அந்த்யோதயா உட்பட ஏழு ரயில்கள் சேவையில் மாற்றம்
சென்னை, : தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா உட்பட ஏழு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே அறிவிப்பு: தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா, இரவு 11:00 மணி ரயில், வரும் 22ம் தேதி வள்ளியூர் வரை மட்டுமே இயக்கப்படும் திருச்சி - திருவனந்தபுரம் காலை 7:20 மணி ரயில், வரும் 23ம் தேதி திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் மதுரை - புனலுார் இரவு 11:25 மணி ரயில், 24ம் தேதி திருநெல்வேலி வரை மட்டுமே செல்லும் நாகர்கோவில் - தாம்பரம் அந்த்யோதயா விரைவு ரயில், 23ம் தேதி வள்ளியூரில் இருந்து இயக்கப்படும் திருவனந்தபுரம் - திருச்சி காலை 11:35 மணி ரயில், 23ம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்படும் கன்னியாகுமரி - ராமேஸ்வரம் இரவு 10:15 மணி ரயில், 24ம் தேதி வள்ளியூரில் இருந்து இயக்கப்படும் புனலுார் - மதுரை மாலை 5:15 மணி விரைவு ரயில், 24ம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.