உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெக மாநாட்டு திடலில் பரபரப்பு; கொடிக்கம்பம் சரிந்து விபத்து

தவெக மாநாட்டு திடலில் பரபரப்பு; கொடிக்கம்பம் சரிந்து விபத்து

மதுரை: மதுரை பாரபத்தியில் நடக்கவுள்ள த.வெ.க., மாநாட்டில் இன்று கொடிக்கம்பம் நிறுவும் போது சரிந்து விழுந்ததில் கார் சேதம் அடைந்தது.மதுரை பாரபத்தியில் நாளை (ஆக., 21) தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று மாநாட்டு திடலில் வைக்கப்பட்டிருந்த 100 அடி கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததில் கார் நொறுங்கியது. காரின் உள்ளே யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கொடிக்கம்பம் விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9ugzupaf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இது தொடர்பாக கட்சி நிர்வாகி நிர்மல் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புடன் கொடிக்கம்பம் நாட்டும் பணி மேற்கொண்ட போது கிரேனின் பெல்ட் தாங்காததால் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இது ஒரு சிறிய விபத்து. இந்த விஷயத்தை பெரிதுபடுத்த தேவையில்லை. மாற்று ஏற்பாடு தலைமையுடன் பேசி முடிவெடுக்கப்படும். ஏற்பாடு பணிகளில் எந்தத் தொய்வும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sundaran
ஆக 20, 2025 19:36

கூத்தாடிகளுக்கு காவடி தூக்கினால் இப்படித்தான்


Ramesh Sargam
ஆக 20, 2025 19:19

விழுந்தது பெரிய கம்பம். ஆனால் கூறுவது இது ஒரு சிறிய விபத்து. நல்லவேளை எந்தவித உயிரிழப்பும் இல்லை. உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால்....? காசு கொடுத்து சரிகட்டியிருப்பார்கள்.இதுவரை இந்த கட்சி எந்தவித தேர்தலிலும் போட்டியிடவில்லை.ஆனால் போக்கு சரியில்லை. போக்கை திருத்திக்கொள்ளவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை