உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை

பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பட்டா மாறுதலுக்காக ரூ.37 ஆயிரம் லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ., பார்த்திபனை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வருகின்றனர். லஞ்சத்துக்கு உடந்தையாக இருந்த இ-சேவை மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.இ-சேவை மையம் மூலமாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் ஏரியா மாநகராட்சியா அல்லது கிராமமா என்பதை அறிந்து அதற்கு உரிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பத்தை பதிவு செய்து ரூ.60 கட்டணம் பெற்றுக்கொண்டு ரசீது வழங்கப்படும். அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே பகவதி மங்கலம் கிராமத்தில் பட்டா மாறுதலுக்காக, ஒருவர் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்துள்ளார்.அப்போது வி.ஏ.ஓ., பார்த்திபன் தனக்கு லஞ்சம் கொடுத்தால்தான் பட்டா மாறுதல் கிடைக்கும் என்று கூறியுள்ளார். முதலில் அதிக தொகை கேட்டவர், பேரம் பேசியதன் முடிவில் 37,000 ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார். லஞ்சப் பணத்தை, இ-சேவை மைய உரிமையாளரிடம் கொடுத்து விடும்படியும் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத மனுதாரர், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுக்க மனுதாரர் கொண்டு சென்றார். அந்தப் பணத்தை இ-சேவை மைய உரிமையாளர் அகமது ஜாப்ரின் அலி வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும், லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ., பார்த்திபன் தப்பி தலைமுறைவாகி விட்டார். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

VSMani
பிப் 18, 2025 10:36

அந்தப் பணத்தை இ-சேவை மைய உரிமையாளர் அகமது ஜாப்ரின் அலி வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும், லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ., பார்த்திபன் தப்பி தலைமுறைவாகி விட்டார். அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் வலையில் சிக்க அந்த V A O என்ன மீனா? லஞ்சத்தில் ஊறி திளைத்த திமிங்கலம். இ-சேவை மைய உரிமையாளர் கைது ஆன தகவல் எப்படி வி.ஏ.ஓ., க்கு லீக் ஆனது கசிந்தது? வலை சரியில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசாரில் இருந்த அந்த கறுப்பாடு யார்?


Ram Moorthy
பிப் 10, 2025 00:08

லஞ்சம் கேட்கும் போது இருக்கும் அகந்தை அதை வாங்கும் போது மறைந்து விடுகிறான்கள் கோழைகள் ஓடு ஓடு நாட்டை விட்டு ஓடி எங்கேயாவது போய் சாவு


jayvee
பிப் 08, 2025 17:41

அணைத்து ஈ சேவை மைய்யங்களும் பத்திரப்பதிவு மற்றும் மோட்டார் வாகன அலுவலகங்களுக்கு அருகில் உள்ள அணைத்து இன்டர்நெட் காப்பியர் சேவை மைய்யங்களும் வக்கீல் அலுவலகங்களும் இவர்களின் ப்ரோக்கர்களே .. CMDA நில முறைப்படுத்துதல் திட்டத்தில் பல ஆயிரம் கோடிகள் கள்ளத்தனமாக சம்பாதிக்கும் அரசு அரசியில் வியாதிகளுக்கு புரோக்கர் தனியார் நில அளவை மற்றும் ட்ராப்ட்ஸ் மேன் கள்தான் .. ஒவ்வொரு driving ஸ்கூல் அதிபர்களும் கோடீஸ்வரர்கள் .. RTO அலுவலகர்களின் உறவினர்கள்தான் .. CMDA ஒப்புதலுக்கு வரைபடம் வரைந்துகொடுக்கும் draftsman பெரும்பாலோர் கன்னியாகுமாரி நாகர்கோவில் போன்ற தெற்கு தமிழகத்தை சார்ந்தவர்கள் .. எப்படி இது சாத்தியம் ?


VSMani
பிப் 18, 2025 10:29

CMDA ஒப்புதலுக்கு வரைபடம் வரைந்துகொடுக்கும் draftsman பெரும்பாலோர் கன்னியாகுமாரி நாகர்கோவில் போன்ற தெற்கு தமிழகத்தை சார்ந்தவர்கள்.. எப்படி இது சாத்தியம்? இவர்களுக்கு மலையாளி புத்தி உண்டு அதனால்தான்.


kumaran
பிப் 08, 2025 14:30

lots of people are like this in all government. max what they will do suspension they will get and also get salary. why can't they bring the rule of dismissed from the position. after few months they Pay money to some politician's and transfer to different place. they do the same. doesn't matter where they are..


Eswaran
பிப் 09, 2025 08:15

அதுவும் பத்தாது. 12 மாத சம்பளம் அபராதம் போடணும்


ARUMUGAM
பிப் 08, 2025 14:11

நான் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா உலையூர் கிராமம் . எனது அப்பா கடந்த 2016 இறந்து விட்டார்.எனது அம்மா மற்றும் 1 அண்ணன் மற்றும் 3 அக்கா உடன் பிறந்தவர்கள் . எனது அண்ணன் எனக்கோ மற்றும் என் அம்மாவிற்கும் என் உடன் பிறந்த சகோதரிகளுக்கு தெரியாமல் எனது தந்தை பெயரில் உள்ள அணைத்து இடங்களையும் V A O கொடுத்து பட்டா மாறுதல் செய்துள்ளார் .


Chinnamanibalan
பிப் 08, 2025 13:32

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, அதிமுக ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலக்க்ஷன் என்று கூறி ஆட்சிக்கு வந்தது. ஆனால் திமுக ஆட்சியிலோ, முன்பை விட லஞ்ச லாவண்யம் கொடி கட்டிப் பறக்கிறது. 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரம் இல்லாமல் வாடி இருந்த திமுக, தற்போது வாரி குவிப்பதால், அரசு ஊழியர்களும் துணிந்து லஞ்சம் பெறுகின்றனர். அதிலும், வருவாய்த் துறையில் லஞ்சம் என்பது மிகப் பெரிய அளவில் உள்ளது


Kasimani Baskaran
பிப் 08, 2025 12:46

எந்த கொம்பனானாலும் குறை சொல்ல முடியாது.


Anantharaman Srinivasan
பிப் 08, 2025 12:25

எல்லா விஏஓ வையும் நீக்க வேண்டிவரும். முடியுமா..?


Kasimani Baskaran
பிப் 08, 2025 14:30

லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க வருவோர் மீது வழக்குப்போட்டால் நிலைமை மேம்படும். ஆங்காங்கு காமிராக்களை நிறுவி எளிதில் இதுகளை பிடித்து விட முடியும்.


R VENKATARAMANAN
பிப் 08, 2025 12:08

This is not a stray incident, especially in Tamilnadu—almost all departments I.e Revenue, Registration, Transport, police, etc. Now the V.A.Os have begun to collect corruption through the E.Services centers. One such thing has been in todays Dinamalar newspaper, besides arresting the concerned person of E.Services, the vigilance officials are searching for the V.A.O. I suggest closing the center permanently besides arresting the man for a few years under the non-available section. The V A O should be placed in suspension and after the findings, should be dismissed from service besides forfeiting all monetary benefits like pension, gratuity . So that it will be lesson for others.


Indian
பிப் 08, 2025 11:50

இவர்கள் போன்றோரின் பதவியை நீக்கினால் தான் பயம் வரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை