உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு: தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்கிறது தமிழக அரசு

ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு: தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்கிறது தமிழக அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களும் ' டெட் ' தேர்வில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில், 1.75 லட்சம் பேருக்கு மேலானவர்கள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவதை, உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கி உள்ளது. இதற்கு தமிழகத்தில் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். டி.ஆர்.பி., மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், மீண்டும் எதற்காக ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டும்; தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி இருந்தன.இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டி ஒன்றில், ' தீர்ப்புக்கு எதிராக அச்சமடைய வேண்டாம் என அரசு சார்பில் தெரிவித்தோம். தீர்ப்பு வந்ததும் வெளிநாட்டில் இருந்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். வார்த்தையாக மட்டும் அல்லாமல் சட்ட ரீதியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சட்ட ரீதியாக போராடும்,' எனக்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

அப்பாவி
செப் 12, 2025 07:10

மாணவர்களுக்கே தேர்வு கட்டாயமில்ல. இதுல ஆசிரியர்களுக்கு எதுக்கு தேர்வு? நேற்றைய மாணவன் இன்னிய ஆசிரியர். இன்னிய மாணவன் நாளைய ஆசிரியர். தேர்வெல்லாம் வேஸ்ட். ஒழுங்கா படிக்கிறவன் அமெரிக்கா ஆஸ்திரேலியான்னு போய் அங்கே உழைச்சு முன்னேறி செட்டிலாயிடுவான்.


Kasimani Baskaran
செப் 12, 2025 04:09

யார் வேண்டுமானாலும் ஆசிரியராக இருக்கலாம் என்பதுதானே திராவிடக்கோட்பாடு - அதற்க்கு ஏற்ப நடந்து கொள்கிறார்கள்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
செப் 11, 2025 22:40

எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை "தேர்வு சுடலையின் மைன்ட் வாய்ஸ்


ஆரூர் ரங்
செப் 11, 2025 22:26

துண்டு சீட்டைப் பார்த்து தேர்வு எழுத விட்டால் ஓகே வா? இப்படிக்கு விடியல்.


Ragupathy
செப் 11, 2025 21:25

நம்பர் ஒண்ணுங்கறானுக...ஆனா நீட்...டெட் ...னா நடுங்கறானுக...மத்த மாநிலம் எல்லாம் எழுதறானுக....இவனுக முதலிடம்னு சொல்லிட்டு ஏன் நடுங்குறானுங்க... உண்மையில் ரொம்ப மோசமான இடத்தில் தமிழகம்...


N. Ramachandran
செப் 11, 2025 21:24

ஒங்கோலார், சுடலையார், ரொம்பவே வேகமா அப்பீல் செய்ய அறிவுறுத்தல், காரணம் டீச்சர்ஸ் ஓட்டு 2026ல் வேணுமே... அது தான் காரணம்.... என்னே சுறுசுறுப்பு...வெளங்கிடும்.....


Mohanakrishnan
செப் 11, 2025 21:15

படித்தவர்கள் மற்றும் அறிவாளிகள் ஆசிரியர்களாய் பணிபுரிந்த காலம் மாறி போய் தமிழ்நாட்டில் 40 வருடங்கள் ஆகிறது காசு கொடுத்தால் ஆசிரியர் அதிக காசு கொடுத்தால் கேட்ட இடத்தில் ஆசிரியர் வேலை. ஆனால் அடி மாடாய் இருக்க வேண்டும் அரசுக்கு...


Sundar R
செப் 11, 2025 20:42

தமிழகத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு, தமிழகத்தை ஆட்சி செய்கிறதா? அல்லது சென்னை உயர்நீதிமன்றமும், டெல்லி உச்சநீதிமன்றமும் ஆட்சி செய்கிறதா? தமிழக மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த இந்த திமுக அரசு ஒரு டம்மி பீஸா? அல்ப சொல்ப விஷயத்திற்கெல்லாம், முடிவெடுக்கத் தெரியாத திமுக அரசு தமிழக மக்களின் மத்தியில் நகைப்புக்குரியதாக இருக்கிறதே.


தமிழ்வேள்
செப் 11, 2025 20:17

மாணவர்களுக்கு நடத்த வேண்டிய பாடங்களை தினமும் படித்தல்,பாடக் குறிப்பு எழுதுதல் என வாத்தியாருக்கு படிக்க வேண்டிய வேலைதானே தினமும்? டெட் தேர்வுக்கான போர்ஷன்கள், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்டூ வரையிலானவை மட்டுமே.. மாணவர் உளவியல், கற்பித்தல் முறைகள் போன்றவற்றை இவர்கள் பிஎட் எம்எட் ல் படித்தவை மட்டுமே.. போதாக்குறைக்கு பெரும்பாலான வாத்தியார்கள் எம்ஃபில் படித்தவர்கள் கூட.. தாங்கள் படித்ததை மீண்டும் ஒருமுறை மீளப் படிக்கப் போகிறார்கள் அவ்வளவுதானே? இதற்கு ஏன் பயமும் சோம்பேறித்தனமும்.. கற்றல் & கற்பித்தல் செயல்பாடு அற்ற/ தெரியாத வாத்தியார் அந்த வேலைக்கு லாயக்கே இல்லாதவர்..


GMM
செப் 11, 2025 20:17

திமுகவிற்கு ஏற்ற நீட், டெட் தீர்வு இல்லை என்றால் மக்களை தூண்டுவர். சட்ட பேரவை மசோதாவை கவர்னர் கட்டாயம் ஏற்க வேண்டும் இல்லை என்றால், அது தனக்கு தானே ஒப்புதல் அளிக்கும் என்பது எவ்வளவு விபரீத தீர்வு. சாதாரண கிளார்க் முதல் உச்ச நீதிமன்றம் வரை கால நிர்ணயம் இல்லை.? கவர்னர், ஜனாதிபதிக்கு மட்டும் கால கெடு. தேர்தலுக்கு முன் கட்சிகள் மக்கள் நல கொள்கையை, கால நிர்ணயம் செய்து சமர்பிப்பது இல்லை. ஏன்? மாநில கவர்னர் ஒப்புதலுக்கு மட்டும் கால கெடு. நீதி இருபக்கம் சம நிலையில் இருக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை