உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமலை கோவிலில் நவம்பர் மாத சேவைகளுக்கு முன்பதிவு அறிவிப்பு

திருமலை கோவிலில் நவம்பர் மாத சேவைகளுக்கு முன்பதிவு அறிவிப்பு

சென்னை: திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் நடக்கின்றன. வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைக்கான எலக்ட்ரானிக் குலுக்கலுக்கு, நாளை காலை 10:00 மணி வரை பதிவு செய்யலாம். கல்யாண உத்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு, 21ம் தேதி காலை 10:00 மணிக்கும், ஆன்-லைன் வாயிலாக தரிசிக்கும் கல்யாண உத்சவம், ஆர்ஜித பிரம்மோத் சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு, அன்று மாலை 3:00 மணிக்கும் முன்பதிவு துவங்குகிறது. அங்கப்பிரதட்ஷன டோக்கன் பெறுவதற்கான முன்பதிவு, 23ம் தேதி காலை 10:00 மணிக்கும்; மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்கான முன்பதிவு அன்று மாலை 3:00 மணிக்கும் துவங்குகிறது. நவம்பர் மாத சிறப்பு தரிசனம், 300 ரூபாய்க்கான முன்பதிவு, 25ம் தேதி காலை 10:00 மணிக்கும், அன்று மாலை, 3:00 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவும் துவங்குகிறது. இத்தகவலை திருமலை திருப்பதி தேவஸ் தானம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி