உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஸ் மட்டுமே செல்லும் பாதை நெரிசல் இல்லை; குஜராத்தை பின்பற்றுமா தமிழகம்?

பஸ் மட்டுமே செல்லும் பாதை நெரிசல் இல்லை; குஜராத்தை பின்பற்றுமா தமிழகம்?

பஸ்கள் மட்டுமே செல்லும், பி.ஆர்.டி.எஸ்., திட்டம், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம், சென்னை மற்றும் கோவையில் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் வாகனங்களின் எண்ணிக்கை, 3.90 கோடி. இதில், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும், 3.50 கோடி. ஆண்டுதோறும், 10 முதல், 12 சதவீதம் அளவுக்கு வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், பல்வேறு முக்கிய வழித்தடங்களில் அமலில் உள்ள, பி.ஆர்.டி.எஸ்., எனப்படும், பஸ்களுக்கான தனி பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆமதாபாத்தில் தற்போதைய நிலவரப்படி, முக்கிய சாலை வழித்தடங்களில், 160 கி.மீ., துாரத்துக்கு பஸ்களுக்கான தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். தினமும் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். நான்கு வழி சாலையில், நடுவில் இரு வழி பாதையாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேவையான இடங்களில் மேற்கூரை, இருக்கை, பேன் வசதியுடன் பஸ் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு பஸ் நிலையத்தில் இருந்து வந்து, செல்லும் பயணியர் வசதிக்காக, பாதசாரி பாதைகளும் இருக்கின்றன. இந்த பாதையில் செல்லும் பஸ்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதில்லை; நீண்ட நேரமும் காத்திருப்பதில்லை. சிக்னலுக்காக மட்டுமே ஓரிரு நிமிடங்கள் காத்திருக்கின்றன. இந்த தடத்தில், நெரிசல் இன்றி பஸ்கள் செல்வதை பார்க்க முடிகிறது. இருபுறமும் சாலையில் செல்லும் வாகனங்களால், இடையூறு ஏற்படாமல் செல்கின்றன. அதற்கு ஏற்றார் போல, சாலைகள் திட்டமிட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற திட்டத்தை, இனியும் தாமதிக்காமல், சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் செயல்படுத்த வேண்டும் என, போக்குவரத்து வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கட்டாயம் தேவை

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., போக்குவரத்து துறை பிரிவு பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்ட பி.ஆர்.டி.எஸ்., திட்டம் நல்ல பலன் அளித்து வருகிறது. அடுத்தகட்டமாக, மேலும் பல வழித்தடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த நகரில் ஓரளவுக்கு நெரிசல் இன்றி பயணிக்க முடியும். இதுபோன்ற திட்டத்தை சென்னையிலும் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. அதனால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது. சென்னையில் மெட்ரோ ரயில், மின்சார பஸ்கள் இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் வந்தாலும், பி.ஆர்.டி.எஸ்., திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும். நெரிசல் இன்றி விரைவான பயணம் கிடைக்கும் போது, கார், இருசக்கர வாகனங்களின் பயன்பாடு கணிசமாக குறையும். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். தாமதம் ஏன்? சென்னையில் முக்கிய வழித்தடத்தில், பி.ஆர்.டி.எஸ்., திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்ப்பட்டது. இதற்கிடையே, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முழு வீச்சில் நடப்பதால், தற்போதைக்கு இந்த திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடியும் போது, இந்த திட்டம் செயலுக்கு வரும் என்கின்றனர், தமிழக போக்குவரத் துறை அதிகாரிகள். *** - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Padmasridharan
செப் 24, 2025 18:42

இங்க பஸ் நடத்தும் ஓட்டுநர்களுக்கும் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கும் ஒரு புரிதல், ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு ஏற்றாற்போல் பேருந்தை வேண்டுமென்றே தள்ளி நிறுத்துவதும் நடக்கின்றது. மக்களுக்கு பேருந்து என்பதில்லாமல் ஓட்டுநர் அவருக்கு பிடித்தால் நிறுத்துவதும் இல்லையென்றால் போய்விடுவதும் நடக்கும். காக்கி சட்டை போட்டவர்கள் மக்களை மதிக்க முதலில் கற்றுகொடுக்கவேண்டும். சிறிய சைக்கிளில் செல்லும் ஒரு மனுஷனுக்கு மதிப்பே இல்லாமல் ஒருவரே செல்லும் பெரிய காருக்கு இருக்கும் lay mirrorக்கு மதிப்பை அதிகம் எதிர்பார்க்கின்றனர்.


Sitaraman Munisamy
செப் 24, 2025 17:56

ஏற்கனவே பெங்களூரு நடைமுறையில் இருந்ததது. மெட்ரோ பணி காரணமாக ஒதிக்கி வைக்கப் பட்டது


Seyed Omer
செப் 24, 2025 09:06

பாலங்கள் சீட்டு கட்டாக இடிந்து நொறுங்கியதில் குசுராத் பெயர் புகழ்பெற்ற ஊர்


venugopal s
செப் 23, 2025 18:53

இந்த திட்டம் எல்லா ஊர்களிலும் எல்லா சாலைகளிலும் சாத்தியம் இல்லை.அஹதாபாத்தில் குறிப்பிட்ட அகலமான ரோடுகள் உள்ள இடங்களில் மட்டுமே இது செயல்படுகிறது!


Suresh Sivakumar
செப் 23, 2025 11:35

Not possible in tamilnadu. Like few of northen states people lack discipline. Also the government, of it starts, will use it as an opportunity to earn commission rather than delivering the same


ஆரூர் ரங்
செப் 23, 2025 11:24

இங்கிலாந்தில் பல நகரப் பகுதிகளில் தனியார் வாகனங்கள் தடை செய்யபட்டுள்ளது. சைக்கிளுக்கு மட்டுமே அனுமதி. ஆக இங்கு வாகனப் பெருக்கம் வருத்ததுக்குரியது. ஒருபுறம் ட்ராபிக் ஜாம், சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு. விபத்துக்கள். மறுபுறம் பெட்ரோல் இறக்குமதியால் அன்னியச் செலாவணி இழப்பு. நாடு உருப்பட பொதுப்போக்குவரத்து வசதிகள் பெருக வேண்டும். வாகனங்களுக்கு ஜிஎஸ்டி குறைத்தது பெரும் தவறு.


Moorthy
செப் 23, 2025 11:16

டில்லியில் தோல்வி அடைந்த திட்டம் இது


ramesh
செப் 23, 2025 10:47

வெங்கடாச்சலம் நீங்கள் வஞ்ச புகழ்ச்சி வைத்தாலும் உங்களுக்கே தெரியும் குஜராத்தை விட தமிழ் நாடு முன்னேறிய மாநிலம் என்று. அது மட்டும் அல்ல, தென் மாநிலங்கள் அனைத்தும் வட மாநிலங்களை விட முன்னேறிய மாநிலங்கள் தான். பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விடாது. நாம் வசிக்கும் மாநிலம், பிஜேபி ஆளும் மாநிலங்களை விட பின் தங்கி இருக்க வேண்டும் என்ற உங்கள் நல்ல மனம் வாழ்க ???


GMM
செப் 23, 2025 08:43

தமிழகத்தில் 3.90 கோடி வாகனங்களில் இரு சக்கர வாகனங்கள் மட்டும், 3.50 கோடி. இரு சக்கர வாகனம் செல்லும் தனி பாதையை அமைக்க ஆய்வு செய்யலாம்.


சசிக்குமார் திருப்பூர்
செப் 23, 2025 08:41

நாங்கள் குறை சொல்ல மட்டுமே குஜராத் போவோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை