வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மன்னிக்கணும் - சென்னை - பெங்களூரு - சென்னை - இரவு நேர ரயில்கள் 2 மட்டும் உள்ளன - அதுவும் 12658 வண்டி - அநேகமாக தாமதமாக தான் கிளம்பும் - s://timesofindia.indiatimes.com/city/bengaluru/the-late-late-train-bengaluru-chennai-mail/articleshow/62227319.cms
சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தாம்பரம் வழியாக மதுரை ஜங்க்ஷனுக்கு ஒரு நான் ஸ்டாப் ரயில் விடுங்கப்பா. வழியில் வேறு எங்கும் நிறுத்தப்படாது. மதுரை சென்று அடையும் போது கன்னியாகுமரி, ராமேஸ்வரம், செங்கோட்டை, போடிக்கு செல்வது போல கனெக்டிங் ரயில் இருப்பது போல் இருக்க வேண்டும். அதே போல ரிட்டர்ன் இருக்கவேண்டும்.
சென்னை பெங்களூர் - ஏகப்பட்ட ரயில்கள் உள்ளன - - கோவைக்கும் , ஏகப்பட்ட ரயில்கள் உள்ளன - கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களும் உள்ளன - கட்டணம் கம்மி - பல நேரங்களில் ஜெனெரல் கம்பார்ட்மெண்ட் கூட பிரீயாகதான் இருக்கும் - - - இந்த ரூட்களில் அரசு பேருந்துகள் ரொம்ப கம்மி - - ரயில்களில் ரிசர்வேஷன் பண்ணாதவர்கள் , ஆம்னி பேரூந்துகளில்தான் போக வேண்டும் , வேறு வழியில்லை . .
நெடுந்தூரம் செல்வதற்கு யாரும் அரசு பேருந்துகளை பல பத்தாண்டுகளாக பயன்படுத்துவதில்லை. முதலாவது காரணம், பேருந்து உரிய நேரத்திற்கு சென்று சேராது என்பதை உறுதியாகச் சொல்லலாம். இரண்டாவது காரணம் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான மிக மோசமான ஹோட்டல்களில் இரவு நேரத்தில் உணவருந்துவதற்காக அரசு பேருந்துகளை நிறுத்தி விடுவார்கள். அங்கு உணவின் தரம் மிகவும் மோசமாக சாப்பிடுவதற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கும். இட்லி இருக்காது. தோசை வகைகள் இருக்கும். ஹோட்டல் காரர்கள் அவற்றிற்கு ஆனை விலை சொல்லி திருடர்களைப் போல் நம் பாக்கெட்டில் இருக்கும் காசு எல்லாத்தையும் வாங்கிக் கொள்வார்கள். மூன்றாவது காரணம் மழை பெய்தால், பேருந்திற்குள் மழைநீர் பயணியர்களின் தலை முழுவதையும் நனைத்து விடும். மேற்கூறிய மூன்று காரணங்களால் அரசுப் பேருந்துகளை பெரும்பாலானோர் தவிர்க்கிறார்கள்.
கோவை பெங்களூரு செல்பவர்கள் கொஞ்சம் வசதியானவர்கள் என்பதும் திருச்சி மதுரை செல்பவர்கள் ஏழை என்பதும் தெரிகிறது.
புதிய குளிர் சாதனப் பேருந்து இந்த ஆட்சியில் விடவே இல்லை. மக்கள் அனைவரும் ஆம்னி பேருந்தில் தான் பயணம் செய்வார்கள். இதை போக்குவரத்து துறை அமைச்சர் சிந்திக்க வேண்டும்
சென்னை சென்ட்ரலிருந்து கோவைக்கு காலை முதல் இரவு வரை பல ரயில்கள் இருக்கு. அனால் சென்னை எழும்பூ மதுரைக்கு குருவாயூர் எஸ்பி, வைகை, பாண்டியன், கன்னியாகுமாரி , தூத்துக்குடி, பொதிகை, நெல்லை, அனந்தபுரை, செந்தூர் எக்ஸ்பிரஸ் இருக்கும். அதிலும் பல ரயில்கள் இரவு ரயில்கள்தான். அதனால் டிக்கெட் கிடப்பது கஷ்டம். கூடிய சீக்கிரம் மேலும் பல ரயில்கள் விட்டால் இந்த ரூட்டெய்லாம் பல பயணிகள் ஏற வசதியாக irukkum.
சென்னை கோவைக்கு ஆம்னி பேருந்துகளில் வேறுவழி இல்லாமல் தான் பயணிக்க வேண்டியுள்ளது ஒன்று அரசின் பேருந்து தரம் மற்றும் அதன் சுகாதாரம் சரியில்லை மேலும் கிளாம்பாக்கம் வெகுதூரம் இவற்றை சரி செய்தலால் எல்லோரும் அரசின் பேருந்தை பயன்படுத்தலாமே முறையாக நடத்துங்கள் மக்களின் தேவைக்கேற்ப நடத்துங்கள் மற்றபடி நடத்துனர் ஓட்டுநர் சரியானவர்களே !