உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாகை மீனவர்களை மீட்க வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

நாகை மீனவர்களை மீட்க வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ள நாகை மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு;இந்திய மீனவர்கள், இலங்கை அதிகாரிகளால் தொடர்ந்து கைது செய்யப்படுவதால் இந்தியா-இலங்கை இடையிலேயான ஆக்கபூர்வமான தூதரக முயற்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு முக்கியப் பிரச்னையாக மாறியுள்ளது. மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது, இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பிற்குக் கடுமையான அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 26-10-2024 அன்று IND-TN-06-MM-5102 என்ற பதிவெண் கொண்ட படகில் மீன் பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024ம் ஆண்டில் மட்டும் இது போன்று 30 சம்பவங்கள் நடந்துள்ளன. 27.10.2024 நிலவரப்படி 140 மீனவர்கள் மற்றும் 200 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளன.எனவே, இந்தப் பிரச்னையை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துச் சென்று, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதி உள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
அக் 28, 2024 22:27

மீனவர்களை மீட்க கடிதம் எழுதுவது ஓகே. ஆனால் ஒருமுறையாவது அதிகாரிகளை விட்டு, அந்த மீனவர்களுக்கு இந்திய எல்லை எவ்வளவு தூரம் இருக்கிறது? எதுவரை மீன் பிடிக்கலாம் என்று அறிவுறுத்தலாமே. ஏன் அப்படி செய்வதில்லை? ஒருவேளை இலங்கை ராணுவத்தினர் தங்கள் எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் புகுந்து இந்திய மீனவர்களை சிறை பிடித்தால், அப்பொழுது மத்திய அரசுக்கு அதை தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கலாமே.


panneer selvam
அக் 28, 2024 22:15

Stalin ji , every fishing boat should carry GPS instrument , then only they will be allowed to sail as per Tamilnadu fisheries Department . If so , why Indian fishermen are going to Neduntheevu area ? I suspect , if they trespass into Sri Lankan water , they will be arrested and released in one week unless they are smuggler or convicted previously but their boat will be confiscated. Last year you have paid nearly 6.5 crores as compensation to Tamilnadu fishermen for the confiscated boats . So any junk boat shall be sailed to Sri Lanka and get confiscated , then claim a brand new boat from Stalin ji . Good idea and Great thought


Ramesh Sargam
அக் 28, 2024 19:48

மீனவர்களை மீட்க கடிதம் எழுதுவது ஓகே. ஆனால் ஒருமுறையாவது அதிகாரிகளை விட்டு, அந்த மீனவர்களுக்கு இந்திய எல்லை எவ்வளவு தூரம் இருக்கிறது? எதுவரை மீன் பிடிக்கலாம் என்று அறிவுறுத்தலாமே. ஏன் அப்படி செய்வதில்லை? ஒருவேளை இலங்கை ராணுவத்தினர் தங்கள் எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் புகுந்து இந்திய மீனவர்களை சிறை பிடித்தால், அப்பொழுது மதிய அரசுக்கு அதை தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கலாமே.


S Sivakumar
அக் 28, 2024 19:40

இந்த விசயத்தில் இந்தியாவின் நடவடிக்கைகள் முற்றிலும் அதிகார பூர்வமாக இருக்க வேண்டும். நட்பு நாடு இலங்கை அதன்படி சுமுகமான உறவு வைத்துக் கொள்ள வேண்டாமா?