உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் சாலை மேம்படுத்த ரூ.87 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

தமிழகத்தில் சாலை மேம்படுத்த ரூ.87 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

சென்னை: தமிழகத்தில் சாலை மேம்படுத்த ரூ.87 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது என மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.இது குறித்து, நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எச்.20 சாலையை அகலப்படுத்த ரூ.36.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மேட்டுக்கடை- முத்தம்பாளையம் ரோடு அகலப்படுத்த 6.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் எஸ்.எச்., 154 அகலப்படுத்த 18.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், மேகளத்துார் - பத்தாளப்பேட்டை ரோடு அகலப்படுத்த 20.52 கோடி ரூபாயும், திண்டுக்கல் மாவட்டத்தில் தருமத்துப்பட்டி -ஆடலுார் - தாண்டிக்குடி ரோடு அகலப்படுத்த 5.8 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இந்த திட்டங்கள் மூலம் உள்ளூரில் போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு, பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்கும்; சமூக, பொருளாதார வாய்ப்புகள் அதிகரிக்கும். இவ்வாறு நிதின் கட்கரி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mohan
ஜன 03, 2025 23:44

ஐயா நதின் கட்கரி அவர்களை எந்த வித மேற்பார்வையும் பார்க்காமல் அவரை, பிரதமர் மோடி அவர்கள் சுதந்திரமாக விட்டது பெரும் தப்பு என தெரிகிறது. ஒவ்வொரு டோல் பூத்திலும் வாகனங்களின் ஓனர்களை கசக்கி பிழிந்து காசை பிடுங்குவது தொடர்கதை ஆக உள்ளது. டெண்டர் துகை வசூல் ஆகி பல ஆண்டுகளாக பகல் கொள்ளை லாபம் பார்க்க அவரது துறை துணை போகிறது. வளர்ந்த நாடுகளில் மிக குறைவாக சில்லரைகள் தந்து டோல்கள் பயன்படுத்துகின்றனர். பாஜக அரசின் கையாலாகாத தலைமையால் சுங்கவரி கொள்ளை தொடர்கிறது. தயவு செய்து ஊழல் கொள்ளை துறையாக மாறி உள்ள சாலைபோக்குவரத்து மந்திரி நிதின் கட்கரியை நீக்கவும். கண்டவனெல்லாம் கொள்ளை அடிக்க சுங்க வரி என்ன வருமானவரியா? பிரதமர் கவனிக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை