கூட்டுறவு சங்க செயலர் பஸ் மோதி பலி
திருநெல்வேலி:அரசு பஸ் மோதியதில் கூட்டுறவு சங்க செயலர் பலியானார்.திருநெல்வேலி மாவட்டம் பணகுடி மகேந்திரகிரியில் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்குள்ள கூட்டுறவு சங்கத்தின் செயலராக மூக்கையா, 53, பணியாற்றினார். தினமும் வள்ளியூரில் இருந்து டூ-வீலரில் பணிக்கு வந்து சென்றார். நேற்று காலை, திருநெல்வேலி-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் தண்டையார்குளம் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த அரசு விரைவு பஸ், அவரின் டூ-வீலர் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பணகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.