நெற்பயிருக்கு இழப்பீடு வழங்கப்படும்
சென்னை: தமிழக வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி: வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, அனைத்து அரசு துறைகளும் தயார் நிலையில் உள்ளன. புயல் உருவாவதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. நிவாரண முகாம், மக்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.