உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு! வெளியான அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் கனிவான கவனத்திற்கு! வெளியான அறிவிப்பு!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் சனி, ஞாயிறுகளில் (பிப்.22,23) மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; பராமரிப்பு மணி காரணமாக நீல வழித்தடத்தில் உள்ள விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மட்டும் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படுகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் சேவைகள் விமான நிலையம் முதல் விம்கோ நகர் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.இதன்படி காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை விமான நிலையம் சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்களும், விமான நிலையம்-விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் வரை நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்கள் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்படும்.விமான நிலையம் -சுங்கச்சாவடி மெட்ரோ ரயில்நிலையம் வரை இரவு 9 முதல் 10 மணி வரை இயக்கப்படும் ரயில்கள் 7 நிமிட இடைவெளியிலும், விமான நிலையம்,-விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் 14 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும்.மேலும், இரவு 10 முதல் 11 மணி வரை இரு வழித்தடங்களிலும், 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.இதேபோல, ஞாயிறன்று (பிப்.23) விமான நிலையம்-சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையம் வரை காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்கள் 10 நிமிட இடைவெளியிலும், விமான நிலையம்-விம்கோ நகர் மெட்ரோ வரை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 20 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ