உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டுமானம் இரு நடிகர்களின் பங்களாக்கள் இடிக்கப்படுமா?

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டுமானம் இரு நடிகர்களின் பங்களாக்கள் இடிக்கப்படுமா?

மதுரை,:சினிமா நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா கொடைக்கானலில் அனுமதியின்றி, விதி மீறி பங்களாக்கள் கட்டுவதாக தாக்கலான வழக்கில், 'சீல்' வைக்க, கட்டடத்தை அகற்ற மேல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பு தெரிவித்தது.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு முகமது ஜூனைது தாக்கல் செய்த பொது நல மனு:கொடைக்கானல், வில்பட்டி ஊராட்சி பேத்துறைப்பாறையில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹாவிற்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில், இருவரும் பங்களாக்கள் கட்டுகின்றனர். மலைப்பகுதியில் விதிகளை மீறி கட்டுமானம் மேற்கொண்டுள்ளனர். இதனால் இயற்கை பேரிடரின் போது, மண் அரிப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.இருவரும் நடிகர்கள் என்பதால், சட்ட விரோத கட்டுமானம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. திண்டுக்கல் கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். அந்த மனுவை, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.தமிழக அரசு தரப்பில், 'பாபி சிம்ஹாவின் தாய் கிருஷ்ணகுமாரி பெயரில் கட்டடம் அமைக்க வில்பட்டி ஊராட்சியில், 2400 சதுர அடிக்கு, 2019ல் அனுமதி பெறப்பட்டது. அனுமதித்த அளவை விட கூடுதலாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 'பிரகாஷ்ராஜ் அனுமதியே பெறவில்லை. இரு தரப்பிற்கும் நோட்டீஸ் அனுப்பி, கட்டுமான பணி நிறுத்தப்பட்டுள்ளது. நகர் ஊரமைப்பு திட்ட விதிகள் பட சீல் வைக்க, கட்டடத்தை அகற்ற மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள், 'இதில் தற்போதைய நிலை குறித்து கலெக்டர், கொடைக்கானல் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜன., 10ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை