உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாகன ஓட்டி மீது விழுந்த பலகை: காயத்துடன் தப்பிய வாகன ஓட்டி

வாகன ஓட்டி மீது விழுந்த பலகை: காயத்துடன் தப்பிய வாகன ஓட்டி

கடலூர்: கடலூரில், சாலையின் நடுவே தொங்கிக் கொண்டு இருந்த விளம்பர பலகை, டூவிலரில் வந்தவர் மீது விழுந்தது. இதில், அவர், அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.கடலூர் மாநகராட்சியில் அண்ணா பாலம் சிக்னலில் விளம்பர பலகை வைக்கப்பட்டு இருந்தது. இது திடீரென கழன்று, அந்த வழியாக டூவிலரில் வந்த புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தணிகைநாதன்(44) என்பவர் மீது விழுந்தது. இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த டூவிலர்கள், ஆட்டோக்கள் உடனடியாக நின்றன. அந்த வழியாக வேறு எந்த கனரக வாகனங்களும் வரவில்லை. இதனால், அவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 19, 2024 20:36

நகை கடைகாரரே சிக்கிட்டான். மொத்தமா கறந்துடவேண்டியது தான், என்று காமெடி நடிகர் வடிவேலு ஒரு படத்தில் வசனம் பேசுவதுபோல, கடலூர் போலீஸ் அந்த நகை கடையில் கறந்துவிடுவார்கள். ஆனால் காயத்துடன் தப்பிய வாகன ஓட்டிக்கு ஒன்னும் கொடுக்கமாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை