உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செங்கோட்டையன் யாருடைய குரலாகவும் பேசவில்லை: நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையன் யாருடைய குரலாகவும் பேசவில்லை: நயினார் நாகேந்திரன்

நெல்லை: எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறுவது நல்ல விஷயம் தான். யாருடைய குரலாகவும் யாரும் பேசவில்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். நெல்லையில் அவர் அளித்த பேட்டி; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q44s3yl6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இபிஎஸ்சுக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்து இருப்பது அவர்களின் உட்கட்சி பிரச்னை. அதில் என் பார்வை என்பது எதுவும் கிடையாது. அதை அவர்கள் தான் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். செங்கோட்டையன் பேச்சு அதிமுக உட்கட்சி விவகாரம். யாருடைய குரலாகவும் யாரும் பேசவில்லை. பாஜ என்பது யாருக்கும் உரிமையான கட்சி கிடையாது. பாஜ ஒரு தேசிய கட்சி. 300க்கும் மேற்பட்ட எம்பிக்கள், 1300க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ள கட்சி. இன்றைக்கு நான் 3 ஆண்டுகள் தலைவராக உள்ளேன். கட்சி மேலிடம் தொடர்ந்து அனுமதித்தால் தான் நான் இந்த பதவியில் தொடர முடியும். ஆனால் திமுக அப்படி இல்லை. அது ஒரு குடும்ப கட்சி. அதில் தான் வாரிசு இருக்கக்கூடாது. தேர்தல் என்பது வேறு. அரசியல் கூட்டணிக் கட்சிகள் இன்னும் 7 மாதம் உள்ளது.பல்வேறு நிகழ்வுகள் எல்லாம் நடைபெறும். காலங்கள் உள்ளது, பொறுத்திருந்து பார்ப்போம்.பாஜவில் எந்த கோஷ்டிபூசலும் இல்லை. எந்த தேர்தலாக இருந்தாலும் மக்கள் ஒரு தீர்மானம் பண்ணி விட்டார்கள் என்றால் அதில் மாறமாட்டார்கள். இன்றைக்கு ஆளும் அரசுக்கு எதிரான மனநிலை உள்ளது. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. கூட்டணி விவகாரத்தில் ஓபிஎஸ் அறிக்கை விடும் முன்பே நான் அவரிடம் பேசி இருக்கிறேன். அதேபோல டிடிவி தினகரனிடமும் நான் பேசி இருக்கிறேன். எல்லாம் காலம் வரும்போது சரியாகிவிடும்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Natchimuthu Chithiraisamy
செப் 06, 2025 20:04

போனவாரம் சூர்யாவை கொங்கு மண்டலத்தில் நிறுத்தி அதிமுகவை சரியவைக்க திமுக திட்டம் என செய்தி வந்தது. அதை விட செங்கோட்டையன் அதிக செல்வாக்கு உள்ளவர் என்று திமுக தலைமைக்கு சொல்லி வேலை செய்துள்ளனர். அத்திக்கடவு திட்டம் 60 ஆண்டு கால திட்டம் சென்னை வாசி முதல்வர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கிராம விவசாய முதல்வர் செயல் படுத்தி வெற்றி கண்டார். குன்னத்தூர் முதல் அனைத்து அத்திக்கடவு உள்ள பகுதி முழுவதும் செழிப்புற்றுவிட்டது. தென்னை மற்றும் மற்றும் காய்கறி விவசாயம் நன்றாக நடக்கிறது. சில ஆண்டுகளில் பொள்ளாச்சி அளவுக்கு தென்னை உற்பத்தி வரலாம். அடுத்து அதே திட்டத்தை வறண்ட காங்கேயம் வரை கொண்டுசெல்ல எந்த முதல்வர் செயல்படுவார் என மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்


Rajagopal S
செப் 05, 2025 21:58

செங்கோட்டையன் முயற்சி எல்லாம் இருக்கட்டும். தப்பி தவறி புரட்சி தாயை சேர்த்து விட்டால் கப்பல் கவிழ்ந்து விடும்.


Rajkumar
செப் 05, 2025 19:09

இப்படி பேசி பேசி நீங்க தான் அந்த கட்சியை control பண்றீங்க என்பதை proof பண்றீங்க


venugopal s
செப் 05, 2025 18:26

நயினார் நாகேந்திரன் முதலில் அவர் கட்சியில் உள்ள வெவ்வேறு குரூப்களை சமாளித்து ஒற்றுமையை கொண்டு வரட்டும்!


ஜெய்ஹிந்த்புரம்
செப் 05, 2025 18:15

செங்கோட்டையன் டீம்காவில் ஐக்கியம் ஆவதற்கு முன் அவரை பாஜகவிலே சேர்க்க பாருங்க. லம்ப்பா கொடுத்து அமுக்கிடுங்க.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 05, 2025 18:13

பயனிச்சாமி கையெழுத்து இல்லாம ஆடீம்கா வேட்பாளர்களை நிக்க வெக்க முடியாது. ஒருவேளை ஏ1 மாதிரி பயனிச்சாமியை கோமாவிலெ வெச்சி கட்டை விரலை உருட்டலாம்் ஆனா அதுக்கெல்லாம் டைம் ஆகுமே? பேசாம என்டிஏ கூட்டணி அறிவிச்சு அதிலே ஆடீம்காவை சேர்க்காமல் காய் விடுவதை தவிர வேறு வழியில்லை.


கூத்தாடி வாக்கியம்
செப் 05, 2025 16:12

ஜெய லலிதா திமுக வை விட குறைவாக தான் ஊழல் செய்தார் அவருக்கே அந்த நிலைமை என்றால் இவர் கலுக்கு... காஜஆனவிர்க்கு வரவேண்டிய பணம் வந்தால் இந்தியஆவின் நம்பர் ஒன் மாநிலமா க தமிழ் நாடு இருக்கும்


Sridhar
செப் 05, 2025 14:36

பரவா இல்லேயே, அமித் ஷா வ கேக்காமலே கருத்து சொல்றாரே


ஜெய்ஹிந்த்புரம்
செப் 05, 2025 20:51

பத்த வச்சிட்டயே பரட்டை


Guna Gkrv
செப் 05, 2025 13:32

திரு. நயினார் தி மு க வை ஆட்சியிலிருந்து எடுத்துவிட்டு நீங்க என்ன கிழிக்கப்போகிறீர்கள் ,நீங்க வந்து நாட்டை இரண்டு ஆக்கவா? பேசாமல் நீங்கள் அ தி மு கா வில் இணைந்து விடலாம்.


pakalavan
செப் 05, 2025 13:19

கட்சிய விட்டு ஓட விடனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை