உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 11 கல்லுாரிகளுக்கு இடம் தேர்வு செய்ய கலெக்டர்களுக்கு உத்தரவு

11 கல்லுாரிகளுக்கு இடம் தேர்வு செய்ய கலெக்டர்களுக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், 11 இடங்களில் புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் அமைக்க, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியான நிலையில், அவற்றுக்கான இடங்களை உடனே தேர்வு செய்யும்படி, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உயர் கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து, உயர் கல்வி துறை செயலர் சமயமூர்த்தி கூறிதாவது:

தமிழகத்தில் உயர் கல்வியில் சேரும் மாணவ - மாணவியருக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் வாயிலாக, மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை தக்க வைக்கும் வகையில், குன்னுார், நத்தம், ஆலந்துார், விக்கிரவாண்டி, செய்யூர், மானாமதுரை, முத்துப்பேட்டை, திருவிடைமருதுார், பெரம்பலுார், ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில், புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் அமைப்பதற்கான அறிவிப்பு, பட்ஜெட் உரையில் இடம்பெற்றது.கடந்த மாதம் முதல்வர், கடலுார் மாவட்டத்தில் பங்கேற்ற கூட்டத்தில், பண்ருட்டியில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கும் அறிவிப்பை வெளியிட்டார். அந்த வகையில், 11 இடங்களிலும் கட்டடங்களை கட்டும் வகையில், நகர பகுதியில் மூன்று ஏக்கர், கிராமப் பகுதியில் ஐந்து ஏக்கர் இடத்தை தேர்வு செய்ய, கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த ஊர்களில் அடுத்த கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கையை துவக்கி, தற்காலிக வகுப்பறைகளில் பாடங்களை நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கல்லுாரிகளில் 2வது 'ஷிப்ட் '

15,000 மாணவர்களுக்கு 'சீட்'தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், பல்வேறு படிப்புகளுக்கு அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். அதாவது, 100 இடங்கள் மட்டுமே உள்ள ஒரு படிப்புக்கு, 2,000 மாணவர்கள் கூட விண்ணப்பிக்கின்றனர். அதுபோன்ற பாடங்களுக்கு, இந்தாண்டு முதல், 15,000 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் வகையில், இரண்டாம் பாடவேளை அதாவது இரண்டாவது 'ஷிப்ட்' முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை கூடுதலாக்கவும், 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sangarapandi
மார் 23, 2025 09:54

மதுரை மாவட்டம் பேரையூர் அல்லது சேடபட்டியில் அரசு கல்லூரி அமைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டுகிறேன் .


Subburamu Krishnasamy
மார் 20, 2025 19:57

Basic amenities are lacking in many Agricultural Colleges statarted by TNAU. Teachers were not recruited to TNAU after 2014. More than 40 percent of the teaching staff post is kept vacant and it is managed by Teaching Assistants on consolidated salary. Affiliated colleges, Agricultural courses in deemed universities quality is very poor. In general educational system is completely downgraded starting from primary education to doctoral research degrees. It is better to develop the existing colleges, rather than starting new colleges


KavikumarRam
மார் 20, 2025 11:26

இன்னும் இருக்கிற ஒரு வருசத்துல இவனுங்க .... அடுத்த கொள்ளைக்கு தயாராகிட்டானுங்கன்னு சொல்லுங்க.


பெரிய ராசு
மார் 20, 2025 07:17

மொதல்ல இருக்கிற பல்கலைக்கழகத்திரு பணம் கொடுத்து காப்பத்தனுங்கடா கபோதிக்கல


சமீபத்திய செய்தி