உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்

சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்

கோவை: ''அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிடி ஆயோக் கூட்டத்திற்கு பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றார்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு இ.பி.எஸ்., அளித்த பேட்டி: மூன்று ஆண்டுகளாக நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது பங்கேற்றது ஏன்? பிரதமர் மோடி தலைமையில் 3 ஆண்டுகளாக நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? மக்கள் பிரச்னைகளுக்கு செல்லாமல் இப்போது ஏன் சென்றார். அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிடி ஆயோக் கூட்டத்திற்கு பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sne8nco6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்வர் ஸ்டாலின் கடமை தவறிவிட்டார். மக்கள் நலனின் அக்கறை இருந்திருந்தால் மூன்று ஆண்டுகள் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்காமல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று இருப்பார். தமிழகத்தில் பல்வேறு துறையில் ஊழல் நடக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்த போது மோடி வந்தால் ஸ்டாலின் கருப்பு பலூன் பறக்க விட்டார்.

வெள்ளைக் கொடி

எதிர்க்கட்சியாக இருந்தபோது கருப்புக்கொடி காட்டிய தி.மு.க., இப்போது வெள்ளைக் கொடி காட்டுகிறது? தி.மு.க., நிர்வாகி மீது பெண் கொடுத்த பாலியல் புகாரில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., நிர்வாகி மீது பெண் கொடுத்த புகார் என்ன ஆனது? அரசியல் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்று, அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு

அதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்று சொல்லத் தோன்றுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. தி.மு.க., அரசு வந்த பிறகு பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என நான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறேன். ஆனால் இதுவரை தரமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மே 25, 2025 18:22

ஜெ ஜெ மரணத்தில் மர்மம் இருக்கு .... ஆட்சிக்கு வந்தா விசாரிச்சு தண்டிப்பேன் ன்னு சொன்னாரு கிம்ச்சை மன்னர் .... ஆனா அதை லூஸ்ல விட்டுட்டாரே ?? உங்களுக்குள்ள சமரசம் இல்லாமையா உட்டுருப்பாரு ??


Arinyar Annamalai
மே 25, 2025 14:14

பாஜகவினர் எடப்பாடியை சந்தேகத்தோடு பார்க்கணும். இந்த சந்தர்ப்பவாதியை முதல்வர் ஆக்குவதற்கு நீங்க ஏன் உழைக்கணும்? விஜய் கட்சியுடன் இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்களாம். ஊசலாடிக் கொண்டிருக்கும் ரெட்டை இலை சின்னத்த பாஜகவின் உதவியோடு வசப்படுத்திக் கொண்டு பிறவு சீட் பேரத்தைக் காட்டி பாஜகவை கழட்டி விடும் யோசனை இருக்கிறதாம்.


Raja k
மே 25, 2025 12:30

உங்களை மாறி மறைந்து கார் மாறி மாறி மூனு காருல போய் டில்லியில் ..., அந்தளவில் சந்தோசம், எப்படியோ சம்பந்தியை காப்பாத்தீட்டிங்க


s.sivarajan
மே 25, 2025 11:35

அமலாக்க துறை எப்படி செயல்படுதுன்னு இப்போ நல்லா புரியுது.


நல்லவன்
மே 25, 2025 11:30

எம்.ஜி.ஆர் , ஜெ போன்று ஆளுமை உள்ள தலைவர் இல்லாதது அ.தி.மு.கவிற்கு பெரிய பலவீனம்... ஸ்டாலினிற்கு இவர் சரியான போட்டி இல்லை. இவருடைய பேட்டிகளை மக்கள் பொருட்படுத்தவில்லை... திமுகவுடன் போட்டியிட இவரால் முடியாது


M Ramachandran
மே 25, 2025 11:21

கோடா நாடு கேசு இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கு.


Kjp
மே 25, 2025 11:40

உங்க ஆட்சி தானே நடக்கிறது.சீக்கிரம் முடிக்க சொல்லு.அவர் ஆட்சியில் கைது பண்ணிய நபருக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தவரே திமுக வக்கீல் தானய்யா.ஈடி வழக்குக்கு பயந்து அவர் ஒன்னும் பயந்து டெல்லிக்கு போகலயே.ஆட்சிக்கு வந்து நாலு வருஷமா என்ன பண்ணீட்டிங்க.


M Ramachandran
மே 25, 2025 11:20

தற்சமயம் உள்ள தமிழ்நாட்டின் அரசியல் சுகம் கண்ட அத்தனை அரசியல்வாதிகளும் சுயநலவாதிகள்.


முருகன்
மே 25, 2025 11:14

ஆனாலும் உங்கள் அளவுக்கு பயப்பட யாராலும் முடியாது


Kjp
மே 25, 2025 12:01

ஆக நீங்களும் பயப்படுகிறீர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்கள்.


M Ramachandran
மே 25, 2025 11:04

உண்மை சில சமயம் கசக்கும்.


அப்பாவி
மே 25, 2025 10:59

நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றால் ரெய்டை மறந்துருவாங்களா?


Kjp
மே 25, 2025 11:58

ஒன்றும் தெரியாத அப்பாவியாக இருக்கிறீங்க.பழனிச்சாமி டெல்லி போனால் காவிக் கொடி பிடிக்க.மூன்று வருசமா நடந்த நிதி ஆயோக் கூட்டத்துக்கு போக முடியாது என்று வீர வசனம் பேசி விட்டு ஈடி ரெய்டு க்கு பிறகு டெல்லி போனால் என்ன அர்த்தம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை