உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொகுதி மறுவரையறையால் வட மாநிலங்களுக்கே பலன்: சொல்கிறார் சிதம்பரம்

தொகுதி மறுவரையறையால் வட மாநிலங்களுக்கே பலன்: சொல்கிறார் சிதம்பரம்

சென்னை: '' மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடந்தால், வட மாநிலங்கள் தான் பலன் பெறும். அங்கு தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்,'' என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது: நாட்டில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை கிடையாது. முக்கியமாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக்கொள்கை தான் அமலில் உள்ளது.அலுவல் மொழி, கற்பிக்கும் மொழி அனைத்தும் ஹிந்தியில் தான் உள்ளது. இதற்கு அடுத்து வேறு மொழி பயன்படுத்தப்படுகிறது என்றால், ஹிந்திக்கு நெருக்கமான சமஸ்கிருதம் தான் கற்பிக்கப்படுகிறது. வெகு சில பள்ளிகளில் மட்டும் தான், ஆங்கிலம் பேசத் தெரிந்த ஆசிரியர்கள் உள்ளனர். தமிழகத்தில் மத்திய அரசு நடத்தும் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இங்கு ஆங்கில வழியில் தான் பாடம் கற்பிக்கப்படுகிறது. அடுத்து ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் தான் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த பள்ளிகளில், மும்மொழிக் கொள்கை கிடையாது. 100 ஆண்டுகளுக்கு முன்பு, மஹாத்மா காந்தி துவக்கிய 'தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார சபை' உள்ளது. இங்கு லட்சக்கணக்கான மாணவர்கள் தாங்களாக விரும்பி ஹிந்தி கற்கின்றனர். இரு மொழிக் கொள்கை சிறந்தது தான். அதில் வெற்றியும் பெற்றுள்ளோம்.2026 க்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதனைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறையும், அதனைத் தொடர்ந்து தொகுதிகளின் எண்ணிக்கையிலும் மாற்றம் நடக்கும். தற்போது, மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை நடந்தால், தென் மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 103 ஆக குறையும். தற்போது 129 உள்ளது. 26 தொகுதிகளை இழக்க வேண்டி இருக்கும். ஆனால் உ.பி., பீஹார், ம.பி., மற்றும் ராஜஸ்தான் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களுக்கு பலன் கிடைக்கும். அங்கு தொகுதிகளின் எண்ணிக்கை உயரும். தென் மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உளளது. ஆனால், வட மாநிலங்களில் இதற்கு இன்னும் 10 -15 ஆண்டுகள் ஆகும். 129 எம்.பி.,க்கள் கொண்ட தென் மாநிலங்களின் குரல் பார்லிமென்டில் எதிரொலிக்கவில்லை. எம்.பி.,க்கள் எண்ணிக்கை 103 ஆக குறைந்தால் நிலைமை மோசமாகும். இவ்வாறு சிதம்பரம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

பேசும் தமிழன்
மார் 08, 2025 23:51

அப்போ எதற்க்காக கான் கிராஸ் கட்சி ஆட்சியில்... அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தீர்கள்? ஆனால் அப்படி செய்ய கூடாது என்று தடுத்து நிறுத்தியது பிஜெபி கட்சி... ஆனால் இப்போது நீங்கள் நீலி கண்ணீர் வைக்கிறீர்கள் !!!!


orange தமிழன்
மார் 08, 2025 22:36

இவர் இன்னுமா இருக்கிறார் அரசியலில்.


சிட்டுக்குருவி
மார் 08, 2025 22:00

உங்கள் மொழியை பற்றிய விவாதம் உங்களுடைய புரிதலில் உள்ள குறைபாட்டை காட்டுகிறது.உங்களுக்கு எல்லா அறிவாற்றலும்,திறமையும் இருந்தும் அதற்குரிய அந்தஸ்து கிடைக்கவில்லை என்பதை நீங்கள் அறியவில்லை.நீங்கள் ஹிந்தியில் புலமை பெற்று இருந்திருந்தால் இந்தியா நாட்டின் பிரதமர் அந்தஸ்துக்கு உயரபெற்றுப்பீர்கள்.பிரதமர் மோடி தமிழ் மக்களின்அறிவு திறன்மீது அபரீத மரியாதையும்,நம்பிக்கையும் வைத்துள்ளார் என்பது யாவரும் அறிந்ததே.அவருடைய எண்ணங்கள் எல்லாம் உலகமே போற்றும் தமிழர்களின் திறமை இந்தியாவிர்க்கு பெருமளவில் உயர்வை தரும் என்பதால் ,நீங்கள் இழைந்த வாய்ப்புகளை மற்ற தமிழர்களும் இழந்துவிட கூடாது என்பதால் ,இந்தியாவின் மொழிகளில் ஒன்றை கூடுதலாக கற்றால் தமிழர்களின் திறமையான சேவை நாடாளவில் பறந்து கிடைத்து நாடு பலவகையிலும் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது என்றறிந்து எடுக்கப்பட்டதே முமொழிகொள்கை.நீங்கள் நன்கு படித்த சிறந்த சிந்தனை உள்ள ,மற்ற அறிவிலிகளை வழிநடத்தும் திரமையுள்ளவர்,அறிவிலிகளை பின்தொடர்ந்து அறிக்கை விடலாமா?சிந்தித்து செயல் படுங்கள்.ஒரு மனிதனுடைய சிறப்பு அம்சங்களே உண்மையும்,நேர்மையும்தான்.இவை இரண்டும் இல்லையென்றால் அவன் ஒரு மனிதனாக மதிக்கபடமாட்டான்.அறிந்து செயல்படுங்கள்.உயர்வுபெருவீர்கள்.


sankaranarayanan
மார் 08, 2025 21:17

பசிக்கு எப்போதுமே ஒன்று பண பசி இல்லையேல் அதிகாரப்பசி அல்லது ஆட்சி பசி வாழ்நாள் முழுவதும் பசிக்கு எம்.பி. ஆகவே இருக்க வேண்டும் நன்றாகவே மக்கள் பணத்தைவாழ வேண்டும் லண்டலில் முதலீடு செய்ய வேண்டும்


Nagarajan S
மார் 08, 2025 20:38

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இவர் நிதி அமைச்சராக இருந்த போது தான் அனைத்து மாநிலங்களிலும் இந்தி கட்டாயமாக படிக்க வேண்டும் என்று 70 தீர்மானங்களை இயற்றியதாக கூறுகிறார்களே அதற்கு இவரின் பதில் என்ன?


Krishna Gurumoorthy
மார் 08, 2025 19:55

இவருக்கு பொய் பேசுவது அல்வா சாப்பிடுவது போல


B N VISWANATHAN
மார் 08, 2025 19:36

இவர் தான் கோமா ல இருந்து வந்தார் ன்னு பார்த்தா, அவரோட மகன் காணவே காணோம்


சிட்டுக்குருவி
மார் 08, 2025 19:28

சட்ட நிபுணர் மத்திய மந்திரி யாக பத்து வருடங்கள் நீங்களே பொய்களை அவிழ்த்து விடலாமா?The Constitution Thirty-first Amendment Act, 1973 பாரா 2 என்ன சொல்கிறது என்று மக்களுக்கு தெரிவிப்பீர்களா? மருவரையரை என்று வரும்போது எந்த காரணத்தினாலும் எந்த ஒரு மாநிலத்தின் தற்போதுள்ள பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கபடகூடாது என்று இருப்பது தாங்கள் அறியாததா? மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை பத்து வருடங்களுக்கு ஒருமுறை ஜனத்தொகை கணக்கிட்டு அதற்கேற்றாற்போல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்படவேண்டும் என்ற சட்டம் நீங்கள் அரியாததா? நீங்கள் அரசியலுக்காக கூட தங்கள் தங்களின் சட்ட நிபுனவத்தை துறந்து மக்களின் மத்தியில் தரம் தாழுந்து விடக்கூடாது என்பதே என் நோக்கம்.நீங்கள் மற்றவர்களை வழிநடத்தவேண்டியவர்கள் .அறிவிலிகளின் பின் பின்தொடர்பவர் அல்ல.மறந்துவிடாதீர்கள்.


கிங்
மார் 08, 2025 18:33

தென் மாவட்டங்களில் காங்கிரஸை விட பாஜகவிற்கு தான் அதிக வெற்றி கிடைத்துள்ளது...கவலைப்பட வேண்டியது பாஜக தான்... ஆந்திரா தெலங்கானா கர்நாடகா...அப்புறம் பக்கத்துல இருக்குற ஒடிசா..கூட்டி கழித்து பார்த்தால் தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவிற்கு தான் செல்வாக்கு அதிகம்... இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் யாருடைய கூட்டணி இல்லாமல் தனித்து நிற்கட்டும்..யார் அதிக ஓட்டுக்கள் வாங்குகிறார்கள் என்று பார்ப்போம்.. காங்கிரஸ் கட்சி திமுக அதிமுக முதுகில் சவாரி செய்யாமல் தனித்து போட்டியிட வேண்டும்..நான் திமுக ஆதரவாளன் தான்.. எங்கள் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் கட்சிக்கே எம்பி சீட் ஒதுக்கப் படுகிறது...இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் திமுக கிளை பொறுப்பில் இருந்தவர்கள் மாற்றுக் கட்சிக்கு செல்கின்றனர்..ஓட்டு சதவீதம் பெருமளவில் குறைந்துள்ளது..


K.Ramakrishnan
மார் 08, 2025 18:24

இதைச் சொன்னால், புரிந்து கொள்ள முடியாத அறிவாளிகள் தான் பா.ஜ.வில் இருக்கின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை