மேலும் செய்திகள்
நீதிமன்ற உத்தரவு மீறல் நடவடிக்கை கோரி வழக்கு
22-Oct-2024
மதுரை: 'விருதுநகரில் அனுமதி இன்றி வைத்ததாக பறிமுதல் செய்த பாரத மாதா சிலையை, பா.ஜ.,வினரிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டுள்ளது.விருதுநகர் சூரக்குண்டு அருகே மாவட்ட பா.ஜ., அலுவலகம் உள்ளது. இவ்வலுவலகம் முன் மக்களுக்கு தெரியும் வகையில், பாரத மாதா கல் சிலை நிறுவப்பட்டது. ஆனால் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாக கூறி வருவாய் துறை, போலீசாரால் அந்த சிலை அகற்றப்பட்டது.இதையடுத்து, முன்னறிவிப்பின்றி பட்டா இடத்திற்குள் நுழைந்து, பாரத மாதா சிலையை எடுத்து சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சிலையை திரும்ப ஒப்படைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி, விருதுநகர் மாவட்ட பா.ஜ., நிர்வாகி ராஜகோபால், உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாரத மாதா சிலையை, பா.ஜ.,வினரிடமே ஒப்படைக்க விருதுநகர் கலெக்டருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
22-Oct-2024