உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்; போலீசார் விசாரணை

கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தல்; போலீசார் விசாரணை

கரூர்; கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு; கரூர் மாவட்டம் அம்மாபட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தாந்தோன்றி மலையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கம் போல் கல்லூரி செல்ல பஸ் ஏறிய அவர், பொன்நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி உள்ளார். பின்னர், சக மாணவிகள் சிலருடன் சேர்ந்து கல்லூரி நோக்கி நடந்து சென்று கொண்டிருத்நார். அப்போது கார் ஒன்றில் வந்த வாலிபர் மாணவியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளார். என்ன நடக்கிறது என்பதை அறியாத மாணவி, பயத்தில் கத்தினார்.அபயக்குரலைக் கேட்ட சக மாணவிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கடத்தல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
மார் 10, 2025 20:12

தமிழகத்தில் சட்டம் ஒழுங்காக இருக்கிறது என்று சில நாட்களுக்கு முன்புதான் யாரோ ஒரு திமுக அமைச்சர் கூறினார். இதுதான் அந்த ஒழுங்கா...? அண்ணா பல்கலையில் பாலியல் சம்பந்தப்பட்ட யார் அந்த சாரே இதுவரை தெரியவில்லை. இப்பொழுது யார் அந்த கடத்தல் காரில் வந்தவர்கள்?


Iniyan
மார் 10, 2025 19:46

இதுவும் அந்த சாரா?


Mecca Shivan
மார் 10, 2025 18:38

மக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா அல்லது சட்டம் நம்மை ஒன்றும் செய்யாது என்ற என்னமா ? இது தனிப்பட்ட குற்றமாக இருப்பின் சட்டம் ஒழுங்கை குறை சொல்வது கூடாது .. அதே சமயத்தில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றம் இழைத்தவரை சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை கொடுப்பார்கள் என்றால் பாராட்டுக்கும் உரியவர்களாவர்


V. Nagasubramanian
மார் 10, 2025 18:23

இன்றைய கடத்தல்/பாலியல் சீண்டல் /கொலை செய்திகள் இத்துடன் முடிவடைந்தன நாளைய செய்திகள் நாளைய வணக்கம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை