உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏஐ வீடியோ மூலம் பிரதமர் குறித்து அவதூறு; காங்கிரஸ் மீது வழக்குப்பதிவு

ஏஐ வீடியோ மூலம் பிரதமர் குறித்து அவதூறு; காங்கிரஸ் மீது வழக்குப்பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி மற்றும் அவரது தாயார் குறித்து ஏஐ வீடியோ மூலம் அவதூறு பரப்பியதாக பீஹார் காங்கிரஸ் ஐடி பிரிவினர் மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கடந்த 10ம் தேதி எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை கேலி செய்யும் விதமாக, ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை பீஹார் காங்கிரஸ் பகிர்ந்திருந்தது. 36 வினாடி கொண்ட இந்த வீடியோ, பிரதமர் மோடியின் மீதான தனிப்பட்ட தாக்குதல் என்று பாஜ குற்றம்சாட்டியது.ஆனால், இந்த வீடியோவில் யாருக்கும் அவமரியாதை இல்லை என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில், வட அவென்யூ போலீஸ் ஸ்டேஷனில் பாஜ டில்லி தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சங்கேத் குப்தா, காங்கிரஸ் கட்சியின் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில், பிரதமர் மோடி மற்றும் அவரது தாயின் கண்ணியத்தை புண்படுத்தும் விதமாக இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். அதன்பேரில், பெண்களின் கண்ணியத்தை சீர்குலைத்ததாகக் கூறி, 18(2), 336(3), 336(4), 340(2), 352, 356(2) மற்றும் 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் கட்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு முன்பும் பீஹாரில் நடத்தப்பட்டு வரும் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான யாத்திரையின் போது, பிரதமர் மோடி மற்றும் அவரது இறந்த தாயை குறிவைத்து காங்கிரஸ் கட்சியினர் அவதூறு பரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Padmasridharan
செப் 15, 2025 08:26

182, 3363, 3364, 3402, 352, 3562, 612 இப்பிரிவுகளைப்பற்றி விவரித்து இருக்கலாம்.. ஒரு குற்றம் செஞ்சா IPCஸ் மற்றும் ஏன் இவ்வளவு சாமி


Kasimani Baskaran
செப் 14, 2025 09:48

காங்கிரஸ் தீம்காவின் மறு பதிப்பு.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 14, 2025 06:49

மோடியின் மன உறுதியை குறைக்க மோடியின் மீது நேரடியாக காங்கிரஸ் நடத்தும் சைக்கலஜிக்கல் தாக்கல் தான் இது. பாஜக நினைத்தால் செயற்கை நுண்ணறிவு இல்லாமலே நேருவை பற்றிய உண்மைகளை வெளியிட்டால் நேரு முதல் இன்றைய ராகுல் வரை பார்த்து நாடே சிரிப்பாய் சிரிக்கும்.


Kayal Karpagavalli
செப் 13, 2025 23:30

Court order requesting not to defame family members of respec posts.....or use their image or family members image without prior permission .. Concerned department only should interfere and solve the confusion..... Ozhukkam udaimai kudimai ezhukkam , ezhantha pirappai viddum.


Tamilan
செப் 13, 2025 23:18

நாட்டில் உள்ள எந்தப்பிரச்சினையையும் விட ஒருகுடும்பம்தான் மோடிக்கு பாஜவுக்கு பெரிதாகிவிட்டது. நாட்டு பிரச்சினையை பற்றி பேசாமல் ஒருகுடும்பத்தை வைத்து ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள் மதவாதிகள்


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 14, 2025 06:42

மோடியின் துடுப்பாட்டத்தில் மோடியை தவிர யாரும் அரசியலில் இல்லை. அதுவும் அவரது தாயார் உயிருடன் இருக்கும் வரை மோடியின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு ஒரு முறை கூட வந்ததில்லை இருந்ததில்லை. மோடி இந்து மத தர்மப்படி அரசியலுக்காக குடும்பத்தை ஒதுக்கி துறவறம் பூண்டு தான் அரசியலில் உள்ளார். உங்கள் நேரு போல வீட்டை கொடுத்து நாட்டை ஆட்டை போட்டவர் அல்ல. நேரு அவரது குடும்ப வாரிசுகள் தான் இன்னமும் இந்தியாவை வளர விடாமல் செய்து அவரது சொத்துக்களை உயர்த்தி கொண்டு உள்ளனர். ஒரு மதத்திற்காக அப்பாவி மக்களை கொல்பவன் மதவாதி. மதவாதிகள் என்பதற்கு முதலில் சரியான அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுது பார்த்தாலும் போதையிலேயே மூளை சலவை செய்தவன் போல இருக்க கூடாது.


vivek
செப் 14, 2025 08:59

கேடு கெட்ட ஈன பிறவி என்று பலமுறை சொல்லும் உனக்கு அது வரவில்லையே


Tamilan
செப் 13, 2025 23:16

கனவில் கடவுளே வந்து தரிசனம் கொடுத்ததாக பிதற்றிய மோடியைப்பற்றி கூறியதில் தவறேதுமில்லை. கடவுளையே அரசியலுக்கு இழுத்த மோடி தாயை அதற்க்கு மேலும் மதிக்கிறாரா?. தன் தாயை 100 கோடி மக்களை விட உயர்ந்தவராக நினைக்கிறாரா?. வீணாக அலற வேண்டாம் கதறவேண்டாம்


வாய்மையே வெல்லும்
செப் 14, 2025 00:58

பாய் இங்கு எங்கள் முன்பு உங்க கதறலை எல்லாம் மூட்டை கட்டிவெச்சிட்டு முடிஞ்சா கோர்ட்ல உங்கள் திருட்டு மடசம்ப்ராணி ரவுல் வின்சியை கையாலாகாத கபில் சிபல் வைத்து வாதாட வையுங்க. உங்க அடாவடி ரவுடித்தனத்தை இறந்த மோடிஜி தாயைவைத்து சித்துவிளையாட்டு செய்வது கேவலமாக உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை