உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோயம்பேடு பஸ் நிலையத்தில் லுலு மால் அமைக்க முடிவா?

கோயம்பேடு பஸ் நிலையத்தில் லுலு மால் அமைக்க முடிவா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை கோயம்பேட்டில், புறநகர் பஸ் நிலையம் இருந்த இடத்தில், 'லுலு மால்' வருவதாக பரவும் தகவல் வதந்தி என, அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில், சி.எம்.பி.டி., எனப்படும் புறநகர் பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது. வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய பஸ் நிலையம் கட்டப்பட்ட நிலையில், அனைத்து பஸ் சேவைகளும் மாற்றப்பட்டன. இதையடுத்து, கோயம்பேட்டில் லுலு மால் என்ற தனியார் நிறுவன வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளதாக, தகவல் பரவியது. இதை, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி மறுத்தார்,இதன்பின், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தை லுலு மால் அமைப்பதற்கு, தமிழக அரசு தரப்போவதாக பலரும் வதந்தி பரப்புகின்றனர். அடிப்படை ஆதாரம் ஏதுமற்ற, இந்த பொய் தகவலை உண்மை என்று நம்பி, சில அரசியல் கட்சியினரும், தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இதுகுறித்து, வீட்டுவசதி துறை செயலர் சமயமூர்த்தியிடம் கேட்டபோது, 'இத்தகவல் முற்றிலும் தவறானது, சித்தரிக்கப்பட்டது' என்று தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

ஆரூர் ரங்
ஜன 30, 2024 16:42

பாத்திமால் கூட நல்ல பெயர்தான்.


M Ramachandran
ஜன 30, 2024 15:39

நன்றியுடன் பதில் மறையாதையை செய்ய வேண்டாமா


மலரின் மகள்
ஜன 30, 2024 14:51

கோவை லூலூ மால் சென்றிருந்தோம். அதை பார்க்கும் பொது உண்மையிலான வளைகுடா பிராந்திய குறிப்பாக சவூதி அரேபியாவின் லூலூ மாலின் சலுகைகளை தருவது போலில்லாமல் பெட்டிக்கடையினர் அளவிக்ரு கூட தள்ளுபடி இல்லை. லூலூ மாலில் பெரும்பாலோனோர் மலையாளிகளாக அதுவும் அந்த முதலாளியின் சொந்த மாவட்டத்தினராகவே இருப்பர். கோவையில் அப்படியில்லை. பெயரும் பேரிச்சைபலன்கள் மற்றும் சில நட்ஸ் வகைகளும், உணவு மற்றும் மீன் தான் லூலூவிலின் பிரதியேகம். மற்றவற்றை பார்த்தால் பெரும்பாலும் அது அவர்களின் பிரண்டை பெற்று வேறு நபர் நிறுவங்கினாள் இருக்கும்போலவே தெரிகிறது. கூட்டம் மிகவும் குறைந்திருக்கிறது.


Raa
ஜன 30, 2024 16:48

மக்கள் புறக்கணிக்கலாமே?


C G MAGESH
ஜன 30, 2024 13:47

நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் நடக்கும்.


Narayanan
ஜன 30, 2024 12:51

திமுக இல்லை என்றாலே இருக்கு என்றுதான் கருத்தில் கொள்ளவேண்டும் .அவர்களின் தகிடுதத்தம் அப்படித்தான் .


sridhar
ஜன 30, 2024 19:13

அவசர கதியில் கிளம்பாக்கத்துக்கு மாற்றியது நல்ல நோக்கத்துக்காக இல்லை. திமுக எது செய்தாலும் அதில் சுயநலமும் மக்கள் விரோதமும் தான் இருக்கும்.


Muralidharan S
ஜன 30, 2024 12:23

பெருகும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு, இரண்டு அல்லது மூன்று பேருந்து நிலையங்கள் இருப்பதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், சரியாக திட்டம் இடாமல் அவசரகதியில் அள்ளித்தெளித்த கோலம் போல ஒன்றை செய்து மக்களை மிகவும் சிரமத்திற்குள் ஆழ்த்துவது எந்த அரசாங்கத்திற்கும் நல்லது அல்ல. கோயம்பேடு பேருந்து நிலையத்தை அப்படியா பிற மாநிலங்களுக்கு (ஆந்திரா/கர்நாடக) மற்றும் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு அப்படியே விட்டு வைப்பதுதான் சிறந்த நிர்வாகம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கிட்டத்தட்ட நான்கு ஐந்து வருடங்களாக கட்டப்பட்டு வருகிறது. நிர்வாக திறமை மிகுந்த ஆட்சியாளர்கள் என்றால், கிளாம்பாக்கம் திட்டம் ஆரம்பித்த பொழுதே, அந்த பேருந்து நிலையத்திலேயே மிக அருகில் செல்லும் மின்சார ரயில் நிலையத்தை கொண்டு வரும் திட்டத்தையும் கொண்டு வந்து முடித்து இருப்பர். அதனுடன், சென்னை விமான நிலையம் வரை உள்ள மெட்ரோ ரயில் சேவையையும் இந்த ஐந்து வருடங்களில், கிளாம்பாக்கம் அல்லது செங்கல்பட்டு வரை நீட்டித்தும் இருப்பார்கள். ஆனால், இது எதுவுமே செய்யாமல் மக்களை சிரமத்திற்கு ஆளாக்கும் அரசாங்கங்களுக்கு மக்கள் தான் (தேர்தல் மூலம்) பாடம் புகட்ட வேண்டும்.


தமிழ்வேள்
ஜன 30, 2024 14:03

கிளாம்பாக்கம் வேலை துவக்கப்படுவதற்கு முன்னரே , அதாவது 2013 வாக்கில் , ஊரப்பாக்கம் வண்டலூர் இடையே , உயிரியல் பூங்காவுக்காக ரயில் நிலையம் அமைக்க சர்வே செய்யப்பட்டது ...ஆனால் வேண்டிய நிலத்தை தர அன்றைய தமிழக அரசு மறுத்துவிட்டது ....வாஸ்தவத்தில் ரயில் நிலையம் அமைந்து ஆண்டுகள் ஐந்து கடந்திருக்கும் ..கோளாறு தமிழக அரசிடம் ..தமிழ அரசின் ஒத்துழையாமை , கேனத்தனத்தை தென்னக ரயில்வே பொது வெளியில் வெளியிடுவதில்லை ..காரணம் தெரிவதில்லை .


rasaa
ஜன 30, 2024 11:59

எவ்வளவுக்கு எவ்வளவு இது புரளி என்கின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உண்மையாக நடைபெறும் என்பது திராவிடமாடல் வழக்கு.


duruvasar
ஜன 30, 2024 11:53

அப்ப அங்கே தமிழின தலைவனுக்கு தங்க கோபுரம் கட்டபோறாங்களா? வாய்ப்புகள் இருக்கலாம் எனதான் பேசிக்கொள்கிறார்கள்.


Muralidharan S
ஜன 30, 2024 11:11

தமிழ்நாட்டில் கடந்த அறுபது வருடங்களாக மக்களின் வரி பணம் வீணாக (கூவம் ஆறு போல) போய்க்கொண்டு இருக்கிறது. அரசியல் வியாதிகள் மக்கள் வரி பணத்தை கேள்வி கேட்பார் இன்றி, அவர்கள் இஷ்டப்படி / கண்டபடி நாசம் செய்வைதை தடுக்க ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும். இவர்கள் 'போடும்' ஒவ்வொரு 'திட்டமும்' இவர்கள் நன்மைக்கே தவிர மக்களை நன்மையை நினைத்து செய்வதில்லை... ஆனாலும் புத்தி இல்லாத மக்கள்.. எவ்வளவு சிரமம் பட்டாலும், திரும்ப திரும்ப இந்த இரண்டு திரவிஷ கட்சிகளுக்கே மாற்றி மாற்றி ஒட்டு போட்டுகொண்டு இருக்கிறார்கள் (யானை தன தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்கிற மாதிரி).


ram
ஜன 30, 2024 11:09

இப்படித்தான் சுடாலின் தன்னுடைய மகன் அரசியலுக்கு வர மாட்டான் என்று சொன்னார், இப்போது மந்திரி, நீட் ஆட்சிக்கு வந்தால் தடை என்று சொன்னார்கள், ஆதலால் முத்துசாமி சொல்லுவதும் பொய் தான். லூலூ அங்கு கண்டிப்பாக வரும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை