடுவதை நிறுத்தி தெருவில் இறங்கி அடுத்த கட்ட வேலையே ஆரம்பியுங்கள்.


தியாகு
செப் 19, 2025 12:39

தனிப்பட்ட திறமை என்பது வேறு மக்கள் செல்வாக்கு என்பது வேறு. அரசியலில் தனிப்பட்ட திறமை ஒரு போதும் கை கொடுக்காது, ஓட்டுக்களாகவும் மாறாது.


SENTHILKUMAR
செப் 19, 2025 12:06

where is the action? when will you come to street to fight?


pakalavan
செப் 19, 2025 11:59

பிஜேபிக்காரனுங்க இப்படித்தான் வேணும்னே வம்பிழுப்பானுங்க


Arjun
செப் 19, 2025 12:46

மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை. விளம்பரம் மட்டும்


thangavel
செப் 19, 2025 11:58

நீ இருப்பதே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை